14/03/2021
*பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி INTJதலைவர் ,ISF மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பங்கேற்பு.*
தென் சென்னை மாவட்ட இந்திய மாணவர் முன்னணி சார்பாக எம்ஜிஆர் நகரில் இன்று காலை பொது மக்களுக்கு தாகம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ் எம் பாக்கர் அவர்கள் கலந்து கொண்டு பொது மக்களுக்கு தர்பூசணி மற்றும் பழசாறு வழங்கினார்.
உடன் தென் சென்னை மாவட்ட செயலாளர் முஹம்மது யூசுப் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் இந்திய மாணவர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அப்துர் ரஹ்மான் மற்றும் பைசல், தென் சென்னை மாவட்ட பொறுப்பாளர் ரியாஸ் எம்ஜிஆர் நகர் கிளை பொறுப்பாளர் சித்திக் மற்றும் எம்ஜிஆர் நகர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
14/03/2021
நடப்பாண்டு முதல் ,பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ், சித்தா, யுனானி, ஹோமியோபதி ஆகிய படிப்புகளில் சேரவும் நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றும் வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தமிழர்கள் இல்லாத ஒரு மருத்துவதுறையை உருவாக்க பாசிச பாஜக அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதை எதிர்த்து மாணவர்கள் அனைவரும் களமாட வேண்டும்.
மாணவர்களை பாதிக்கும் இதுபோன்ற செயல்களை இந்திய மாணவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!
#நீட்
07/03/2021
பெண் குழந்தை பிறந்தால் அதை நற்செய்தி என கூறும் மார்க்கம் இஸ்லாம்
உலகெங்கும் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை நீக்கி, அவர்கள் அனைத்துத் துறைகளிலும் தனி வாழ்விலும், பொதுவாழ்விலும் உரிமையும் பாதுகாப்பும் உள்ளவர்களாக வாழ்வதற்கு எண்ணற்ற கிளர்ச்சிகளைப் பெண்களே முன்நின்று நடத்தினர்; உரிமைகளும் பெற்றனர்.
அண்மைக் காலமாக இந்தியாவில் பல பகுதிகளிலும், தமிழ்நாட்டிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கும் தாக்குதலுக்கும் ஆளாகி பெரும் துன்பத்திலும், அவலத்திலும், கண்ணீரிலும் தவிப்பதுதான் இன்றைய நிலை ஆகும். கண்ணியத்தோடும், உரிமையோடும், பாதுகாப்போடும் பெண்கள் வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் நிலமையை ஏற்படுத்த உலக மகளிர் நாளில் உறுதி ஏற்போம்''
இந்திய மாணவர் முன்னணி
INDIA STUDENT FRONT - ISF
07/03/2021
இந்திய மாணவர் முன்னணிக்கு விருது !!
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
இதில் CAA எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களின் மத்தியில் போராட்டத்தை ஒருங்கிணைப்பு செய்த இந்திய மாணவர் முன்னணிக்கு விருது வழங்கப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முஸஹப் , அப்தூர் ரஹ்மான் , பைசல் மற்றும் ISF மாவட்ட நிர்வாகிகள் பெற்று கொண்டனர்.
05/03/2021
மே 13, 15ல் தேதிகளில் ரமலானை ஒட்டி சி.பி.எஸ்.இ தேர்வுகள் நடைபெற இருந்தன.
இதை கண்டித்து பல மாணவ இயக்கங்கள் தங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்தனர் மற்றும் சு.வெங்கடேசன் எம்பி அவர்கள் "ரமலானை ஒட்டி தேர்வுகள் நடைபெற கூடாது" என்று மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினார்.
இதனை தொடர்ந்து ரமலான் தேதிகளில் நடைபெறவிருந்த தேர்வுகளை மத்திய அமைச்சகம் தேதி மாற்றம் செய்துள்ளது.
இந்த முடிவை இந்திய மாணவர் முன்னணி வரவேற்கிறது!
25/02/2021
நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி முதலமைச்சர் அறிவிப்பு : இந்திய மாணவர் முன்னணி வரவேற்கிறது
கொரோனா நெருக்கடி காரணமாக தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நடப்பு கல்வியாண்டில் 9, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்கப்படும் என அறிவித்துள்ளார்.
மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி என்ற இந்த அறிவிப்பை இந்திய மாணவர் முன்னணி வரவேற்கிறது
இந்திய மாணவர் முன்னணி
தமிழ் நாடு
21/02/2021
சிபிஎஸ்இ 8ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் திருவள்ளுவர் புரோகிதர் போல் சித்தரிக்கப்பட்டதுள்ளதை இந்திய மாணவர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.
03/02/2021
பாஜக , இந்து முன்னணி பொதுக்கூட்டங்களுக்கு தமிழகம் முழுவதும் தடை விதிக்க வேண்டும் - இந்திய மாணவர் முன்னணி
02/02/2021
மாணவர்கள் முன்னேற்றம், மாணவர் நலன்
மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டம்,
மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்க்கும் வழிவகுத்து மார்க்க மற்றும் சமுதாய பணிகளில் 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது
இந்திய மாணவர் முன்னணி...!
02/02/2021
கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும்- இந்திய மாணவர் முன்னணி