10/04/2026
அயர்லாந்தின் கேலிக் (ஐரிஷ்) மொழியில் தமிழ் மறை உலகப் பொதுமறை திருக்குறள் நூலை 2023 ஆண்டு மொழியாக்கம் செய்த கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்
அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வில் அயர்லாந்து தமிழ்க் கல்விக் கழகம் கலந்து கொண்டு
மலர் அஞ்சலியையும்
நீத்தார் பெருமை அதிகாரத்திலிருந்து
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்.
(குறள் எண் -28)
திருக்குறளை ஓதி புகழ் வணக்கம் செய்தோம்.
கவிஞர் கேப்ரியல் ரோசன்ஸ்டாக்
அவர்களின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டோம்.
திருக்குறள் மொழியாக்கப் பணி மற்றும் வெளியீட்டு விழா நடந்த உடன் ஐயா அவர்களுடன் பேட்டி எடுக்க விரும்பி ,அவர்களின் அனுமதி பெற்று திருக்குறள் பற்றி அவரது பார்வையை தொகுத்தோம்.
காணொளிகள் பின்வருமாறு:
பகுதி 1
https://youtu.be/YONA-fOhrc0?is=2fFdrhBByBpT7OBq
பகுதி 2
https://youtu.be/XFeOWvexHEI?is=UL5M2IXQSWT9JGcm