17/06/2026
நடைபெற்று முடிந்த தமிழ்த்தினப் போட்டி முடிவுகளின் அடிப்படையில்
கோட்டமட்டத்தில்
முதலாம் இடம் - 07
இரண்டாம் இடம் - 07
மூன்றாம் இடம் - 06 மொத்தம்மாக
25 போட்டிகளில் 20 இடங்களையும்
வலயமட்டத்தில்
முதலாம் இடம் - 02
இரண்டாம் இடம் - 01
மூன்றாம் இடம் - 02 மொத்தம்மாக 05 இடங்கள் பெறப்பட்டு
தனிநடிப்பு
செல்வன. த.தமிழ்ப்பிரியன்
குறுநாடக ஆக்கம்
செல்வி.அ.விதுசா ஆகியோர் மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்ககு வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவிப்பதுடன் இவர்களுக்கு பயிற்சியளித்து வழிகாட்டிய ஆசிரியர்களான
திரு. சிவநாதன் மேனகதீபன்
திரு.கேதீஸ்வரன் கஜவரதன்
திருமதி.ஜெயந்தி சந்திரகாந்தன்
திரு. யோகநாதன் சிவகரன்
திருமதி. சுயந்தினி துஷ்யந்தன்
செல்வி. கஜீபா ஞானசேகரம்
திருமதி. சங்கீதா அஜன்.
திருமதி.ருக்குமணி ஜெயசீலன்
திரு.தவயோகராஜா குமணன்
திரு.மனோகரன் லாவன்சன்.
ஆகியோருக்கு வாழ்த்துக்ளும்,பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
12/06/2026
எமது பாடசாலையில் 11.06.2026 ஆலோசனை வழிகாட்டலுக்குபொறுப்பான ஆசிரியர் திருமதி.வலஜி செந்தூரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு நடைபெற்றது.
இச்செயலமர்வில் வளவாளராக வடக்கு மாகாண உள சமூக செயற்பாட்டிற்கு முகாமையாளராக கடமையாற்றிய ஓய்வு பெற்ற செல்வி.உதயகலா சிவபாதசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டார்
இதற்கான அனுசரணையை யாழ்ப்பாணம் இந்து கல்லூரி
பழையமாணவர் சங்கம் அவுஸ்ரேலியா-விக்ரோரியா கிளை வழங்கியிருந்தது.
இந்த விழிப்புணர்வு செயலர்வை ஒழுங்கு செய்த எமது ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் திருமதி.வலஷி செந்தூரன் அவர்களுக்கும் அனுசரணை வழங்கிய யாழ் இந்துக்கல்லூரி பழைய மாணவர் சங்கம் அவுஸ்ரேலியா-விக்ரோரியா கிளையினருக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.
12/06/2026
05.06.2026 அன்று எமது பாடசாலையின் உற்பத்தி திறன் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்கொள்ளப்பட்டது வருகைதந்து எம்மோடு அன்பாக கலந்துரையாடி பல்வேறு விடயங்கள் தொடர்பாக பார்வையிட்டதுடன் பல்வேறு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தமைக்கு நன்றிகள் உரித்தாகட்டும்.
12/06/2026
எமது கல்லூரியின் உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து 04.06.2026 அன்று உற்பத்தித்திறன் தொடர்பான விடயங்களை அறியும் பொருட்டு பூநகரிப் பிரதேச செயலகத்திற்கு களப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விடயங்களை தெரிந்து கொண்டனர்.
ஆசிரியர்கள்,மாணவர்களை அன்பாக வரவேற்று அவர்களுக்கு விளக்கங்களை வழங்கிய பூநகரி பிரதேச செயலக உத்தியோகத்தவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
11/06/2026
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு 04.06.2026 அன்று எமது பாடசாலையின் உயர்தர மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச சபையின் அனுசரணையுடன் பாடசாலையின் சமூகச்செயற்பாடாக மன்னார் வீதியோரத்தில் அமைந்துள் அமரர் இராசநாயகம் நினைவாக அமைக்கப்பட்ட பேரூந்து தரிப்பிடம் தூய்மையாக்கப்பட்டது இதில் பங்கு கொண்டுழைத்த மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பிரதேச சபை ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களும் நன்றிகளும் உரித்தாகட்டும்.
11/06/2026
கல்வியமைச்சின் அனுசரணையுடன் இலங்கை பள்ளி சதுரங்க சங்கத்தினால் நடாத்தப்பட்ட வலய மட்ட சதுரங்கப்போட்டியில் வெற்றி பெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவாகியுள்ள
Under 8 Girls N.Narmitha Third Place
Under 8 Girls M.A.Teshani Forth Place
Under 14Boys L.Kethusan Merit. ஆகியோரை மன நிறைவோடு பாராட்டி வாழ்த்துகின்றோம் அத்துடன் L.Kethusan அவர்கள் சிதம்பரா கணிதப்போட்டியில் பரிசுபெறத்தகுதிபெற்றுள்ளார்.
இவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்கள்
திரு.த.லக்சன்
திருமதி.சி.ஜெயவாணன்
திரு.ந.டிலக்ஸ்குமார்
ஆகியோருக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்.
11/06/2026
SSC International Chess Academy நடாத்திய District Individual Champion Ship போட்டியில் எமது மாணவர்கள் தாமாகவே விண்ணப்பித்து பங்குபற்றி
Miss.M.A.Teshani-First Place(Champion)
Miss.N.Narmitha -Second Place (Runnner Up)
இக்குழந்தைகளின் வெற்றிக்காகவும்,முயற்சிக்காகவும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்வதில் பாடசாலை பெருமிதம் அடைகின்றது.
10/06/2026
எமது கல்லூரியின் மாணவி செல்வி.அ.ஜெனிஸ்ரலா மாகாண மட்ட கராத்தே(Kumite) போட்டியில்
18 கீழ்ப் பிரிவில் முதலாம் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளார் சாதனை வீராங்கனைக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதில் கல்லூரி பெருமையடைகின்றது.
இவருக்கு பயிற்சியளித்து வெற்றிவாகை சூடவைத்த கராத்தே பயிற்றுவிப்பாளர் திரு.அ.அமலதாஸ் அவர்களுக்கும் மாணவியை தொடர்ந்தும் இணைப்பாடவிதான செயற்பாடுகளில் சாதிப்பதற்கான ஆதரவை வழங்கி வரும் இணைக்கலைத்திட்டத்தின் முக்கியத்துவத்தினை நன்கு உணர்ந்த பெற்றோர்களுக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்களும்,நன்றிகளும் உரித்தாகட்டும்.
08/06/2026
எமது பாடசாலையின் வணிகக்கழகம் மற்றும் முயற்சியாண்மைக்கழகம் என்பவற்றின் ஏற்பாட்டில் இலங்கை வங்கியின் பாடசாலைக்கிளை 04.06.2026 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிகழ்வில் பூநகரி இ@லங்கை வங்கியின் முகாமையாளர் திரு.க.நிருபன் அவர்களும் மற்றும் வங்கி பணிக்குழுவினரும் கலந்து சிறப்பித்தனர் மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் இந்த முயற்சிக்காக இலங்கை வங்கியின் பூநகரி கிளையின்
முகாமையாளர் அவர்களுக்கும் எமது பாடசாலையின் வணிகக்கழகம் மற்றும் முயற்சியாண்மைக் கழகம் என்பவற்றின் பொறுப்பாசிரியர்கள் திருமதி.வினோதினி செல்வக்குமார்,திருமதி.நிறோஜா தபோகரன் அவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து ஆசிரியர்கள், மாணவர்கள்,பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.
05/06/2026
பூநககரி மத்திய கல்லூரி மிகப்பெரிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
கிளிநொச்சி தெற்கு வலய பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் மொத்தமாக 155 புள்ளிகளைப் பெற்று முதலாம் நிலையை பெற்று வலயமட்ட சம்பியனாக சாதனை படைத்துள்ளது.
ஆண்கள் அணி மொத்தமாக 100 புள்ளிகளைப் பெற்று முதலாம் இடத்தை பெற்றுளது.
பெண்கள் அணி மொத்தமாக 55 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.
இரு அணிகளும் மொத்தமாக 155 புள்ளிகளைப் பெற்று வலய மட்ட சம்பியனாக எமது கல்லூரி வரலாற்று சாதனை படைத்துள்ளது.
அஞ்சல் ஓட்டம் ஆண்கள் அணி முதலாம் இடம்.
அஞ்சல் ஓட்டம் பெண்கள் அணி முதலாம் இடம்.
3000 மீற்ரர் ஓட்டத்தில்
செல்வன்.பி.யோசுவா சிறந்த தடகளவீரனாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்திய மாணவ செல்வங்களுக்கு உளப்பூர்வமான வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரித்துக்கொள்வதில் பாடசாலை பெருமையடைகின்றது.
இந்த வரலாற்று சாதனைக்காக தங்களை முழுமையாக அர்ப்பணித்து பாடசாலைக்கு உயரிய கௌரவத்தை பெற்றுத்தந்த எமது கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் செல்வி.பா.தாட்சாயினி அவர்களுக்கும்,எமது கல்லூரியின் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு.ந.டிலக்ஸ்குமார் அவர்களுக்கும் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய ஆசிரியர்கள்,பணியாளர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும்.