07/06/2022
#உயர்கல்வி_அவசரம்_வேண்டாம்_மாணவர்களே...!
இன்ஷா அல்லாஹ் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் முடிவுகள் மிக விரைவில் வெளியாக இருக்கிறது.அனைத்து மாணாக்கர்களும் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற வாழ்த்துக்கள்.
அல்ஹம்துலில்லாஹ்....
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு முன்பைவிட அதிகமாக ஏற்பட துவங்கியுள்ளது.
பெற்றோர்களும் மாணவர்களும் மிக ஆர்வமாக உயர்கல்வி குறித்து ஆலோசிக்கின்றனர்.
ஆனால் எல்லோரிடத்திலும் ஒரு அவசரமும் பதட்டமும் நிறைந்திருப்பதை காண முடிகிறது.
பெரும்பாலான அழைப்புகளில் " சார்.
ரிசல்ட் வந்ததும் சீக்கிரம் போய் ஏதாவது காலேஜ்ல சேரனும் சார்...எந்த courseக்கு future நல்லா இருக்கும்னு சொல்லுங்க சார்.
எல்லா காலேஜ்- லயும் இந்த வருஷம் சீட் சீக்கிரமா முடிஞ்சுருமாம் சார். என் friends சொன்னாங்க.
பிரண்ட்ஸ் எல்லாம் வேற வேற காலேஜ்ல சேர போறாங்க ...." என மாணவர்களும் அவர்களை விட அதிகமாக பெற்றோர்களும் அவசரப் படுவதை அதிகமாக காண முடிகிறது.
அன்பார்ந்த பெற்றோர்களே!
மாணவச் செல்வங்களே ...
தயவுசெய்து உங்களின் கல்லூரி சேர்க்கை விஷயத்தில் அவசரம் காட்டாதீர்கள்.
காரணம்,
பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி சில நாட்கள் கழித்த பின்புதான்
அரசு கலை அறிவியல் , பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கை குறித்த அறிவிப்புகள் வெளியாகும்.
அதற்குள் தனியார் கல்லூரிகளில் அவசரப்பட்டு முன்பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.
இன்ஷா அல்லாஹ்....
நீங்கள் தகுதியான மதிப்பெண்கள் எடுக்கும் போது உங்களுக்கு அரசுக் கல்லூரிகளில் இடம் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
அதற்குள் பதட்டத்தோடு அவசர அவசரமாக , குறிப்பாக பக்கத்து வீட்டு மாணவர் அல்லது உங்களின் வகுப்புத் தோழர் / தோழியர் ஏதோ ஒரு தனியார் கல்லூரியில் சென்று முன்பணம் செலுத்தி விட்டார் என்பதற்காக நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை.
மீண்டும் நினைவூட்டுகிறேன்....
கொரோனா பெருந்தொற்று முடிந்து இயல்பு நிலை துவங்கியுள்ள இச்சூழலில் தயவுசெய்து பொறுமையாக நிதானமாக உயர்கல்வியை தேர்ந்தெடுங்கள்.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு உங்கள் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் துணை நிற்கப்போகும் உயர்கல்வி ( Higher Education) குறித்து அவசரம் காட்ட தேவையில்லை.
காலம் நிறைய இருக்கிறது. நிதானமாக ஆராய்ந்து தேர்வு செய்யலாம்.
ஏனெனில் அவசரப்படுதல் எப்போதும் குழப்பங்களையே அதிகரிக்கும்.
நிதானம் சரியான முடிவை நோக்கி நகர்த்தும்.
நிச்சயமாக பொறுமையாளர்களுக்கு அழகிய கூலி உண்டு.
அல் - அமீன் முஸ்லிம் மேல்நிலை பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் - அருப்புக்கோட்டை.