07/12/2022
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் பெரியார் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான 30வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு-2022,சென்ற 26-11-2022 அன்று பெரியார் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.இதன் கருப்பொருள் “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான சுற்றுசூழல் அமைப்பைப் புரிந்துக்கொள்வது”. இம்மாநாட்டில் நம் பள்ளியை சேர்ந்த மாணவ,மாணவிகள் தங்களது சிறப்பான படைப்புகளை சமர்ப்பித்து விளக்கவுரை அளித்துள்ளனர் .இதில் நமது பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவிகள் M .ஜீவிதா மற்றும் R .ராகவி ஆகிய இருவரும் மாநில அளவிலான தகுதித் தேர்விற்கு தேர்வாகியுள்ளனர் என்பதை அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.தேர்வான மாணவிகளுக்கு பள்ளியின் சார்பாக தலைவர்,செயலாளர்,இயக்குநர்கள்,முதல்வர் மற்றும் இருபால் ஆசிரியர்கள் அனைவரும் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.கலந்துகொண்ட அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.