24/12/2023
அகில இலங்கை பரதநாட்டிய போட்டி 2023
(301 - 1000 க்கு இடைப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கான பிரிவில்) புத்தாக்க நடனம்
போட்டியில் எமது பாடசாலை மாணவர்கள் பல சவால்களின் மத்தியில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று வெற்றி பெற்றுள்ளார்கள்.
காலை மாலை நேரம் பாராது நெறியாள்கை செய்த நடன ஆசிரியர்களான திருமதி. பாமினி ரமேஷ்குமார் (நட்டுவாங்கம்) திருமதி. நந்தினி றுக்ஷான்
அவர்களுக்கும், நடனத்தினை முழுமையடைய இசை ஒத்துழைப்பு வழங்கிய எம் கல்லூரியின் சங்கீத ஆசிரியர்களான
திருமதி.பவானி குருபரன்
திருமதி.கஜேந்திரா பிரபாகரன்
அவர்களுக்கும்
பக்கவாத்திய இசை மூலம் நடனத்தினை மெருகூட்டிய
மிருதங்க வித்துவான்
திரு.நி.மதிரூபன் (ஆசிரியர் - யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி) அவர்களுக்கும் மற்றும் வயலின் இசை வழங்கிய
திரு.ரமேஷ் துரைசிங்கம் (ஆசிரியர் - வ/இந்துக்கல்லூரி) அவர்களுக்கும்
எமது நடனத்திற்கு பல வழிகளிலும் ஊக்கமும் ஒத்துழைப்பும் வழங்கியதோடு நடனத்திற்கான பாடல் வரிகளினை எழுதித்தந்த எமது வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் நடன ஆசிரிய ஆலோசகர் திருமதி.வீ.சூரியயாழினி அவர்களுக்கும்
வெற்றியீட்டிய மாணவ செல்வங்களான
செல்வி.க.அபிநயா
செல்வி.சு.கீர்த்தனா
செல்வி.ர.லிதிக்ஷா
செல்வி.செ.கனிஷ்கா
செல்வி.மு.சைந்தவி
செல்வி.ர.ஹரினி
செல்வி.ஶ்ரீ.யதுர்ஷிகா
செல்வி.வை.அஷ்மிதா
செல்வி.கீ.ஷபிசனா
செல்வி.ஜெ.சுபனயா
அனைத்துள்ளங்களுக்கும்
எமது பாடசாலை சமூகத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்🤝
Vavuniya V/Saivapragasa ladies college
09/11/2021
"தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்"
பொதுவாக தந்தைகளின் இறுதி காலம் பெரும்பாலும் மௌனத்திலும், தனிமையிலும், சில சமயம் ஒதுக்கி வைக்கப்பட்டும், புறக்கணிப்பிலும் கழிய நேரிடுகிறது என்பது வருத்தத்துக்குரியது...
இதனால் தான் தந்தைமார்கள், தாம் உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், முற்றாக ஓய்வு பெற்று மூலைக்கு செல்வதற்கு முன்னர் மரணித்து விட வேண்டும் என்றும் நினைக்கின்றனர்..
குடும்பத்துக்காக உழைத்து உழைத்து ஓடான பின்னர், அவரை கௌரவமாக வாழ வழி செய்ய வேண்டும். மூலையில் அமர்த்தி, மௌனத்தில் ஆழ்த்தி, மூன்று வேளையும் சாப்பிட்டு விட்டு பேசாமல் கிடந்தால் போதும் என்ற மனப்பான்மையுடன் தான் பல பிள்ளைகள் தந்தைமாரை நடத்தி வருகின்றனர்..
வயதான தந்தை தன் குடும்பத்தினரிடமிருந்து மிகக் கொஞ்சமாகத் தான் கேட்பார். ஏனெனில் கேட்டுப் பழகாத குடும்பத் தலைவராக இருந்தவர். கொடுக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்தவர். எனவே, வயதான காலத்தில் வாய் திறந்து கேட்க மாட்டார். குடும்பத்தினர் தான் அவரின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைக்க வேண்டும்.
வாசிக்கும் பழக்கம் உள்ளவரானால் குறைந்த பட்சம் வாரப் பத்திரிகையாவது வாங்கிக் கொடுங்கள்..
சில்லறை செலவுகளுக்காக கொஞ்சம் பணமும் கொடுங்கள்.. மூலையில் அமர்த்தாமல் சிறிய வேலைகளைக் கொடுங்கள்...
பேரன் பேத்திகளை அவரிடமிருந்து பிரிக்காதீர்கள். அவர்கள் தாத்தாக்களால் கொண்டாடப்படும் செல்வங்கள்..
குடும்பத் தேவைகளைப் பார்த்து பார்த்து செய்தவருக்கு, இப்போது உங்கள் காலம், பார்த்துப் பார்த்து செய்வதற்கு..
ஒருவர் மறைந்த பின்னர், அதைச் செய்யவில்லையே, இதைச் செய்திருக்கலாமே என்று எண்ணிப் புலம்புவதை விட, அவர் உயிருடன் இருக்கும் போதே தந்தையின் இறுதி காலம் அமைதியாகக் கழிவதற்கு வழி வகை செய்யுங்கள்...
வயதானவர்களுக்கு தனிமை மிகக் கொடுமையானது. ஒரு சிறிய வானொலியை வாங்கிக் கொடுங்கள். முடிந்தால் தனி டி.வி இல்லையேல், உங்களுடன் அமர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்க விடுங்கள்...
மனைவியை இழந்த தந்தையின் தனிமை தான் மிகமிகக் கொடுமையானது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்....
பெண் ஒரு கணவனை இழந்தால், அவரால் அதை ஜீரணித்து தன் பிள்ளைகளுடன் போய் சேர்ந்து கொள்வாள். பெண் சூழலுக்கு ஏற்றாற்போல வளைந்து கொடுத்து வாழ்பவள்...
குடும்பத் தலைவன், அதிகாரம் செலுத்தியவன், சம்பாதித்தவன், பிறர் மதிப்புக்கு உரியவன் என்றெல்லாம் வாழ்ந்து விட்ட தந்தை, தன் அதிகாரமும், அன்பும், நெருக்கமும், காட்டக் கூடிய மற்றும் எது வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக் கூடிய மனைவியை இழந்த பின் கையறு நிலைக்கு ஆளாகி விடுகிறார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்...
இவற்றை உணர்ந்து தந்தைக்கு மரியாதை செய்யுங்கள். அவர் கௌரவிக்கப்பட வேண்டியவர்...
29/06/2021
மக்களுக்கான எச்சரிக்கை.
"பிள்ளைகளின் எதிர்கால கல்விச் செலவுக்கு தாம் பொறுப்பு" எனக்கூறி இனந்தெரியாத நபர்களால், அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயரைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் ஊடாக நூதனமாக பணம் வசூலுக்கும் செயற்பாடொன்று யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெறுவதாக அறியத்தரப்பட்டுள்ளது.
அவ்வாறான பணம் வசூலிக்கும் எந்தவொரு நடவடிக்கைகளும் எக்காலத்திலும் எந்தவொரு அரசியல்கட்சிகள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படுவதில்லை.
ஆகையால் குறித்த இனந்தெரியாத நபர்கள் மற்றும் இனந்தெரியாத தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதோடு, உடனடியாக பொலீசாருக்கு தெரியப்படுத்துங்கள்.
இதே போன்ற மோசடிகள் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா, மன்னார் மாவட்டங்களில் இடம்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
28/06/2021
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி அதிபர் அருட்சகோதரி ஜெயநாயகி செபமாலை இன்று காலை இறையடி சேர்ந்தார்.
27/03/2021
Vavuniya Tamil Madhya Maha Vidyalaya பாடசாலையின் தொழில்நுட்பபீட பகுதித் தலைவர் ஆசிரியர் திரு பத்மநாதன் பரந்தாமன் (BSc) அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார்.
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய வேண்டி பாடசாலை சமூகம் சார்பாக பிரார்த்திக்கின்றோம்.
27/01/2021
ஒரு யானை ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 40 கிமீ நடக்கனும், குறைந்தபட்சம் 100 கிலோ உணவு சாப்பிடனும், குறைந்தபட்சம் 70 லிட்டர் தண்ணீர் குடிக்கனும்... பெரும்பாலான யானைகள் இந்த மாதிரியான மரத்துக்கு அடியில் தான் ஓய்வு எடுக்கும் அப்படி ஓய்வு எடுக்கும் பொழுது இந்த மாதிரி அரைகுறையாக உடைபட்ட பாட்டில் அதோட பாதத்தில் குத்தி உள்ளே போயிடும்.... அது முடிந்த வரை காலை உதறி அந்த பாட்டில்களை வீசி விட முயலும் ஆனால் பெரும்பாலான பாட்டில்களை அதனால் உதற முடியாது... அது அப்படியே சீல் பிடித்து கால் அழுகி நடக்க முடியாமல் எதாவது ஒரு மரத்தில சாஞ்சு நின்னு தன்னோட கால் அழுகி போவதை கண்ணீரோட பாத்து பாத்து ஒரு நாள் செத்தே போகும்....
அவ்வளவு பெரிய விலங்கை ஒரு சிறு கண்ணாடி பாட்டில் அதன் ஒட்டுமொத்த வாழ்வினை முடக்கி போட்டு விடுகிறது.
தனி மனிதன் சிந்தனையில் மாற்றம் வந்தால் மட்டுமே இங்கு பெரிய சமூக மாற்றம் ஏற்படும்...தயவுசெய்து இந்த தவறு செய்யாதீர்
17/01/2021
*பிறரிடம் ஒரு கடும் சொல்லை சொல்லும் முன் வாய் பேச முடியாதவர்களை நினைத்து பாருங்கள்.*
*உங்கள் சாப்பாட்டை குறை கூறும் முன் சாப்பிடவே வழி இல்லாதவர்களை நினைத்து பாருங்கள்.*
*உங்கள் கணவரையோ அல்லது மனைவியையோ குறை கூறும் முன் வாழ்க்கை துணை வேண்டி வருந்துபவர்களை நினைத்து பாருங்கள்.*
*உங்கள் குழந்தைகளை குறை கூறும் முன் பிள்ளை வரம் வேண்டுபவர்களை நினைத்து பாருங்கள்.*
*உங்களுடைய வீட்டை குறை கூறும் முன் வீடில்லாமல் வீதிகளில் வசிப்பவர்களை எண்ணிப்பாருங்கள்.*
*உங்களுடைய வேலையை குறை கூறும் முன் வேலையில்லாமல் வாடுபவர்களை எண்ணிப் பாருங்கள்.*
*சோகத்தில் உங்கள் முகம் வாடும் பொழுது கடவுள் தந்த வாழ்க்கை என்ற பரிசுக்கு நன்றி சொல்லி முகத்தில் புன்னகையை தவழ விடுங்கள்....*
31/12/2020
You are luckiest one if your school friend is still your best friend.
Tag Your Best Friend in Comment.
30/12/2020
Are you missing your school life?
06/12/2020
வவுனியாவின் இயற்கை அழகை நண்பர்களுக்கு பகிருங்கள்
05/12/2020
எமது பாடசாலையில் நீங்கள் எந்த ஆண்டு உயர்தரம் கற்றீர்கள்?