09/07/2024
*அஸ்ஸலாமு அலைக்கும்*
*🎓அல் ஹிதாயா இணைய வழி அரபிக் கல்வி வழங்கும்🎓*
🍁 *வரலாற்றில் ஓர் நிகழ்வு*🍁
*🌷 நீங்களும் படித்து பயன் பெற்று மற்றவர்களுக்கும் பகிர்ந்து நன்மையை அடைந்து கொள்ளுங்கள் 🌷*
அ(த்)தாவு இப்னு அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
ஒரு நாள் நானும், இப்னு உமர் மற்றும் உபைத் இப்னு உமைர் ( ரலி – அன்ஹுமா ) ஆகியோரும் அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்களைச் சந்திக்க அன்னையவர்களின் வீட்டிற்குச் சென்றோம்.
வீட்டின் வாசலில் நின்று கொண்டு மொத்தமாக ஸலாம் கூறி அனுமதி கேட்டோம்.
அப்போது என் குரலை கண்டு பிடித்து விட்ட அன்னையர் அவர்கள் *"உடன் வந்திருப்பவர்கள் யார்?"* என்று வினவினார்கள்.
அதற்கு, நான் *"என்னோடு இப்னு உமர் (ரலி) அவர்களும், உபைத் இப்னு உமைர் (ரலி) அவர்களும் வந்திருப்பதாகக்"* கூறினேன்.
அதைக் கேட்ட அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் *"உபைத் இப்னு உமைரே! உமது வரவு நல்வரவாகட்டும்! நீண்ட நாட்களாக நம்மை சந்திக்க வராததன் காரணம் தான் என்ன?"* என்று வினவினார்கள்.
அதற்கு, உபைத் அவர்கள் *"இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரே! இடைவெளி விட்டு சந்தித்தால் நேசம் அதிகமாகும் அல்லவா?"* அதுதான் காரணம் என்றார்கள்.
அப்போது, இப்னு உமர் (ரலி) அவர்கள் *"அன்னையே! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு தாங்கள் வாழ்ந்த வாழ்க்கையில் தங்களால் மறக்கவே முடியாத தருணம் ஏதேனும் உண்டா? அப்படியிருந்தால் எங்களுக்கு கொஞ்சம் சொல்லுங்களேன்!"* என்றார்கள்.
அதற்கு, அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள், *"அண்ணல் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களோடு வாழ்ந்த வாழ்க்கை முழுவதுமே மறக்க முடியாத தருணங்கள் தானே எனக்கு!"* என்று கூறி விட்டு,
*"என் மனதை நெகிழச் செய்த ஓர் நிகழ்வினை உங்களிடம் நான் பகிர்ந்து கொள்கின்றேன்!"* என்று கூறிய அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் தொடர்ந்தார்கள்,
*"அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் என்னோடு தங்கும் முறை உள்ள ஒரு நாள் இரவு என் வீட்டிற்கு வருகை தந்தார்கள். என்னோடு மிக நெருங்கி அமர்ந்தார்கள்.*
*பின்பு என்னிடம் 'ஆயிஷாவே! இன்றிரவு முழுவதும் என் இறைவனை நான் வணங்கிட விரும்புகின்றேன்! எனக்கு கொஞ்சம் அனுமதி தருவாயா?' என்று கேட்டார்கள்.*
*அதற்கு, நான் 'அல்லாஹ்வின் தூதரே! தங்களின் நெருக்கத்தை எவ்வாறு நான் விரும்புகின்றேனோ, அது போன்றே தங்களது விருப்பங்களையும் நான் விரும்புகின்றேன்! தாராளமாக இரவு முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள்' என்றேன்.*
*அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் எழுந்து, உளூ செய்து விட்டு வந்து தொழுகைக்காக தக்பீர் கட்டினார்கள்.*
*பின்பு நீண்ட நேரம் அழுதவர்களாக நின்றார்கள். அவர்களின் தாடியெல்லாம் நனையும் அளவு அழுதார்கள். அவர்களின் கண்ணீர் நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் தொடையையும் நனைத்தது.*
*தொழுது முடித்ததன் பின்னர், வலது புறமாக ஒருக்கணித்து அமர்ந்து, வலது கையை வலது தொடையின் மீது வைத்தவர்களாக அழுது கொண்டே இருந்தார்கள். அவர்களின் அழுகையால் வீடு முழுவதும் நனைந்து இருந்தது.*
*இதே நிலையில் ஃபஜ்ர் தொழுகைக்கான பாங்கும் விடுக்கப்பட்டது.*
*அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களைக் காணாத பிலால் (ரலி) அவர்களும் வீட்டிற்கு வந்து விட்டார்கள்.*
*அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களை அழுத நிலையில் கண்ட பிலால் (ரலி) அவர்கள் 'அல்லாஹ்வின் தூதரே எதற்காக தாங்கள் அழவேண்டும்? அல்லாஹ் தான் தங்களின் முன் பின் பாவங்களை மன்னித்து விட்டானே?' என கனிவோடு கேட்டார்கள்.*
*அப்போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் 'பிலாலே! நான் அல்லாஹ்விற்கு நன்றியுணர்வுள்ள அடியானாக இருக்க வேண்டாமா?' என்று கூறிவிட்டு, இப்போது தான் ஆலுஇம்ரானின் 190 மற்றும் 191ம் இறைவசனங்கள் இறக்கப்பட்டன.*
*("நிச்சயமாக, வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பிலும்; இரவும், பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன. அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும் தங்கள் விலாப் புறங்களில் (சாய்ந்து) இருக்கும் போதும் அல்லாஹ்வை (நினைவு கூர்ந்து) துதிக்கிறார்கள்; வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்தித்து, 'எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்; (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!' (என்றும் பிரார்த்தித்துக் கொண்டிருப்பார்கள். 03:190,191)*
*எவன் அந்த வசனங்களை ஓதியதன் பின்னர் அந்த இறைவசனத்தை சிந்திக்கவில்லையோ அவன் மீது நாசம் உண்டாகட்டும்!' என்று கூறினார்கள்.* என அன்னை ஆயிஷா (ரலி-அன்ஹா) அவர்கள் கூறினார்கள்.
(நூல்:ஸஹீஹ் புகாரி, தன்பீஹுல் ஙாஃபிலீன், பாபுத் தஃபக்குர்.)
📚📚📚📚📚📚📚📚📚📚 *படித்துக்கொண்டோ, வேலைக்கு சென்று கொண்டோ, வீட்டில் இருந்து கொண்டோ மார்க்கக் கல்வி பயில ஓர் அரிய வாய்ப்பு*
*(தமிழ் மீடியம்)*
🎓 *அல்ஹிதாயா இணையவழி அரபிக் கல்லூரி*🎓
*இஸ்லாமிய கல்வியில் மேலும் ஓர் அரிய முயற்சி*
🍁 *அஹ்லுஸ் சுன்னத் வல் ஜமா அத் கொள்கையிலான பாடத்திட்டம்*
💻 *இணைய வழி மூலம் பாடங்கள் நடைபெறும்*
🛑 *2024-2025 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெறுகிறது*
--------------------------------------
🔵 *வகுப்புகள்*
*2024 ஜூலை-முதல்வாரம் துவங்கப்படும்* இன்ஷா அல்லாஹ்
🔴 *சிறப்பு பாடத்திட்டம்*
👉 *குர்ஆன், தஃப்ஸீர்*
👉 *ஹதீஸ்*
👉 *ஃபிக்ஹ்*
👉 *அகீதா*
👉 *இஸ்லாமிய வரலாறுகள்*
👉 *தஜ்வீத் சட்டங்கள்*
👉 *இஸ்லாமிய அடிப்படைக் கல்வி*(BIS)
👉 *BA. அரபிக் மற்றும் அப்சல் உலமா பாடத்திட்டம் உள்ளடக்கியது*
💢 *தகுதி : 15 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்கவேண்டும்*
🌎 *தமிழகம் மற்றும் அயல்நாட்டில் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு நழுவ விடாதீர்...*
--------------------------------------
🖥️ *𝐅𝐨𝐫 𝐫𝐞𝐠𝐢𝐬𝐭𝐫𝐚𝐭𝐢𝐨𝐧*
இந்த தகவலை பூர்த்தி செய்து கீழ்காணும் எண்ணுக்கு வாட்ஸ்ஆப் செய்யவும்
======================
*NAME:*
*FATHER/GUARDIAN:*
*DOB & AGE:*
*MEDIUM :* TAMIL
*ADDRESS:*
*STATE:*
*COUNTRY:*
*PIN:*
*MOBILE NO:*
*WHATSAPP NO:*
-------------------
*MORE DEATAILS:*
𝐈𝐧𝐝𝐢𝐚
FOR MEN:
*+91 9486909786*
FOR GIRLS:
*+91 9715844786*