12/11/2025
*ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் முப்பெரும் விழா*
ஆழ்வார்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப்பள்ளியில் மரக்கன்று நடும் விழா பனை விதை நடவு செய்தல் விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா வரவேற்புரை நிகழ்த்தினார். கலைமாமணி விருது பெற்றவரும், பிரபல திரைப்பட இசை அமைப்பாளருமான ரமணி பரத்வாஜ் தலைமை தாங்கினார். அவர் பேசுகையில் "மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள இது நல்ல வாய்ப்பு. ஆசிரியர்கள் அவர்கள் திறமைகளைக் கண்டறிந்து ஊக்குவிக்க வேண்டும். இயற்கையை காப்பதில் முன்னோடிகளாக இருக்க வேண்டும். சிறிய குழந்தைகளான உங்களுடன் இருப்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்" என்றார். பசுமை முதன்மையாளரும் நல்லாசிரியருமான மாடசாமி முன்னிலை வகித்தார். பணி நிறைவு ஆசிரியர் நீலகண்டன், சமூக ஆர்வலர் கௌரி சுரேஷ், இயற்கை ஆர்வலர் முத்துக்குமார், இலக்கிய ஆர்வலர் பாரதி முத்துநாயகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மாணவி அஸ்மா இயற்கை வாழ்த்து பாடல் பாடினார். மாணவி சத்யா தொகுத்து வழங்கினார். உதவித் தலைமையாசிரியை பாகீரதி நன்றி கூறினார்.
விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கணேசன் மற்றும் நல்லாசிரியர் மாடசாமி சிறப்பாகச் செய்திருந்தனர். இயற்கை பாதுகாப்பு களப்பணியாளர் சுரேஷ், இன்னாசி, மற்றும் ஆசிரியைகள் பாக்யலட்சுமி, லிங்கேஸ்வரி, சண்முகசுந்தரி, பஷீராபானு, மூக்கம்மாள், பிரியா கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.