06/01/2023
ஞாபகமூட்டல்
நேர்முகப்பரீட்சை 2023
எமது கல்லூரியின் 2023 ஆம் ஆண்டின் ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுக்கான புதிய மாணவிகளை உள்ளீர்ப்பதற்கான நேர்முகப் பரீட்சை இன்ஷா அல்லாஹ் நாளை சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் கல்லூரியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகின்றோம்.
அத்தோடு ஏற்கனவே விண்ணப்பிக்கத் தவறிய மாணவிகளையும் அழைத்து வருவதற்கான சந்தர்ப்பத்தை கல்லூரி வழங்குகின்றது.
இந்நேர்முகப் பரீட்சையானது ஹிப்ழ் மற்றும் ஷரீஆ பிரிவுக்குரிய தரம் 6,7 மற்றும் தரம் 8 க்குரிய மாணவிகளுக்கானதாகும்.
உங்கள் அன்பு மகள்களுக்கான பாதுகாப்பான, ஒழுக்க விழுமியங்களுடனான, அல்குர்ஆன் ஹதீஸ் அடிப்படையிலான, துறைசார்ந்த உலமாக்களைக் கொண்ட வழிகாட்டலையும் தொழிற்கல்வி மற்றும் பல்கலைக்கழக நுழைவிற்கான வழிகாட்டலையும் எமது கல்லூரி வழங்குகின்றது.
எனவே அனைத்து மாணவிகளையும் அழைத்து வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நிருவாகம்