10/05/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்றைய நாளில் நல்லாயன் ஆலயத்தில் சிரமதானப் பணியும், அதனைத் தொடர்ந்து ஒன்றிய சமையல் செயற்பாடும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.
இத்தகைய சேவை மனப்பாங்கு, சமூகப் பொறுப்புணர்வு எம் அனைவர் மத்தியிலும் காணப்பட வேண்டும்.
இவற்றின் சில பதிவுகள்.
👇👇👇👇
's_Union
's_Union
# Unity
10/05/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட மாணவர் ஒன்றியத்தின் 2026-2027 இற்கான புதிய நிர்வாகக் குழுவினர்.
_Union
20/02/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவில் கலைப்பிரிவில் கல்வி கற்று மன்னார் மண்ணிற்கு பெருமை சேர்த்த எம் சொந்தங்களிற்கு வாழ்த்துக்கள்.
💫🎊🎉💐
| | | | .
13/01/2026
"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" 🖋✒️
நேற்றைய தினம், எமது புதிய முதலாம் வருட மாணவர்களால்,
பெரிய பண்டிவிரிச்சான் பாடசாலையில் கல்வி பொதுத்தர சாதாரண தர மாணவர்களுக்கான
தமிழ் மற்றும் வரலாறு பாடங்களுக்கான பரீட்சை வழிகாட்டல் நிகழ்வு வெற்றிகரமாக இடம்பெற்றது.
இந்த நிகழ்விற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிய
பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள்
மற்றும் சிறப்பாக பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும்,
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட மாணவர் ஒன்றியம் சார்ந்த எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும், இப் பரீட்சை வழிகாட்டல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய உதவிய பல்கலைக்கழக மாணவர்களுக்கும்,
அதனை முன்னெடுத்து சிறப்பாக நடாத்திய மாணவர்களுக்கும்,
எமது நிர்வாகம் சார்ந்த நன்றிகள்.
📚✨
---
“Numbers and letters are the eyes of knowledge” 🖋✒️
Yesterday, our new first-year university Mannar Arts Students' Union - University of Jaffna successfully conducted an examination guidance programme for G.C.E. Ordinary Level students in Tamil and History at Periya Pandivirichchan School.
We extend our sincere gratitude to the school principal, teachers, and administrative staff for their valuable support, and to the students for their enthusiastic participation.
Our heartfelt thanks are also conveyed on behalf of the University of Jaffna – Mannar District Students’ Union.
Furthermore, we appreciate the efforts of the university students who helped organize this programme and those who actively carried out the sessions.
Our administration extends its special thanks to everyone involved.
📚✨ *Education is a shared responsibility* ✨📚
---
04/10/2025
#சிறுவர்-தின நிகழ்வு. 💥💫
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தின நிகழ்வினை இன்று மன்னார் தாழ்புபாடு வீதியில் அமைந்துள்ள அன்பு சகோதரர் இல்லத்தில் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது.
இதில் ஒன்றியத்தின் உறுப்பினர்கள், இல்லத்தின் சிறுவர்களும் கலந்து கொண்டனர்.
[https://maps.app.goo.gl/Hqw5vwgqtF13ZRub9]
28/09/2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் 2026ம் ஆண்டிற்கான
புதிய நிர்வாக உறுப்பினர்கள்.
08/09/2025
பிரதேச செயலகத்தால் பதிவு செய்யப்பட்ட உத்தியோகபூர்வ அமைப்பாக எம் மாணவர் ஒன்றியம்.❤️🥰💫🎊
இதுவரை காலமும் சாதாரணமான ஓர் மாணவர் அமைப்பாகக் காணப்பட்ட எமது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்டக் கலைப்பீட மாணவர் ஒன்றியமானது, இன்றிலிருந்து மாவட்ட செயலகத்தால் பதிவு செய்யப்பட்ட, அரச சார்பற்ற தனியார் நிறுவனமாக (NGO) இயங்கவுள்ளது.
இதற்கான அனுமதியையும், உத்தியோகபூர்வ சான்றிதழையும், மன்னார் மாவட்ட பிரதேச செயலகம் எமக்கு வழங்கியுள்ளது.
எம் ஒன்றியத்தினை பதிவு செய்வதற்கு உதவிய மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர், பிரதேச செயலக அதிகாரிகள் மற்றும் எமது ஒன்றியத்தை பதிவு செய்வதற்கு எம்மோடு இணைந்து செயற்பட்ட அனைத்து மாணவர்களுக்கும், வருட பிரதிநிதிகளுக்கும், குறிப்பாக எமது ஒன்றியத்தின் செயலாளர் மெல்சி, பொருளாளர் பிருந்திகா, ஒன்றியத்தின் பழைய மாணவி விதுசா மற்றும் நிதர்ஷன், எஜேக்கின் ஆகியோருக்கும் எம் ஒன்றியம் சார்ந்த நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 🙏🙏🩷
14/05/2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் கீரி கடற்கரையினைச் சுத்தம் செய்யும் சமூக வேலைத்திட்டமானது மன்னாரின் தனியார் நிறுவனமான OpenE நிறுவனத்தின் அனுமதியோடு சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இச் செயற்பாட்டினைத் தாமாகவே முன்வந்து நடைமுறைப்படுத்தி, சிறப்பாகத் திட்டமிட்டு, மிகச் சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தி செய்து முடித்த எம் ஒன்றியத்தின் செயலாளர் மெல்சி அவர்களுக்கும், அவரோடு இணைந்து பல்வேறு உதவிகளை வழங்கிய ஒன்றியத்தின் பொருளாளர் பிருந்திகா மற்றும் துஷாரி அவர்களுக்கும், எம் ஒன்றியத்தின் முன்னாள் அங்கத்தவர்களுக்கும், இந் நிகழ்வில் பங்குபற்றிய எம் ஒன்றியத்தின் ஏனைய மாணவர்களுக்கும் எமது ஒன்றியம் சார்பான மனமார்ந்த நன்றிகள். 🙏🙏👏 தொடர்ந்தும் எம் ஒன்றியம் சார்பான பல்வேறு சமூக செயற்பாடுகள் உங்கள் அனைவரின் ஆதரவோடு மென்மேலும் தொடரும். நன்றி.
29/04/2025
#கதம்பநிறைமுகிழ்_விழா_2025 #பகுதி4
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி முதலாம் வருடத்தில் கல்வி கற்கின்ற மன்னார் மாவட்ட புகுமுக மாணவர்களை வரவேற்கின்ற நிகழ்வும், தமது பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை நிறைவுசெய்து செல்லும் இறுதியாண்டு மாணவர்களுக்குரிய பிரியாவிடை நிகழ்வுமான "கதம்ப நிறைமுகிழ்" விழாவானது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் திரு. சூ.சுஜான் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வின்
பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முஸ்லீம் மாணவர் ஒன்றியம் சார்பாக திரு. M.S.M. இல்ஹாம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் இந்நிகழ்வின்
விழா நாயகர்களாக
நான்காம் வருட இறுதியாண்டு மாணவர்களும், மூன்றாம் வருட பொதுக்கலை மாணவர்களும்,
முதலாம் வருட புகுமுக மாணவர்களும் இந்நிகழ்வினைக் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வினை நல்ல முறையில் நடாத்தி முடிப்பதற்கு தங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய மன்னார் மாவட்ட கலைப்பீட ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து வருட மாணவப் பிரதிநிதிகள், எமது ஒன்றியத்தின் அனைத்து வருட உறுப்பினர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை எமது ஒன்றியம் சார்பாக கூறிக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் நமது ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துவிதமான செயற்பாடுகளிலும்
இதுபோன்ற ஒத்துழைப்பும் , ஆதரவும் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வினை நல்ல முறையில் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியம் சார்பான நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.
#கதம்பநிறைமுகிழ்_விழா_2025
29/04/2025
#கதம்பநிறைமுகிழ்_விழா_2025 #பகுதி3
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி முதலாம் வருடத்தில் கல்வி கற்கின்ற மன்னார் மாவட்ட புகுமுக மாணவர்களை வரவேற்கின்ற நிகழ்வும், தமது பல்கலைக்கழக கற்றல் செயற்பாடுகளை நிறைவுசெய்து செல்லும் இறுதியாண்டு மாணவர்களுக்குரிய பிரியாவிடை நிகழ்வுமான "கதம்ப நிறைமுகிழ்" விழாவானது
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியத்தலைவர் திரு. சூ.சுஜான் அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
இந்த நிகழ்வின்
பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எஸ்.ரகுராம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட முஸ்லீம் மாணவர் ஒன்றியம் சார்பாக திரு. M.S.M. இல்ஹாம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர். மேலும் இந்நிகழ்வின்
விழா நாயகர்களாக
நான்காம் வருட இறுதியாண்டு மாணவர்களும், மூன்றாம் வருட பொதுக்கலை மாணவர்களும்,
முதலாம் வருட புகுமுக மாணவர்களும் இந்நிகழ்வினைக் கலந்து சிறப்பித்திருந்தனர். இந்நிகழ்வினை நல்ல முறையில் நடாத்தி முடிப்பதற்கு தங்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்கிய மன்னார் மாவட்ட கலைப்பீட ஒன்றியத்தின் நிர்வாக உறுப்பினர்கள், அனைத்து வருட மாணவப் பிரதிநிதிகள், எமது ஒன்றியத்தின் அனைத்து வருட உறுப்பினர்கள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகளை எமது ஒன்றியம் சார்பாக கூறிக் கொள்கிறோம். இனிவரும் காலங்களிலும் நமது ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்துவிதமான செயற்பாடுகளிலும்
இதுபோன்ற ஒத்துழைப்பும் , ஆதரவும் தொடர்ச்சியாக கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மீண்டும் ஒருமுறை இந்த நிகழ்வினை நல்ல முறையில் செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் எமது மன்னார் மாவட்ட கலைப்பீட மாணவர் ஒன்றியம் சார்பான நன்றிகளை தெரிவித்து நிற்கின்றோம்.
#கதம்பநிறைமுகிழ்_விழா_2025