09/02/2026
மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி
09.02.2026
அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. கோபிஷா சிவக்குமார் அவர்களின் சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான மனிதாபிமான நிதி உதவி தொடர்பாக
எமது மட்டக்களப்பு கல்விக் கல்லூரியில் அபிவிருத்தி உத்தியோகத்தராகப் பணியாற்றி, பின்னர் இடமாற்றலாகிச் சென்ற திருமதி. கோபிசா சிவக்குமார் அவர்கள், தற்போது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட மிகக் கடுமையான உடல்நல நிலையில உள்ளதாகவும், அதனால் சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர்கொள்ள வேண்டிய அவசியமான நிலையில் இருப்பதாகவும் எமக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.
இச்சிகிச்சை மிக உயர்ந்த செலவினங்களை உள்ளடக்கியதோடு, அவருடைய தற்போதைய குடும்ப மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் காரணமாக, குறித்த சிகிச்சைக்குத் தேவையான பெரும் நிதியினை தனிப்பட்ட முறையில் திரட்ட முடியாத ஒரு மிகவும் சிரமமான நிலைமையில் அவர் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
மனிதாபிமான உணர்வின் அடிப்படையிலும், தங்களால் இயன்ற அளவிலான நிதி உதவியினை அவருடைய சிறுநீரக மாற்று சிகிச்சைக்காக வழங்கி, அவரது உயிர் காக்கும் இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்குமாறு தங்களை மனமாரக் கேட்டுக் கொள்கின்றோம்.
தங்களின் சிறிய உதவிகூட, ஒரு குடும்பத்திற்கு புதிய நம்பிக்கையையும் வாழ்க்கையையும் அளிக்கக்கூடியதாக அமையும் என்பதை பணிவுடன் நினைவுறுத்துகிறோம்.
மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் தங்களின் அன்பான ஒத்துழைப்பிற்கு முன்கூட்டியே எமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவ் தகவலினை மற்றவர்களுக்கும் பகரித்து அவர்களையும் இவ் உன்னத மனிதாபிமான செயற்பாட்டில் இணைக்க உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
+94752701983
+94778523748
வங்கி கணக்கு இலக்கம்
P.GOBISHA
BOC BANK - VELLAVELY
6850379
நன்றி