Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai

  • Home
  • Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai

Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai Fb page contains activities of Hidayan PPA-Past Pupils' Association

 #திறமைகளை  #வெளிப்படுத்தி  #வெற்றி  #பெற  #இறைவனை  #பிரார்த்திப்போமாக! கொழும்பில் நாளை 23 செவ்வாய்க்கிழமை  நடைபெறவுள்ள ...
21/09/2025

#திறமைகளை #வெளிப்படுத்தி #வெற்றி #பெற #இறைவனை #பிரார்த்திப்போமாக!

கொழும்பில் நாளை 23 செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள
தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று திங்கட்கிழமை காலை (22.09.2025) எமது மீராவோடை அல்-ஹிதாயா அணியினர் தமது பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக பாடசாலையின் பழைய மாணவ சங்கத்தின் ஊடக இணைப்பாளர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் தெரிவித்தார்.

மேலும் அவர் இவர்களுடைய பயணம் பாதுகாப்பாகவும், வெற்றிப் பயணமாக அமையவும், அங்கு நடை பெறும் அனைத்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளை மிகவும் மன தைரியத்துடன் எதிர்கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும், சிறந்த உடல் ஆரோக்கியத்தை வல்ல இறைவன் வழங்க வேண்டுமென நாம் அனைவரும் பிராத்திப்போமாக!

எமது கிரிக்கெட் அணியினருடைய வெற்றி என்பது எமது மாகாணத்திற்கும் மாவட்டத்திற்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை ஈட்டி தரும் என்பதுடன்

" பாடசாலைக்காக நாம்" என அனைவரும் ஒன்றிணைந்துள்ள இத்தருணத்தில் நூற்றாண்டை நோக்கி நகரும்
எமது பாடசாலையின் கௌரவத்தையும்,சிறப்பையும் மேலோங்க செய்யும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளர்)
ஊடகப்பிரிவு,
பழைய மாணவ சங்கம்
மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.

 #பாராளுமன்ற  #உறுப்பினர்   #கந்தசாமி  #பிரபு  #தேசிய  #மட்ட  #கிரிக்கெட்  #போட்டிக்கு  #தெரிவு  #செய்யப்பட்ட  #அணிக்கு ...
21/09/2025

#பாராளுமன்ற #உறுப்பினர் #கந்தசாமி #பிரபு #தேசிய #மட்ட #கிரிக்கெட் #போட்டிக்கு #தெரிவு #செய்யப்பட்ட #அணிக்கு #நேரில் #வருகை #தந்து #வாழ்த்தி #பாராட்டு

கிழக்கு மாகாணத்தின் தனி ஒரு பாடசாலையாக தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலய கிரிக்கெட் அணியினரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பாடசாலைக்கு நேரில் விஜயம் செய்து வாழ்த்தி பாராட்டியதுடன் அவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவித்தார்.

 #தேசிய  #மட்ட  #போட்டியில்  #கலந்து  #கொள்ளும்  #கிரிக்கெட்  #அணியினருக்கு  #பிரதேச  #சபை  #உறுப்பினர்  #ஹலால்தீனால்  #...
21/09/2025

#தேசிய #மட்ட #போட்டியில் #கலந்து #கொள்ளும் #கிரிக்கெட் #அணியினருக்கு #பிரதேச #சபை #உறுப்பினர் #ஹலால்தீனால் #சீருடை #அன்பளிப்பு

பாடசாலை ரீதியாக நடைபெற்ற ( 20வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் கிழக்கு மாகாணத்தில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் கிரிக்கெட் அணியினர் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.

பிரதேச பாடசாலைகளின் வரலாற்றில் பாடசாலை கிரிக்கெட் அணியினர் தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்கின்றமை இதுவே முதல் தடவையாகும்.

இவ் அணியினரை ஊக்கப்படுத்தி தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கான பங்களிப்பை வழங்கும் நோக்கில் எமது பாடசாலையின் பழைய மாணவரும்,பிரதேச சபை உறுப்பினருமான அல்-ஹாஜ் எம்.எம்.எம்.ஹலால்தீன் முன் வந்துள்ளார்.

இதற்கமைவாக அவர் முதல் கட்டமாக எதிர்வரும் 23ஆந்திகதி நடைபெறவுள்ள தேசிய மட்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியிகளில் அம்மாணவர்கள் அணித்து விளையாடுவதற்கான முழுமையான சீருடையினை பெற்றுத் தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இச் சீருடை அறிமுக நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை வெகுவிமர்சையாக பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது.

பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி பணிமனையின் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக்,இக்பால் வித்தியாலயத்தின் அதிபர் எம்.சீ.ஐயூப்கான் உள்ளிட்ட ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எமது பாடசாலையின் பழைய மாணவர்களான பிரதித்தவிசாளர் ஏ.எச்.நுபையிர், கே.பீ.எஸ்.ஹமீட்,ரீ.எம்.றிஸ்வி, பழைய மாணவ சங்க கட்டார் கிளையின் தலைவர் எஸ்.ஐ.அஜ்வத் உள்ளிட்ட ஏராளமான பழைய மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் கிரிக்கெட் அணியினருக்கு இச்சீருடையினை பெற்று தந்தமைக்காக சமூக செயற்பாட்டாளரும், பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.எம்.ஹலால்தீன் அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்

எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளர்)
ஊடகப்பிரிவு:
பழைய மாணவ சங்கம்
மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.

 #சமூக  #செயற்பாட்டாளர்  #நியாஸ்  #ஹாஜி  #அறம்  #செய்ய  #கரம்  #தந்தார் மீராவோடை அல்-ஹிதாயா  மகா வித்தியாலயத்தின் பழைய ம...
20/09/2025

#சமூக #செயற்பாட்டாளர் #நியாஸ் #ஹாஜி #அறம் #செய்ய #கரம் #தந்தார்

மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கம் "பாடசாலைக்காக நாம்" என்ற உயர் என்னக்கருவின் அடிப்படையில்
பல்வேறு வேலை திட்டங்களை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் அடிப்படையில் பாடசாலையின் கிரிக்கெட் அணியினை பலப்படுத்தும் வகையில் பழைய மாணவர்களின் ஒத்துழைப்புடன் பழைய மாணவ சங்கம் தம்மால் முடியுமான உச்ச அளவிலான பங்களிப்புகளை வழங்கி வருகின்றமை யாவரும் அறிந்த விடயம்.

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட
20வயதுக்குட்பட்டவர்களுக்கான கடினப்பந்து கிரிக்கெட்
சுற்றுப்போட்டியில் முதலிடத்தைப் பெற்று தேசிய மட்டத்திற்கு எமது அணியினர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் தேசிய மட்ட போட்டி எதிர்வரும் 23ஆந் திகதி கொழும்பில் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நோக்கில் சமூக நலன் விரும்பிகளின் ஒத்துழைப்புக்களுடன்
பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இவ்விடயங்கள் குறித்து அறிந்து கொண்ட எமது பிரதேசத்தின் சமூக செயற்பாட்டாளரும், அகீல் அவசர சமூக சேவை பிரிவின் பணிப்பாளருமான அல்-ஹாஜ் எம்.ஏ.சீ.நியாஸ் அவர்கள் எமது பாடசாலைக்கு விஜயம் செய்து குறித்த கிரிக்கெட் அணி மாணவர்களை வாழ்த்தியதுடன்

பாடசாலையினை மையப்படுத்தி மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு வேலை திட்டங்களுக்கான நிதி சேகரிப்பு நடவடிக்கைகளுக்காக
பழைய மாணவ சங்கத்தினால் அறிமுகம் செய்யப்படவுள்ள டிசேட் அறிமுக நிகழ்வினை முன்னிட்டு பழைய மாணவ சங்கத்திடம் 25,000/- ரூபாவினை தமது பங்களிப்பாக அவர் கையளித்தார்.

பாடசாலை அதிபரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை அமைவாக மேலும் பாடசாலையின் "ஸ்மார்ட் வகுப்பறை" ஒன்றினை மேம்படுத்துவதற்கான உதவிகளையும் விரைவில் தாம் வழங்குவதாக அப்போது நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலையின் கிரிக்கெட் அணி மாணவர்களையும் சந்தித்து அவர்களிடமும் தனது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இச் சந்தர்ப்பத்தில் இவ் உதவிகளை வழங்கிய எம்.ஏ.சீ. நியாஸ் ஹாஜி அவர்களுக்கு எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

எம்.ரீ.எம்.பாரிஸ் (ஊடகவியலாளர்)
ஊடகப்பிரிவு:
பழைய மாணவ சங்கம்
மட்/மம/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.

மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்பு குழு தலைவருமானகந்தசாமி பிரபு எமது பாடசாலைக்கு அ...
20/09/2025

மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச அபிவிருத்திக் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான
கந்தசாமி பிரபு எமது பாடசாலைக்கு அண்மையில் வருகை தந்திருந்தார்.

இதன்போது பாடசாலையின் அபிவிருத்திகள் மற்றும் பாடசாலையில் உள்ள குறைபாடுகள் மற்றும் அதன் தேவைகளை நிவர்த்தி செய்வது குறித்த சிறப்பு கலந்துரையாடலில் அவர் ஈடுபட்டார்.

பாடசாலையின் தற்போதைய நிலைமை குறித்து அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் பாராளுமன்ற உறுப்பினருக்குத் தெளிவு படுத்தியதுடன் பாடசாலை தேவைகள் குறித்த கோரிக்கை கடிதம் ஒன்றிணையும் கையளித்தார்.

இச் சந்திப்பின் போது சமூக செயற்பாட்டாளர் எம்.ஏ.சீ.நியாஸ் ஹாஜி மற்றும் பாடசாலையின் பிரதி அதிபர்கள், பாடசாலையின் பழைய மாணவ சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி கட்சியின் ஆதரவாளர்கள்,மீராவோடை மேற்கு வட்டார செயற்பாட்டாளர் இர்ஷாத் என பலரும் கலந்து கொண்டனர்.

 #முன்னாள்  #அமைச்சர்  #எம். #எஸ். #எஸ்  #அமீர்  #அவர்களுடனான  #விசேட  #சந்திப்புமீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தை...
20/09/2025

#முன்னாள் #அமைச்சர் #எம். #எஸ். #எஸ் #அமீர் #அவர்களுடனான #விசேட #சந்திப்பு

மீராவோடை அல்- ஹிதாயா மகா வித்தியாலயத்தை பொறுத்தவரை பல்வேறு அபிவிருத்தி பணிகளை பாடசாலைக்காக கடந்த காலங்களில் பெற்று தந்தவர் என்ற அடிப்படையில் எமது பாடசாலையின் சிறந்த அடைவு மட்டங்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கிலும், எதிர்காலத்தில் பாடசாலையில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்தும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி அவர்களுடன் விசேட சந்திப்பு ஒன்று அன்மையில் இடம் பெற்றது.

இதன் போது பாடசாலை ரீதியாக நடைபெற்ற( 20 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான) கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டிகளில் கிழக்கு மாகாணத்தில் எமது பாடசாலை அணியினர் முதலிடம் பெற்று தேசிய மட்ட போட்டியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ள செய்தியினையும்,எமது பிரதேச பாடசாலைகளின் வரலாற்றில் முதல் தடவையாக எமது பாடசாலை கிரிக்கெட் அணியினர் முதன் முறையாக தேசிய மட்டப் போட்டிகளில் கலந்து கொள்கின்றமை குறித்த மகிழ்ச்சியான சங்கதியினையும் எம்மால் அங்கு பகிர்ந்து கொள்ள கிடைத்தது.

தொடர்ந்தும் பாடசாலையின் வளர்ச்சிக்கு தம்மால் முடியுமான பங்களிப்புக்களையும் ஒத்துழைப்புக்களையும் தான் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

இச் சந்திப்பின் போது பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் மற்றும் பிரதி அதிபர்கள், பாடசாலையின் பழைய மாணவரும் பிரதேச சபை உறுப்பினருமான எம்.எம்.எம்.ஹலால்தீன் உட்பட பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 #பாடசாலைக்காக  #நாம்  #என்ற  #உயர்  #நோக்கினை  #வெற்றி  #கொள்ளும்  #வேலைத்திட்டங்களைக்  #கையளிக்கும்  #நிகழ்வில்  #பிரத...
15/08/2025

#பாடசாலைக்காக #நாம் #என்ற #உயர் #நோக்கினை #வெற்றி #கொள்ளும் #வேலைத்திட்டங்களைக் #கையளிக்கும் #நிகழ்வில் #பிரதம #அதிதியாக #அல்- #ஹிதாயாவின் #பழைய #மாணவன் #நீதிபதி #ஐ. #என். #றிஸ்வான் #பங்கேற்பு

(எம்.ரீ.எம்.பாரிஸ்)

“பாடசாலைக்காக நாம்" என்ற அடிப்படையில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தினால் பல்வேறு வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், பாடசாலையின் பௌதீக வளர்ச்சி, மாணவர்களின் கல்வி முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களைக்கருத்திற்கொண்டு பாடசாலையில் பழைய மாணவிகளினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதற்கமைவாக பாடசாலையின் பழைய மாணவிகளின் நிதிப்பங்களிப்புடன் பாடசாலை நூலகம், பாடசாலை பிரதான நுழைவாயில், பாடசாலை மைதான அரங்கு மற்றும் பாடசாலை பிரதான மண்டபபுனரமைப்பு என்பன மேற்கொள்ளப்பட்டு அதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் தலைமையில் பழைய மாணவ சங்க உப தலைவி திருமதி ஏ.ஆ.கே.கமாலியா ஆசிரியையின் ஒருங்கிணைப்பில் பாடசாலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் நீதிபதியுமான ஐ.என் றிஸ்வான் கலந்து சிறப்பித்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் உள்ளிட்ட கல்வி அதிகாரிகள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள், பழைய மாணவ, மாணவிகள் என முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது, பாடசாலையின் பழைய மாணவரும் பிரதேசத்தின் முதலாவது நீதிபதியுமான ஐ.என் றிஸ்வான் பழைய மாணவ சங்கத்தினால் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன், கடந்த காலங்களில் பாடசாலையினை நெருக்கடியான சூழலில் பொறுப்பேற்று, பாடசாலையின் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து சுமார் இரண்டு வருடங்கள் மிகச்சிறப்பான முறையில் பாடசாலையின் எழுச்சிக்காக பங்காற்றி தமது சேவை மற்றும் பதவியின் நிமித்தம் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச்சென்ற பாடசாலையின் பழைய மாணவரும் முன்னாள் அதிபரும், பிரதிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜே.மர்சூக் (SLEAS) அவர்களின் சேவைநலன் பாராட்டி கௌரவிக்கப்பட்டதுடன், புதிய அதிபராக பாடசாலையினை பொறுப்பேற்றுள்ள அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர் அவர்களை வரவேற்று நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது உரையாற்றிய பாடசாலையின் பழைய மாணவரும் நீதிபதியுமான ஐ.என் றிஸ்வான்,
தனது பாடசாலைக்கால நினைவுகளை ஞாபகமூட்டிய அவர், பாடசாலைக்காக "பாடசாலையின் பழைய மாணவிகள் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்புமிக்க பணிகளை பெரிதும் பாராட்டினார், பெண்களின் சமூக பங்களிப்பு மிகப்பிரதானமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் பாராட்டியவர் தான் கற்ற பாடசாலையின் இந்நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொள்வது தமக்கு பெரும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இதற்கான தளத்தை இப்பாடசாலையை தமக்கு உருவாக்கித் தந்ததாகக் குறிப்பிட்டார்.

மேலும், இந்நிகழ்வில் தான் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்தியமைக்காக பழைய மாணவ சங்கத்திற்கு தமது நன்றி, பாராட்டுகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 #சேவை  #நலன்  #பாராட்டும்  #புதிய  #அதிபர்  #வரவேற்பு  #நிகழ்வும்"பாடசாலைக்காக நாம்" எனும் உயர் நோக்கின் அடிப்படையில்  ...
29/07/2025

#சேவை #நலன் #பாராட்டும் #புதிய #அதிபர் #வரவேற்பு #நிகழ்வும்

"பாடசாலைக்காக நாம்" எனும்
உயர் நோக்கின் அடிப்படையில் மட்/மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவ சங்கத்தினால் பல்வேறு வினைத்திறன் மிக்க செயற்பாடுகள் பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் பாடசாலையின் பௌதீக வளர்ச்சி மாணவர்களின் கல்வி முன்னேற்றம் போன்ற பல்வேறு விடயங்களை கருத்தில் கொண்டு நெருக்கடியான சூழலில் பாடசாலையினை பொறுப்பேற்று,பாடசாலையின் பழைய மாணவர்களை ஒருங்கிணைத்து சுமார் இரண்டு வருடங்கள் மிகச் சிறப்பான முறையில் பாடசாலையினை
முன் கொண்டு சென்று முன்னுதாரணமாக செயற்பட்டு தமது சேவை மற்றும் பதவியின் நிமித்தம்
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற எமது பாடசாலையின் பழைய மாணவரும் ,முன்னாள் அதிபரும்,பிரதிக்கல்விப் பணிப்பாளருமான ஏ.ஜே.மர்சூக் (SLEAS) அவர்களின் சேவை நலனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வும்,புதிய அதிபராக பாடசாலையினை பொறுப்பேற்று இருக்கின்ற அதிபர் ஏ.சீ.எம்.அஜ்மீர்( SLPS II) அவர்களை வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வும் பழைய மாணவ சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மைதானத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

பழைய மாணவ சங்கத்தின் உறுப்பினரும்,அதிபருமான எம்.சீ.ஐயூப்கான் தலைமையில் பழைய மாணவ சங்கத்தின் ஊடக பிரிவு பொறுப்பாளரும், ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஏ.ஜே.மர்சூக் (SLEAS) அவர்களின் சேவை நலனை பாராட்டி பழைய மாணவ சங்கத்தினால் ஒரு இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,புதிய அதிபரையும், வரவேற்று அவருக்கான சிறப்பு கெளரவமும் நினைவுச் சின்னமும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் எமது பாடசாலையின் பழைய மாணவர்களான கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரீ.அஜ்மீர்,ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் ஏ.எச்.நுபையிர்,பிரதேச சபை உறுப்பினர்களான கே.பீ.எஸ்.ஹமீட்,ஐ.எம்.றிஸ்வி உள்ளிட்ட சபையின் செயலாளர் எஸ்.ஏ.அமீர்,பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழுச் செயலாளர் எம்.என்.எம்.சாஜஹான் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களான எம்.எல்.அன்ஸார்,சாதாத்,ஜாபீர் ஹரீம்,நிஜாம்தீன், உபைத்,முஹாஜீரின்,முபாறக் மெளலவி உட்பட மீராவோடை மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் உள்ளிட்ட ஏராளமான பழைய மாணவர்கள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

ஊடகப்பிரிவு,
பழைய மாணவ சங்கம்.
மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயம்.

அல் அக்ரம் விளையாட்டு கழகத்தின் முன்மாதிரி : இப்தார் நிகழ்வும் கெளரவிப்பு வைபவமும்.எமது மட்/ மீராவோடை அல்-ஹிதாயா மகா வித...
28/03/2025

அல் அக்ரம் விளையாட்டு கழகத்தின் முன்மாதிரி : இப்தார் நிகழ்வும் கெளரவிப்பு வைபவமும்.

எமது மட்/ மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தின் மாணவர்கள் கடந்த மாதம் 19 வயதுக்கு கீழ் பட்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுத்தொடரின் கிழக்கு மாகாண சம்பியனாகவும், தேசிய மட்ட போட்டியில் காலிறுதி வரைக்கும் சிறப்பானதொரு ஆட்டத்தினை பதிவு செய்து இருந்தது.

இதனை கெளரவிக்கும் முகமாக வியாழக்கிழமை (27.03.2025) பிற்பகல் 5.30 மணியளவில் பாடசாலையின் கேட்போர் கூடத்தில் தேசிய மட்டப் போட்டியில் காலிறுதி வரை அணியினை பலப்படுத்தி ஹிதாயாவின் பெயரினை தேச மெங்கும் ஒலிரச் செய்த எமது பாடசாலையின் விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் கிரிக்கெட் அணியினர் உள்ளிட்ட பாடசாலையின் அதிபர் அவர்களை கெளரவிக்கும் நிகழ்வொன்றினை மீராவோடை அல்- அக்ரம் விளையாட்டு கழகம் ஏற்பாடு செய்திருந்தது .

இந்நிகழ்வில் அதிபர் உரையாற்றுகையில் பாடசாலையின் அபிவிருத்தியில் பங்காளர்களாக திகழும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க ஊடக இணைப்பாளரும் ஊடகவியலாளருமான எம்.ரீ.எம். பாரிஸ் அவர்களுக்கும் எமது பாடசாலையின் ஊடக செய்தியினை வெளியிடும் பாடசாலையின் பழைய மாணவன் றிப்னாஸ்(2k20 O/L) அவர்களுக்கும் குறிப்பிட்ட காலத்தில் அதிகளவான நிதிப்பங்களிப்பை வழங்கிய சித்தீக் (ஹாஜியார்) அவர்களுக்கும் எஸ்.ஐ.அன்வர் ஆசிரியர் அவர்களுக்கும் பாடசாலையின் முதல்வர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதில் எமது பாடசாலையின் வெற்றியினை தனதாக்க நிதி மற்றும் உடலுதவிகளை வழங்கிய எமது பாடசாலையின் பழைய மாணவர்களும் அல்- அக்ரம் விளையாட்டு கழகத்தின் விளையாட்டு வீரருமான BM பர்சான் அவர்களுக்கும் பாடசாலையின் பழைய மாணவர் சங்க பொருளாளர் BMஅலாவுதீன் அவர்களுக்கும் பெற்றோர்கள் சார்பில் பாரிய பங்களிப்பினை வழங்கிய குசைர் அவர்களுக்கும் பதக்கம் அனுவித்து கெளரவிக்கப்பட்டனர்.

இவ்வாறான கௌரவிப்பு நிகழ்வுகளை நடாத்தி மாணவர்களை ஊக்கப்படுத்த முன் வந்த அல்-அக்ரம் விளையாட்டுக் கழகத்தினருக்கு பாடசாலையில் பழைய மாணவர் சங்கம் நமது நன்றி பாராட்டுக்களை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேராதரவுடன் எமது பழைய மாணவர்கள் இன்று10.03.2025 நடைபெறும்  கிரிக்கெட் போட்டி நிகழ்வில் : பொலநறுவை
10/03/2025

பேராதரவுடன் எமது பழைய மாணவர்கள் இன்று10.03.2025 நடைபெறும் கிரிக்கெட் போட்டி நிகழ்வில் : பொலநறுவை

Address

School Road,Meeravodai,sri Lanka

30426

Website

Alerts

Be the first to know and let us send you an email when Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Past Pupils' Association -Al Hidaya Maha Vidyalaya-Meeravodai:

Shortcuts

  • Want your school to be the top-listed School/college?

Share