09/11/2025
நாளை க.பொ.உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் எமது மாணவச் செல்வங்களுக்கு மிகவும் துல்லியமான முறையில் பரீட்சை முகங்கொடுத்து சிறந்த பெறுபேற்றை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து தர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை புரிவதுடன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.
13/02/2025
எமது பாடசாலையின் சுற்றுச்சூழல் மேம்பாடு !
எங்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுப் பகுதி மாணவர்களுக்காக தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது! ஆரம்பப் பிரிவின் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியை உருவாக்க உதவிய 1ஆம் வகுப்பு பெற்றோருக்கு நன்றிகள்.
அத்தோடு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குளுவின் கோரிக்கையை ஏற்று இம்முயற்சிகளில் கைகோர்த்து செயல்பாட்டு மண்டபத்தின் தடுப்புச்சுவரை புதுப்பித்து, அப்பகுதியை மேலும் பசுமையாக மாற்ற உதவிய எமது பாடசாலையின் 1999ம் ஆண்டு பழைய மாணவர்கள் குழுவுக்கு எமது மனமார்ந்த சிறப்பு நன்றிகள்.
ஒன்றுபட்டு செயல்பட்டு, எங்கள் மாணவர்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவோம்!
24/12/2024
23 டிசம்பர் 2024 (நேற்று) தெஹியங்க அல் அஸ்ஹர் கேட்போர் கூடத்தில் காலை 9:00 மணிக்கு நடைபெற்ற சாரணர் பதக்கம் வழங்கும் விழாவின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்வில் எமது பிரதம அதிதியாக அல்ஹாஜ் எம்.டி.எம். ஷாபி அவர்களின் வருகையும் ஆதரவும் இந்த நிகழ்விற்கு மகத்தான மதிப்பைச் சேர்த்தது. லெப்டினன்ட் கர்ணல் எம்.எச்.எம். ரவூஃப் அவர்கள் எங்கள் தலைமைப் பயிற்சியாளராவார், அவருடைய விலைமதிப்பற்ற வழிகாட்டுதலும் அர்ப்பணிப்பும் எங்கள் சாரணர்களை உண்மையிலேயே ஊக்கப்படுத்தியது. பாடசாலை அதிபர் தலைமையில், சாரணர் பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டலில் கீழ் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெற்றோர்களின் பங்களிப்பினூடாக சிறந்த முறையில் இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு காட்சியாக அமைந்தது
சாரணர் ஒழுக்கம், குழுப்பணி, தலைமைத்துவம் மற்றும் சமூகத்திற்கான சேவை போன்ற இன்றியமையாத மதிப்புகளை உருவாக்குகிறது, மேலும் இந்த இளம் சாரணர்கள் அவர்களின் சிறந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர், அவர்கள் எமது பாடசாலைக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இந்நிகழ்விற்கு வருகை தந்து ஆதரவளித்து இந்நிகழ்வை சிறப்பித்ததற்காக அல்ஹாஜ் எம்.டி.எம். ஷாபி அவர்களுக்கும், லெப்டினன்ட் கர்ணல். ரவூஃப் சார் அவர்களின் அயராத முயற்சிகளுக்காகவும் எங்கள் சாரணர்களை சாதனையாளர்களாக மாற்றுவதற்காகவும், SDEC மற்றும் OBA க்கு இந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காகவும் அல்அஸ்ஹர் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் 27 டிசம்பர் 2024 அன்று நடைபெறவிருக்கும் Kanboree க்கு தயாராகும் எங்கள் சாரணர்களுக்கு நல்வாழ்த்துக்கள். அவர்களின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள், மதிப்புமிக்க கற்றல் அனுபவங்கள் மற்றும் சாகச மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டுவரட்டும். அத்தோடு பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள், ஜம்போரிக்கு தயாராகும் எங்கள் சாரணர்களுக்கு வாழ்த்தி ஒன்றாக, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.
குறிப்பாக இந்நிகழ்விற்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவோடு இணைந்து உதவிய அல்ஹாஜ் நஸ்ரி சலீம் அவர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
18/12/2024
The students who achieved an average of 75% or above in the Second Term Examination (2024) were rewarded with gift packs generously sponsored by Mr. Mohammed Nawshad (Saudi Arabia), the son of Mr. Najmudeen (Postmaster) and the great-grandson of the school’s founder, the late Manager Al Haj H.L. Omer Lebbe.
May the Almighty Allah accept his good deeds and bless him with barakah in all his endeavors!
30/10/2024
எமது, தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபரின் பரிந்துரையின் கீழ் மாணவர்களின் தலைமைத்துவ, ஒழுக்க மற்றும் ஆளுமை விருத்தியை உருவாக்கும் திட்டத்தின் அடிப்படையில் அதிபரின் தலைமையின் கீழ் இன்றைய தினம் தரம் 6, 7, 8 ஆண் மாணவர்களுக்கான சாரணர் பயிற்சிப் பாசறை (Scouts) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இச் சாரணர் பயிற்சியானது ஓய்வு பெற்ற இராணுவப் படை அதிகாரி கர்னல் M.H.M. ரவ்ப் அவர்களினால் நடாத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
18/10/2024
எமது தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் அதிபர் மன்சூர் மபாஹிர் அவர்களின் தலைமையின் கீழ் எமது ஊர் தெஹியங்கை அஹதிய்யா பாடசாலையை முன்னேற்றுவதை அடிப்படையாகக் கொண்டு அதிபர் அவர்களின் முயற்சியில் பாடசாலை நிர்வாகத்தையும் எமது ஊர் முஹியித்தீன் ஜும்ஆப்பள்ளி நிர்வாகத்தையும் மற்றும் தெஹியங்கை அஹதிய்யா பாடசாலை நிர்வாகத்தையும் ஒன்றினைத்து எமது ஊர் பிள்ளைகளின் ஒழுக்கம் , மார்க்கக் கல்வி, நடத்தை மற்றும் பண்புகளை விருத்தி செய்யும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக இன்றைய தினம் நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வானது தெஹியங்கை ஊரின் ஒரு வரலாற்றுமிக்க ஒரு நிகழ்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதே போன்று இந்நிகழ்வானது எமது ஊரின் பிரதான தலைமைகளை இணைக்கும் ஒரு பாலமாக அமைந்தமையும் ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும். அத்துடன் இந்நிகழ்வின் போது பிரதம பேச்சாளராக திறன் விருத்தி பயிற்றுவிப்பாளர் ஆசிக் M. நியாஸ் அவர்களும் கலந்துகொண்டார்கள்.
14/10/2024
WHATS NEXT AFTER O/L’s?
1. After completing O/L (Ordinary Level) examinations, students typically progress to A/L (Advanced Level) studies, which are crucial for university entrance and higher education opportunities.
2. Selecting subjects for A/L requires careful consideration of personal interests, career aspirations, and the prerequisites for desired university courses. It's essential to choose subjects that align with future goals while also considering strengths and weaknesses.
3. Achieving life goals through A/L studies involves setting clear objectives, staying organized, and being committed to your studies. Developing effective study habits and seeking support when needed can also play a significant role in success.
4. To prepare for the job market by 2030, students should focus on acquiring skills that are in demand, such as digital literacy and critical thinking. Engaging in internships, networking, and gaining practical experience can further enhance employability.
31/08/2024
தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் , எமது கல்லூரியின் முன்னாள் விஞ்ஞான பாட ஆசிரியருமான ( 1977-1990) ஜனாப். ரவுப்டீன் ( Mr. Raufdeen ) அவர்களால் பாடசாலைக்கு அன்பளிப்பாக 03 மின் விசிறிகள் ( fans) வழங்கப்பட்டது. அன்னாரின் வாழ்க்கையில் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக!
Three electric fans were donated to the school by Mr. Raufdeen, a past pupil of K/Dehianga Al Azhar Central College and a former science teacher at our college from 1977 to 1990. May Allah reward him abundantly for his kindness and grant him good health, happiness, and success in this life and the hereafter.
29/08/2024
தெஹியங்க அல் அஸ்ஹர் கால்பந்தாட்ட அணியை ஊக்குவித்தல் மற்றும் ஆதரவளிக்கும் நோக்கில் எமது பாடசாலையின் பழைய மாணவர் ஜனாப். ஷிராஸ் அஷ்ரஃப் (இங்கிலாந்து) அவர்கள் ரூபா. 55,000 பெறுமதியான கால்பந்துகளை பாடசாலைக்கு வழங்கி உதவியுள்ளார். அக்கால்பந்துகளை எமது அதிபர் மன்சூர் மஃபாஹிர் அவர்களிடம் ஜனாப். அசீஸ் அஹமட் அவர்கள் கையளித்து வைத்தார்.
ஜனாப். ஷிராஸ் அஷ்ரஃப் அவர்களின் பெருந்தன்மையான இந்த ஆதரவிற்கு பாடசாலை சார்பாக எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
To encourage and support the Dehianga Al Azhar football team, our alumnus Mr. Shiraz Ashraf (England) has donated footballs worth LKR 55,000 to the school. The footballs were handed over to our Principal Mr. Mansoor Mafahir by Mr. Asees Ahamed. We would like to express our sincere thanks to Mr. Shiraz Ashraf for his generous support.
23/08/2024
Hard Fought, Not Forgotten. We’ll rise stronger.
Al Azhar Pride!
22/08/2024
Hard Fought Battle! ⚽️
Our Al Azhar College football team showed immense heart and determination in today's match against Trinity College, Kandy. Although the final score was 0-2, the effort and teamwork on the field were truly inspiring.
Every challenge is a stepping stone towards greatness, and we know our boys will come back stronger, hungrier, and more determined than ever.
Keep your heads up, keep pushing forward, and let's continue to build on this experience.
Proud of you all!💪🏽