Kokulan Kumarasamy

Kokulan Kumarasamy “அலைவார் அவர்தானே அடைவார்.
அவர் அடையும் புதையல் பெரிது”

இது கம்பன் மறந்த ஓவியம்…கண்கள் கண்ட கவிதை,இதயம் மட்டும் புரிந்த காவியம்✨
16/08/2026

இது கம்பன் மறந்த ஓவியம்…
கண்கள் கண்ட கவிதை,
இதயம் மட்டும் புரிந்த காவியம்✨

நானும் ஒரு பறவை தான்… 🕊️வானம் எல்லை அல்ல,வழி காட்டும் அழைப்புபாதம் தொடும் ஒவ்வோர் மண்ணிலும்,ஒரு புதிய கதையைத் தேடிசிறகடி...
16/08/2026

நானும் ஒரு பறவை தான்… 🕊️
வானம் எல்லை அல்ல,
வழி காட்டும் அழைப்பு
பாதம் தொடும் ஒவ்வோர் மண்ணிலும்,
ஒரு புதிய கதையைத் தேடி
சிறகடித்துப் பறக்கிறேன். 🌍✨

எதிரிக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுக்கே புரியவில்லை என்பதுதான் கவலை!
13/08/2026

எதிரிக்கு புரியவில்லை என்றால் பரவாயில்லை யாருக்காகப் போராடுகிறோமோ அவர்களுக்கே புரியவில்லை என்பதுதான் கவலை!

எமது பிரதேசம் என்ன குப்பைக் கிடங்கா?அனுமதி இன்றி, கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக 350 டிப்பர் அளவிலான குப்பைகள் எமது பிர...
12/08/2026

எமது பிரதேசம் என்ன குப்பைக் கிடங்கா?

அனுமதி இன்றி, கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக 350 டிப்பர் அளவிலான குப்பைகள் எமது பிரதேசத்தில் கொட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மக்கள் வசிக்கும் ஒரு பிரதேசத்தை இவ்வாறு குப்பைக் கிடங்காக மாற்றுவது எந்த வகையில் நியாயம்?

யார் அனுமதி வழங்கியது?
யார் இதற்கு பொறுப்பு?
மக்களின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் யார் பதில் சொல்லப் போகிறார்கள்?

எமது நிலம் யாருடைய குப்பைகளையும் கொட்டுவதற்கான இடம் அல்ல!

“எமது பிரதேசம் குப்பைக் கிடங்கு அல்ல — மக்களின் வாழ்விடத்தை குப்பை மேடாக மாற்ற ஒருபோதும் அனுமதிக்க முடியாது!

நான் பாட்டுக்கு சிவனேனுதானடா போயிட்டு இருந்தேன், யாரோ வம்பு தும்புக்கு போகாம.வேல்டு பேமஸ் 5 பவுண்ஸ் அங்கிள் 🤣
09/08/2026

நான் பாட்டுக்கு சிவனேனுதானடா போயிட்டு இருந்தேன், யாரோ வம்பு தும்புக்கு போகாம.

வேல்டு பேமஸ் 5 பவுண்ஸ் அங்கிள் 🤣

09/08/2026

களம் எட்டில் ரீச்சா ஓனரையும் மீடியா மதியையும் போட்டு பொளக்கின்றார்கள் ஓவர் ஓவர்.

ரீச்சா – பாஸ்கரன் சந்தைப்படுத்தல் (Marketing) என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கடந்த காலங்களில் உங்களை ஒரு உதாரண...
08/08/2026

ரீச்சா – பாஸ்கரன்

சந்தைப்படுத்தல் (Marketing) என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு கடந்த காலங்களில் உங்களை ஒரு உதாரணமாக சொல்லும் அளவுக்கு இருந்தவர்.

பற்றுச்சீட்டின் விலை என்ன என்பது தெரிந்துதான் நாம் அங்கே செல்கிறோம்.
சாப்பாட்டுக்காக மட்டும் போகிறோம் என்றால், கொடுத்த பணத்தைவிட அதிகமாக சாப்பிடுவோம் என்ற எண்ணத்தில்தான் Buffet-க்கு செல்கிறோம். 😏

யாரும் யாரையும் கட்டாயப்படுத்தி அழைக்கவில்லை.
போக வேண்டுமா வேண்டாமா என்பது முழுமையாக உங்கள் விருப்பம்.

அப்படியிருக்க, இப்போது ஏன் இந்த “2500 ரூபாய் கதை” எல்லாம்? 🤔

அவர் ஒரு சிறந்த வியாபாரி.
அவர் யாரையும் ஏமாற்றவில்லை.
உணவுத் திருவிழாவில் என்ன இருக்கிறது, யாருக்கு என்ன கிடைக்கும், பற்றுச்சீட்டு எவ்வளவு என்பதையெல்லாம் வெளிப்படையாகச் சொல்லித்தான் விளம்பரம் செய்கிறார்.

விலை பிடிக்கவில்லை என்றால் போக வேண்டாம்.
விருப்பம் இருந்தால் போங்கள்.
அவ்வளவுதான்.

வியாபாரம் செய்பவரை குறை சொல்லுவதற்கு முன், அவருடைய Marketing-ஐ புரிந்துகொள்ளுங்கள்.

இவ்வளவு காலமும் உங்களை மட்டுமே நம்பி சந்தைப்படுத்திய விதமே ஒரு சிறந்த Marketing Strategy! 🔥👏

🔥 காணி விற்பனை தரகர்களே… கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்! 🔥“5 கோடி… 6 கோடி…” என்று விலையை வாயில் வந்தபடி போடுவதற்...
08/08/2026

🔥 காணி விற்பனை தரகர்களே… கொஞ்சம் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள்! 🔥

“5 கோடி… 6 கோடி…” என்று விலையை வாயில் வந்தபடி போடுவதற்கு முன், அந்த காணி உண்மையில் அந்தப் பெறுமதிக்கு தகுதியானதா என்று யோசித்துப் பாருங்கள்!

உங்களுக்கு கிடைக்கப்போகும் தரகர் காசை மட்டும் பார்த்து காணியின் விலையை ஏற்றாதீர்கள்.
வாங்கப்போகிறவன் பணம் கொடுக்கிறான்… அவன் பணத்துக்கும் ஒரு பெறுமதி இருக்கிறது!

🛣️ சரியான பாதை இல்லாத காணி.
🚌 பேருந்து வசதி இல்லாத இடம்.
🏫 பாடசாலை தூரத்தில் இருந்தும் “பாடசாலை கிட்டத்தான்” என்று கதை.
🏥 மருத்துவமனை, நகரம், கடைகள் எல்லாம் தூரத்தில் இருந்தும் “எல்லாமே அருகில்தான்” என்று விளம்பரம்.

இப்படி பொய்யைச் சொல்லி காணி விற்பது வியாபாரம் அல்ல… ஏமாற்று வேலை!

ஒரு காணியின் உண்மையான மதிப்பை சொல்லுங்கள்.
சும்மா விலையை ஏற்றி, வாங்குபவரை மடையனாக நினைக்காதீர்கள்.

இன்று ஒரு வாடிக்கையாளரை ஏமாற்றி தரகர் பணம் சம்பாதிக்கலாம்.
ஆனால் நாளைக்கு அந்த நம்பிக்கை போய்விட்டால் உங்கள் வியாபாரமும் போய்விடும்.

👉 தரகர் என்பவர் விலையை ஏற்றுபவர் அல்ல.
வாங்குபவருக்கும் விற்பவருக்கும் நடுவில் நியாயத்தை காப்பவர்.

வியாபாரம் எந்தத் துறையாக இருந்தாலும் சரி—
நேர்மை இல்லாத வியாபாரம் நீண்ட நாள் நிலைக்காது.

💯 காணியின் உண்மையான பெறுமதியை சொல்லுங்கள்.
பொய்யான கதைகளைச் சொல்லி விலையை ஏற்றாதீர்கள்.

“ஒரு விற்பனைக்காக நம்பிக்கையை விற்காதீர்கள்!” 🔥

பொறுமை, விடாமுயற்சி, தோல்வி, துரோகம், நம்பிக்கை — இவை அனைத்தையும் அனுபவித்த பிறகே வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் உண்மையா...
20/07/2026

பொறுமை, விடாமுயற்சி, தோல்வி, துரோகம், நம்பிக்கை — இவை அனைத்தையும் அனுபவித்த பிறகே வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் உண்மையான வெற்றியை அடைய முடியும்.
வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; ஒவ்வொரு விழுதலும் ஒரு பாடம், ஒவ்வொரு ஏமாற்றமும் ஒரு அனுபவம், ஒவ்வொரு முயற்சியும் ஒரு முன்னேற்றம்.
வளர்ச்சி அடைவதற்கு திறமை மட்டும் போதாது; அதற்கான சரியான காலமும் பொறுமையும் அவசியம். நேரம் எடுத்தாலும் நின்றுவிடாதே… இன்று விதைத்த உழைப்பு நாளை வெற்றியாக மலரும். 🌱✨

2010-க்கு முன்… ❤️திருமணமோ, வேறு எந்த நன்மை காரியமோ நடந்தால் அது வீட்டில்தான்.வீட்டு முற்றத்தில் பந்தல்…சமையலில் உறவினர்...
19/07/2026

2010-க்கு முன்… ❤️

திருமணமோ, வேறு எந்த நன்மை காரியமோ நடந்தால் அது வீட்டில்தான்.

வீட்டு முற்றத்தில் பந்தல்…
சமையலில் உறவினர்களின் கை…
அண்டை வீட்டாரின் உதவி…
குழந்தைகளின் சிரிப்பு…
வீடு முழுவதும் உறவுகளின் சலசலப்பு…

அதுதான் அந்தக் காலத்தின் அழகு.

இன்று…

அதே நிகழ்வுகள் பெரும்பாலும் திருமண மண்டபங்களிலும், நட்சத்திர விடுதிகளிலும் நடைபெறுகின்றன. வசதிகள் அதிகரித்துள்ளன, ஆனால் உறவுகளோடு சேர்ந்து உழைத்த அந்த இனிய அனுபவங்கள் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து வருகின்றன.

மாற்றம் தவிர்க்க முடியாதது. ஆனால் எங்கு கொண்டாடினாலும், உறவுகளின் அரவணைப்பும், அன்பும், ஒற்றுமையும் மட்டும் என்றும் மாறாமல் இருக்கவேண்டும்❤️

Address

Rangala

Alerts

Be the first to know and let us send you an email when Kokulan Kumarasamy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share