14/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் வலயரீதியில் நடைபெற்றுவருகின்றன. இன்று (14.06.2026) பேர்ண், சொலத்தூண், பிறீபேர்க் ஆகிய மாநில மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் தூண் விளையாட்டுத்திடலில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் 280 இற்கும் மேற்பட்ட பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்களும் இளம் பெற்றோரும் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்கள் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்திவருகின்றனர்.
இம் மெய்வல்லுனர் போட்டியில் இளம் பெற்றோரின் பங்களிப்பு போற்றுதற்குரியது.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
*தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து*
06/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் வலயரீதியில் நடைபெற்றுவருகின்றன. இன்று (06.06.2026) வோ, வலே, ஜெனீவா, நொசத்தல் ஆகிய மாநில மாணவர்களுக்கான மெய்வல்லுனர் போட்டிகள் லவுசான் விளையாட்டுத்திடலில் நடைபெற்றுவருகிறது.
இப்போட்டியில் கூடுதலான பிள்ளைகள் கலந்துகொள்கின்றனர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோரும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளை நடாத்திவருகின்றனர்.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பெற்றுள்ளன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
02/06/2026
தமிழ்க் கல்விச்சேவையினால் ஆண்டுதோறும் நடாத்தப்பெறும் மெய்வல்லுனர் போட்டிகள் இவ்வாண்டும் சுவிற்சர்லாந்தின் அனைத்து மாநிலங்களினதும் தமிழ்ப்பள்ளிகளை உள்ளடக்கி 6 வலயங்களாக நடாத்தப்படுகின்றன.
சூரிச், சப்கவுசன் மாநிலங்களுக்கான போட்டிகள் வின்ரத்தூர் விளையாட்டுத் திடலிலும் ரிசினோ, லுட்சேர்ன், சுக், சுவைட்ஸ், ஊரி, கிளாறுஸ், நிட்வால்டன் மாநிலங்களுக்கான போட்டிகள் ஊரி விளையாட்டுத் திடலிலும் நேற்று முன்னாள் (31.05.2026) சிறப்பாக நடைபெற்றன.
இதில் கூடுதலான பிள்ளைகள் கலந்துகொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ்க் கல்விச்சேவையின் விளையாட்டுத்துறையின் ஒழுங்குபடுத்தலில் மாநில இணைப்பாளர்கள், தமிழ்ப்பள்ளி முதல்வர்கள் வழிகாட்டலில் பழைய மாணவர்கள் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டு மேற்கொள்ள, ஆசிரியர்களும் இளம் பெற்றோரும் அவர்களுக்குத் துணையாக இருந்து போட்டிகளைச் சிறப்பாக உரிய நேரத்தில் நடாத்தி முடித்தனர்.
உணவகம் மற்றும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்வுகளும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தன.
நிறைவில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பெற்றன.
போட்டிகளில் பங்குபற்றிய அனைத்துப் பிள்ளைகளுக்கும் அவர்களை ஊக்குவித்துப் பங்குபற்றவைத்த பெற்றோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். உதவிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
30/05/2026
வல்லாட்டப் போட்டி (TESS CHESS TOURNAMENT)
தமிழர்களின் மரபுவழி விளையாட்டான வல்லாட்டப் போட்டி தமிழ்க் கல்விச்சேவையினால் முதன்முறையாக இன்று நடாத்தப்பெறுகிறது. வல்லாட்டம் தமிழர்களால் உலகிற்கு வழங்கப்பெற்ற விளையாட்டு எனக் கொள்ளப்பெறுகிறது. இவ்விளையாட்டு அறிவையும் சிந்தனைத்திறனையும் மேம்படுத்துகிறது.
இன்று நடைபெறும் போட்டியில் பல்வேறு வயதுப்பிரிவையும் சேர்ந்த 84 சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் பங்குபற்றுகின்றனர்.
இவ்விளையாட்டில் சிறப்புத்தேர்ச்சி பெற்றவரும் பல ஆண்டுகளாக பல்வேறு நாடுகளில் வல்லாட்டப் போட்டிகளை நடாத்திவருபவரும் உலகத் தமிழர் சதுரங்கப்பேரவையின் நிறுவனருமான திரு. கந்தையா சிங்கம் அவர்கள் இப்போட்டியின் மதியுரைஞராகவும் முதன்மை நடுவராகவும் உதவுகிறார். இவருடன் இணைந்து தமிழ்க் கல்விச்சேவையின் இளையோர் செயலணியினால் இப்போட்டி தொடர்பான அனைத்துப் பணிகளும் மேற்கொள்ளப்பெறுகிறது.
இப்போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், இது சிறப்பாக நடைபெற உதவிவரும் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
09/05/2026
தமிழ்க் கல்விச்சேவையின் பேர்ண் பும்பிளிச் தமிழ்ப்பள்ளியின் முதல்வராகவும் பேர்ண் தமிழ்ப்பள்ளியின் துணை முதல்வராகவும் நீண்டகாலம் பணியாற்றிய திரு. சிறீதரன் நவரத்தினம் அவர்கள் இன்று (09.05.2026) இயற்கையெய்தினார் என்பதனை அறியத்தருவதுடன், அவரது ஆத்மா அமைதியடையத் தமிழ்க் கல்விச்சேவைக் குடும்பம் சார்பாகப் பிரார்த்திப்பதுடன் அவரது குடும்பத்தினதும் உறவுகளினதும் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து
27/04/2026
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து (TESS) நடாத்தும் முதல் சதுரங்கப் (வல்லாட்டப்) போட்டி 30ஆம் மே மாதம் 2026 நடைபெற உள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் நீங்கள் சதுரங்கப் (வல்லாட்டப்) போட்டிக்கு பதிவு செய்யலாம்.
The first chess tournament organized by Tamil Education Service Switzerland (TESS) will take place on 30 May 2026. You can register for the Chess Tournament using the followimg link.
https://forms.gle/KUrrzcG1877jeGQ7A
02/04/2026
மே 30 நாள் 2026 நடைபெறவுள்ள வல்லாட்டப் போட்டிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பதிவு செய்யுங்கள்
Register now using the following link for the chess tournament on 30th May 2026
https://forms.gle/KUrrzcG1877jeGQ7A
25/03/2026
சுவிற்சர்லாந்து தமிழ்க் கல்விச்சேவையினால் நான்காவது தடவையாக நடாத்தப்பெற்ற தமிழ் இளையோர் மாநாடு பேர்ண் மாநகரில் 21.03.2026 ஆம் நாள் சனிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது. காலை 10.00 மணியளவில் தொடங்கிய மகாநாட்டில் 80 வரையிலான இளையோர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.
இம்மாநாட்டில் முதன்மை உரைகளை:
சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் சீத்தா லட்சுமி,
அவர்களும்
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் விஞ்ஞானியுமான முனைவர் சபேசன் சிதம்பரநாதன்
அவர்களும் இணையவழியில் வழங்கினர்.
இளையோர் அமைப்புகள் பல இதில் கலந்துகொண்டு தமது நோக்கம், செயற்பாடுகளை விளக்கினர்.
குழு வேலைகளைத் தொடர்ந்து,
எதிர்வரும் காலங்களில் நடைமுறைப்படுத்த வேண்டிய செயற்பாடுகளும் அடையாளம் காணப்பட்டன. இவற்றுடன் இம் மாநாடு 16:30 மணியளவில் நிறைவெய்தியது.
தமிழ்க் கல்விச்சேவை சுவிற்சர்லாந்து