OBA Ellalamulla Zahira M.V.

OBA Ellalamulla Zahira M.V. எல்லலமுல்ல ஸாஹிரா மு.வி. இன் பழைய மாணவர் சங்கம் 2015 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்பார்ந்த தந்தைமார்களே, பழைய மாணவர்களே!எமது பாடசாலையில் தொடர்ந்தும் நிலவிவருகின்ற முக்கியமான சில தேவ...
29/10/2025

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த தந்தைமார்களே, பழைய மாணவர்களே!

எமது பாடசாலையில் தொடர்ந்தும் நிலவிவருகின்ற முக்கியமான சில தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக கிடுகு விற்பனை ஒன்றை செய்வதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.

இது தொடர்பான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ள எல்லலமுல்ல, அல்கம, அத்தனகல்லை ஆகிய மூன்று ஊர்களையும் சேர்ந்த பாடசாலை மாணவர்களின் தந்தையர், பழைய மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளோம்.

எனவே இக்கூட்டத்தில் கலந்து பாடசாலையின் அபிவிருத்திக்குப் பங்களிப்புச் செழுத்துமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

கூட்ட திகதி : 31.10.2025 வெள்ளிக் கிழமை
நேரம் : இஷாத் தொழுகையை தொடர்ந்து
இடம் : எல்லலமுல்ல ஜாமிஉள் ஹைராத் ஜும்மா பள்ளிவாசல்

பாடசாலையின் அடிப்படைத் தேவைகள்.

1. பழைமையடைந்திருக்கும் பிரதாண கட்டிடத்தை நீக்கி அவ்விடத்திற்கு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கான வேலைகளை முன்னெடுத்தல்.
2. ஆண், பெண் பிள்ளைகளுக்கான கழிவறைக் கட்டிடங்களை ஒழுங்கு செய்தல்.
3. வாசிக சாலையை மேம்படுத்துதல்.
4. பாடசாலை கணினிக்கூடத்தை திருத்தி அமைத்தல்.
5. வாயில் முகப்பை அமைத்தல்.
4. 2024 ஆம் ஆண்டின் பரிசளிப்பு விழா
5. 2025 ஆம் ஆண்டின் இல்ல விளையாட்டுப் போட்டி

கட்டாயம் அனைவரும் சமூகம் தரவும்.

இப்படிக்கு அதிபர்

Zahira O/L Results:Our heartiest thanks to principal and teachers who prepared and guide the students. Jazakallhu kair
15/07/2025

Zahira O/L Results:
Our heartiest thanks to principal and teachers who prepared and guide the students. Jazakallhu kair

🚩 மீரிகமைக் கல்விக் கோட்டத்தில் 2024 சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் எல்லலமுல்லை சாஹிரா முஸ்லிம் வித்யாலயம் இரண்டாம...
15/07/2025

🚩 மீரிகமைக் கல்விக் கோட்டத்தில் 2024 சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் எல்லலமுல்லை சாஹிரா முஸ்லிம் வித்யாலயம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

எமது பாடசாலையின் 2003 / 2004 O/L Batch பழைய மாணவர்கள் ஒன்று கூடி அளவளாவிய தருணம்.உங்களுடைய புகைப்படங்களும் இருந்தல் பகிர...
23/01/2025

எமது பாடசாலையின் 2003 / 2004 O/L Batch பழைய மாணவர்கள் ஒன்று கூடி அளவளாவிய தருணம்.

உங்களுடைய புகைப்படங்களும் இருந்தல் பகிரவும்...

எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தின் நிலை.------------------------------------------------------------------------ஸாஹிரா ...
25/12/2024

எமது பாடசாலையின் பிரதான மண்டபத்தின் நிலை.
------------------------------------------------------------------------
ஸாஹிரா பாடசாலை வரலாற்றில் முதன் முதலாகக் கட்டப்பட்ட 40 வருடங்களைத் தாண்டி உள்ள இப் பிரதான மண்டபத்தின் தற்போதைய நிலையைத்தான் நீங்கள் இப் படங்களில் பார்க்கின்றீர்கள்.

நாங்கள் கல்வி கற்ற, எமது பிள்ளைகள் கல்வி கற்ற, கற்றுக்கொண்டிருக்கின்ற பாடசாலை மண்டபத்தின் நிலைதான் இது.

* கூரை ஓடுகள் சேதமடைந்து...
* கூரைக் கம்புகள் உக்கலடைந்து...
* சுவர்களில் வெடிப்பேற்பட்டு...
* தரையில் பொத்தல்கள் விழுந்து...
* கம்பிகள் கறை படிந்து...
* படிகள் உடைந்து...

உருக்குழைந்த நிலையில் காட்சியளிக்கின்றது.

பிள்ளைகள் இக்கட்டிடத்தில் கற்பது என்பது உண்மையில் பொருத்தமானதல்ல.

பழைமையான இக்கட்டிடத்தை அகற்றிவிட்டு பாடசாலையில் நிலவும் பல இடப் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதியதொரு கட்டிடத் தொகுதி இவ்விடத்தில் அமையப்பெருவது காலத்தின் தேவையாகும்.

ஊர் மக்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் என நாம் அனைவரும் ஒன்றிணைந்து இதுபற்றி சிந்திப்பது மிக அவசரமான, அவசியமான விடயம்.

& PPA

வாசிப்புப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற எமது பாடசாலை மாணவி.எல்லாலமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 7 இல் க...
04/11/2024

வாசிப்புப்போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்ற எமது பாடசாலை மாணவி.

எல்லாலமுள்ள ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்தின் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவி M.R.F.Manal மாகாண மட்டத்தில் நடைபெற்ற இரண்டாம் மொழி வாசிப்புப் போட்டியில் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தேசிய மட்டத்தில் நடைபெற்ற
இரண்டாம் மொழி வாசிப்புப் போட்டியில் 18 பாடசாலைகளுடன் போட்டியிட்டு 5 ஆம் இடத்தையும் பெற்று எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

மாணவி மனால் ரிஸ்விக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

#அதிபர்.

தொடர்ந்தும் சாதனை படைக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா..--------------------------------------------------மினுவாங்கொடை வலய தமிழ்...
29/10/2024

தொடர்ந்தும் சாதனை படைக்கும் எல்லலமுல்ல ஸாஹிரா..
--------------------------------------------------
மினுவாங்கொடை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2021, 2022 மற்றும் 2023 காலப் பகுதிகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் முதல் 10 பாடசாலைகளில் முதலிடத்தை எமது ஸாஹிரா பெற்றுக் கொண்டுள்ளது. அதற்காக வழங்கப்பட்ட சான்றிதழ்களை இங்கே காண்கின்றீர்கள்.

இதன் கௌரவமும் பெருமையும் அக்காலப் பகுதிகளில் தரம் 1 முதல் 11 வரை கற்பித்த சகல ஆசிரியர்களுக்கும் அதிபர்களுக்கும் சமர்ப்பணம்.

அதிபர்.

எமது பாடசாலைக்கு முதலிடம்.----------------------------------------------மினுவாங்கொடை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 20...
25/10/2024

எமது பாடசாலைக்கு முதலிடம்.
----------------------------------------------
மினுவாங்கொடை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் 2023 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்ட எல்லலமுல்லை ஸாஹிரா முஸ்லிம் வித்தியாலயத்துக்கு வலயக்கல்வி பணிப்பாளரினால் சான்றிதழ் வழங்கப்பட்டது.

எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்க்கும் செய்தி.எமது எல்லலமுல்லையைச் சேர்ந்த, ஸாஹிராவில் கல்வி கற்ற, தாஜுதீன் மாவத்...
06/10/2024

எமது ஊருக்கும் பாடசாலைக்கும் பெருமைசேர்க்கும் செய்தி.

எமது எல்லலமுல்லையைச் சேர்ந்த, ஸாஹிராவில் கல்வி கற்ற, தாஜுதீன் மாவத்தையில் வசிக்கும் ஜனாப் சல்மான் அவர்களின் மகன் சமீர் Sameer Hasan அவர்கள் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பொறியியல் தொழில்நுட்பத் துறையில் உயர் கல்வியைத் தொடர்ந்து நேற்றைய தினம் அத் துறையில் இளங்கலைமாணிப் பட்டத்தை Bachelor of Engineering Technology (Honours) பெற்றுள்ளார்.

💐 ஊர் சார்பாக அவருக்கு எமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

சமீப காலமாக எமது ஊரிலிருந்து பல்கலைக்கழங்களுக்கும், தொழில் நுட்பக் கல்லூரிகளுக்கும், ஆசிரிய பயிற்சிக் கல்லூரிகளுக்கும் தெரிவாகிச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகின்றது. உண்மையில் இது மகிழ்ச்சியளிக்கும் ஒரு விடயம். அல்ஹம்துலில்லாஹ்.

இப்படியான பட்டதாரிகள் ஊரில் உருவாவதோடு, இன்னும் அதிகமான பட்டதாரிகளையும், வைத்தியர்களையும், பொறியியலாளர்களையும், வழக்கறிஞர்களையும், கணக்காளர்களையும் உருவாக்கவேண்டியது எமது ஊரின் தேவை, சமூகத்தின் கடமை.

இது நிச்சயமாக எமது இந்த சிறிய ஊரினது அபிவிருத்திக்குப் பங்களிப்பு செய்யும். இன்ஷா அல்லாஹ்!

பட்டம் பெற்று வெளியேறுபவர்களை ஒன்றிணைத்து அவர்கள் மூலம் ஊருக்கும், பாடசாலைக்கும் தேவையான பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்வது குறித்தும் ஊர்த் தலைவர்கள் சிந்திப்பது சிறந்தது.

பாடசாலை மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.நேற்றைய தினம் (13.09.2024) எமது பாடசாலையின் தரம் 1 முதல் 11 வரையான மாண...
14/09/2024

பாடசாலை மணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் கையளிப்பு.

நேற்றைய தினம் (13.09.2024) எமது பாடசாலையின் தரம் 1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு அத்தனகல்லை ராஜமஹா விஹாரையின் பிரதம விஹாராதிபதி பண்ணில ஸ்ரீ ஆனந்த தேரர் அவர்களால் அப்பியாசப் புத்தகங்களும் ஏனைய பாடசாலை உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கும் பெற்றோருக்கான உளவியல் ஆலோசனை நிகழ்வும்.கடந்த 01.09.2024 ஆம் திகதி எமது ஸாஹிரா மு.வி....
03/09/2024

தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கும் பெற்றோருக்கான உளவியல் ஆலோசனை நிகழ்வும்.

கடந்த 01.09.2024 ஆம் திகதி எமது ஸாஹிரா மு.வி. இல் தரம் 5 மாணவர்களுக்கான கருத்தரங்கும் பெற்றோருக்கான உளவியல் ஆலோசனை நிகழ்வும். நடைபெற்றது.

கருத்தரங்கினை காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி வரை அஸ்மின் ஆசிரியர் அவர்கள் நடாத்தி வைத்தார்.

பெற்றோருக்கான உளவியல் வழிகாட்டல் நிகழ்வினை திஹாரியைச் சேர்ந்த உளவள ஆலோசகர் மஹ்ஜபீன் முஹ்ஸீன் அவர்கள் நிகழ்த்தினார்.

நிகழ்ச்சிக்கு பேருவலையைச் சேர்ந்த அல்ஹாஜ் ஸவாஹிர் அவர்கள் விஷேட அதிதியாக வருகை தந்திருந்ததோடு சிறப்புரையும் ஆற்றினார்.

பாடசாலையின் பிரதி அதிபர் புஹாரி உடையார் அவர்களின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் பள்ளிவாயல் நிர்வாக சபைத் தலைவர் அல்ஹாஜ் பௌஸ் அவர்களும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினதும் தரம் 5 பெற்றோரினதும் ஏற்பாட்டில் நடைபெற்றது.

இக் கருத்தரங்கிற்கான நிதி உதவிகளைப் பெற்றுத் தந்து அழகிய முறையில் செய்து முடிக்க உதவிய அல்ஹாஜ் ஸவாஹிர் அவர்களுக்கும் அவரது தோழர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் அல்லாஹ் நட்கூலி வழங்குவானாக. ஆமீன்.

பா.அ.ச.

ஒரு ஆளுமை இறையடி எய்தது.----------------------------------------------இஸ்மத் பாத்திமாதன்னைஒரு ஆங்கில ஆசிரியராகஒரு ஆசிரிய...
16/07/2024

ஒரு ஆளுமை இறையடி எய்தது.
----------------------------------------------

இஸ்மத் பாத்திமா
தன்னை
ஒரு ஆங்கில ஆசிரியராக
ஒரு ஆசிரிய ஆலோசகராக
ஒரு ஆற்றல் நிறைந்த அதிபராக
ஒரு இளம் எழுத்தாளராக
ஒரு கவிதை பாடும் குயிலாக
ஒரு வானொலி பேச்சாளராக பல்வேறு சாதனைகளை புரிந்து
நிறையவே மக்கள் உள்ளங்களில் புகுந்தவர்.

பானகமுவையில் பிறந்து பஸ்யாலையை வாழ்விடமாக மாற்றிக் கொண்டவர்.
திஹாரிய தாருஸ்ஸலாம்,
கஹடோவிட்ட பாலிகா,
அல்லலமுல்ல ஸாஹிரா
என்பவற்றில் அதிபராக கடமை புரிந்தவர்.

நாம்புளுவ பாபுஸ்ஸலாம் ஈன்றெடுத்த பழைய மாணவி
அதே பாடசாலையின் ஆசிரியர்,
பரயகஹதெனியவின் கல்வி கற்பித்தவர்.

அவருக்கு எங்கள் பிரார்த்தனைகள்
"இறைவா அம்மனிக்கு சுவர்க்கத்தை வாஜிபாக்குவாயாக....

Address

Allalamulla
Pasyala

Website

Alerts

Be the first to know and let us send you an email when OBA Ellalamulla Zahira M.V. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category