Al-Azhar Central College-Dehianga

Al-Azhar Central College-Dehianga Strive To Succeed
(1)

18/07/2026
தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனைIFMA School Muay Thái World Championship- 2026Silver Me...
29/06/2026

தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரி மாணவன் சர்வதேச ரீதியில் சாதனை

IFMA School Muay Thái World Championship- 2026

Silver Medal Winner / வெள்ளிப் பதக்கம் வென்றவர்

எமது தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவன் M. I. YAHYA ( Mr. J. M. Irfan & Mrs. Saneera Irfan ஆகியோரின் மகன்) வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளார்.

ஜூன் மாதம் -2026 மலேசியா நாட்டின் தலைநகரான கோலாலம்பூரில் நடைபெற்ற, உலகில் 50 இற்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 1400 போட்டியாளர்கள் கலந்து கொண்ட
IFMA School Muay Thái World Championship- 2026 போட்டிகளில் 14 வயது பிரிவின் கீழ்
போட்டிகளில் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கத்தை வெற்றியீட்டியுள்ளார் அவருக்கு எமது வாழ்த்துக்கள்.

எமது இலங்கை திருநாட்டின், எமது தெஹியங்கை கிராமத்தின்,
எமது தெஹியங்கை அல்-அஸ்ஹர் மத்திய கல்லூரியின் புகழை உலகிற்கு பறைசாட்டிய மாணவன், இளம் வீரன் M. I. YAHYA - அவர்களுக்கு எமது பாராட்டுக்கள். இன்னும் பல சாதணைகளை புரிய
அதிபர், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு மற்றும் பழைய மாணவர்கள் சார்பாக வாழ்த்துகிறோம். அல்லாஹ் மென்மேலும் அருள் புரிவானாக.

மேலும் இவரை பயிற்றுவித்த IMA (Iron Martial Arts Association) கழகத்தின் பயிற்றுவிப்பாளர் M. H. M. Fahid அவர்களுக்கும் எமது பாராட்டுக்கள்.

நன்றி

அதிபர்,
ஆசிரியர்கள்,
பாடசாலை அபிவிருத்திக் குழு
மற்றும் பழைய மாணவர்கள்.

எமது பாடசாலைக்காக ACM Hardware Pvt Ltd, ACM Paint Pvt Ltd  மற்றும் ACM Colour Mart Pvt Ltd ஆகிய நிறு வனங்களின் உரிமையாளர...
23/03/2026

எமது பாடசாலைக்காக ACM Hardware Pvt Ltd, ACM Paint Pvt Ltd மற்றும் ACM Colour Mart Pvt Ltd ஆகிய நிறு வனங்களின் உரிமையாளர்களான மற்றும் எமது பாடசாலையின் பழைய மாணவர்களான Al
-Haj A.C.M Fahim மற்றும் ஜனாப் A.C.M Nasrudeen ஆகியோர்களினால் சுமார்
Rs.320,000.00 பெறுமதியான Dulux Pentalite Prmium Paint 200 Litre நிற பூச்சு கடந்த ஞாயிற்று கிழமை 22.03.2026 அன்று அன்பளிப்பு செய்யப்பட்டது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் .

இவ் அன்பளிப்பு எமது பாடசாலையின் மாணவ மாணவிகளது அழகிய கற்றல் சூழலை மேலும் அழகுபடுத்துவதாக அமைதுள்ளது .

எனவே மேலான இந்த ஸதகாவை எல்லாம் வல்ல அல்லாஹ் பொருந்திக்கொண்டு அவர்களுக்கும் அவர்களினது குடும்பத்தினர்களுக்கும் குறிப்பாக அவர்களுடைய தந்தை மர்ஹூம் Al Haj M.L.A கரீம் மௌலவி(முன்னால் ஆசிரியர் தெஹியங்க அல் - அஸ்ஹர் ம.க) அவர்களுக்கும் மேலான ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சுவர்கத்தை வழங்குவனாக.

ஆமீன்

அதிபர் , ஆசிரியர்கள், மாணவர்கள்,
பெற்றோர்கள் மற்றும்
பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு (SDEC)

நெஞ்சார்ந்த  நன்றிகள்!அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.எமது பாடசாலையின் ஆரம்பப் பிரிவிற்கு நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த பிரதான ...
12/03/2026

நெஞ்சார்ந்த நன்றிகள்!

அஸ்ஸலாமு அலைக்கும் வ.வ.

எமது பாடசாலையின் ஆரம்பப் பிரிவிற்கு நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த பிரதான நுழைவாயிலுக்கான இரும்புக் கதவு - (Gate) மற்றும் முற்புற பாதுகாப்பு மதில் அமைக்கும் பணிகள் சிறப்பாக நிறைவு பெற்றுள்ளன.

இவ்விரு தேவைகளையும் தாமாக முன்வந்து மிகவும் அழகிய முறையில் நிர்மாணித்து, ஆரம்பப் பிரிவின் நுழைவிடத்தை மெருகூட்டிய தரம் 1 மாணவர்களின் அன்புப் பெற்றோர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

பாதுகாப்பு மதில் எமது சிறார்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அழகிய நுழைவாயில் பாடசாலையின் அழகை இரட்டிப்பாக்கியுள்ளது

மேற்படி பாடசாலையின் பௌதீக வளர்ச்சிக்கு நீங்கள் வழங்கிய இந்தப் பங்களிப்பு, கற்கும் அனைத்துச் சிறார்களின் பாதுகாப்பான மற்றும் அழகிய கல்விச் சூழலை உருவாக்குவதில் மிகவும் பயனுள்ள அம்சமாக அமைந்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!

அர்ப்பணிப்புடன் கூடிய உங்கள் ஆதரவுகள் தொடர்ந்திடவும், இவ்வாறான அனைத்து நற்செயல்களையும் வல்லோன் அல்லாஹ் பொருந்திக்கொள்ள வேண்டுமென, பிரார்த்திப்பதுடன், உங்கள் ஒத்துழைப்புக்கு மீண்டும் ஒருமுறை எமது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஜஸாக்கல்லாஹு கைரன்!

நன்றியுடன்,
பாடசாலை நிறைவேற்று அபிவிருத்திப் பணிக்குழு (SDEC)
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரி

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹுபாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணி சம்பந்தமான அறிவித்தல்தெஹியங்க அல் அஸ...
23/01/2026

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹு

பாடசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட காணி சம்பந்தமான அறிவித்தல்

தெஹியங்க அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் அன்பான வேண்டுகோளுக்கிணங்க,
அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் ஸ்தாபகர் அல்ஹாஜ் உமர் லெப்பை ஹாஜியார் அவர்களது புதல்வி

மர்ஹூமா சித்தி ஸனுபா(ஆசிரியை) அவர்களது பிள்ளைகள்,
15.01.2026 (வியாழக்கிழமை) அன்று எமது பாடசாலைக்கு வருகை தந்து,

🏫 பாடசாலைக்கு முன்பாக அமைந்துள்ள தமது பெறுமதிமிக்க காணியை
அண்மையில் மறைந்த தமது தாயான மர்ஹூமா சித்தி ஸனுபா (ஆசிரியை) அவர்களது பெயரில்,
அல்லாஹ்வுக்காக எமது பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள் என்பதனை
ஊர் ஜமாஅத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்.

📌 இந்நிகழ்வில், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
பாடசாலையின் பிரதி அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் உட்பட உறுப்பினர்கள்,
மற்றும் தெஹியங்க,குருகம பகுதிகளுக்குப் பொறுப்பான கிராம உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

👉 இந்நிகழ்வின் போது, மர்ஹூமா சித்தி ஸனுபா ஆசிரியை அவர்களது பிள்ளைகள்,
பாடசாலைக்காக தமது காணி அன்பளிப்பை உத்தியோகபூர்வமாக அறிவித்ததுடன்,
தமது தாயின் மறுமை வாழ்வின் ஈடேற்றத்திற்காக
அனைவரும் தங்களது துஆக்களில் தமது தாயை இணைத்துக்கொள்ளுமாறு
அன்புடன் வேண்டுகோள் விடுத்தனர் என்பதையும் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

🌱 இவ்வுயரிய சதகா ஜாரியா,
எமது பாடசாலையின் உட்கட்டமைப்பு வளர்ச்சி
கல்வி வசதிகளின் மேம்பாடு மற்றும்
மாணவர்களின் கல்வி நலன் உயர்விற்கு
நீடித்த பயனை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம்(SDEC), மாணவர்கள், பெற்றோர்கள்
மற்றும் ஊர் மக்கள் ஆகியோரின் சார்பில்,
எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

🤲 வல்ல அல்லாஹ்,
மர்ஹூமா சித்தி ஸனுபா ஆசிரியை அவர்களது அனைத்துப் பாவங்களையும் மன்னித்து,
மண்ணறை மற்றும் மறுமை வாழ்வை சிறப்பாக்கி,
மேலான ஜன்னத்துல் ஃபிர்தௌஸை நிரந்தரமாக வழங்குவானாக.
இந்த காணியை அன்பளிப்புச் செய்த அவர்களது பிள்ளைகள் உட்பட
நம் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக. ஆமீன்.


SDEC
School Development Executive Committee

நாளை க.பொ.உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் எமது மாணவச் செல்வங்களுக்கு மிகவும் துல்லியமான முறையில் பரீட்சை முகங்கொடுத்து சிற...
09/11/2025

நாளை க.பொ.உயர்தர பரீட்சை எழுதவிருக்கும் எமது மாணவச் செல்வங்களுக்கு மிகவும் துல்லியமான முறையில் பரீட்சை முகங்கொடுத்து சிறந்த பெறுபேற்றை பெற்று எமது பாடசாலைக்கு பெருமை சேர்த்து தர வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை புரிவதுடன் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துகொள்கிறோம்.

எமது பாடசாலையின் சுற்றுச்சூழல் மேம்பாடு !எங்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுப் பகுதி மாணவர்களுக்காக தொடர்ந்து மேம்படுத்தப்...
13/02/2025

எமது பாடசாலையின் சுற்றுச்சூழல் மேம்பாடு !

எங்கள் பாடசாலையின் ஆரம்பப் பிரிவுப் பகுதி மாணவர்களுக்காக தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது! ஆரம்பப் பிரிவின் சுற்றுச்சூழலை சுத்தம் செய்து, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதியை உருவாக்க உதவிய 1ஆம் வகுப்பு பெற்றோருக்கு நன்றிகள்.

அத்தோடு பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக்குளுவின் கோரிக்கையை ஏற்று இம்முயற்சிகளில் கைகோர்த்து செயல்பாட்டு மண்டபத்தின் தடுப்புச்சுவரை புதுப்பித்து, அப்பகுதியை மேலும் பசுமையாக மாற்ற உதவிய எமது பாடசாலையின் 1999ம் ஆண்டு பழைய மாணவர்கள் குழுவுக்கு எமது மனமார்ந்த சிறப்பு நன்றிகள்.

ஒன்றுபட்டு செயல்பட்டு, எங்கள் மாணவர்களுக்கான சிறந்த சூழலை உருவாக்குவோம்!

23 டிசம்பர் 2024  (நேற்று) தெஹியங்க அல் அஸ்ஹர் கேட்போர் கூடத்தில் காலை 9:00 மணிக்கு நடைபெற்ற சாரணர் பதக்கம் வழங்கும் விழ...
24/12/2024

23 டிசம்பர் 2024 (நேற்று) தெஹியங்க அல் அஸ்ஹர் கேட்போர் கூடத்தில் காலை 9:00 மணிக்கு நடைபெற்ற சாரணர் பதக்கம் வழங்கும் விழாவின் வெற்றியைப் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்நிகழ்வில் எமது பிரதம அதிதியாக அல்ஹாஜ் எம்.டி.எம். ஷாபி அவர்களின் வருகையும் ஆதரவும் இந்த நிகழ்விற்கு மகத்தான மதிப்பைச் சேர்த்தது. லெப்டினன்ட் கர்ணல் எம்.எச்.எம். ரவூஃப் அவர்கள் எங்கள் தலைமைப் பயிற்சியாளராவார், அவருடைய விலைமதிப்பற்ற வழிகாட்டுதலும் அர்ப்பணிப்பும் எங்கள் சாரணர்களை உண்மையிலேயே ஊக்கப்படுத்தியது. பாடசாலை அதிபர் தலைமையில், சாரணர் பயிற்றுவிப்பாளரின் வழிகாட்டலில் கீழ் பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பாடசாலை பழைய மாணவர் சங்கம் பெற்றோர்களின் பங்களிப்பினூடாக சிறந்த முறையில் இன்றைய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மிகவும் மகிழ்ச்சிகரமான ஒரு காட்சியாக அமைந்தது

சாரணர் ஒழுக்கம், குழுப்பணி, தலைமைத்துவம் மற்றும் சமூகத்திற்கான சேவை போன்ற இன்றியமையாத மதிப்புகளை உருவாக்குகிறது, மேலும் இந்த இளம் சாரணர்கள் அவர்களின் சிறந்த அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர், அவர்கள் எமது பாடசாலைக்கு மேலும் மேலும் பெருமை சேர்க்கிறார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிகழ்விற்கு வருகை தந்து ஆதரவளித்து இந்நிகழ்வை சிறப்பித்ததற்காக அல்ஹாஜ் எம்.டி.எம். ஷாபி அவர்களுக்கும், லெப்டினன்ட் கர்ணல். ரவூஃப் சார் அவர்களின் அயராத முயற்சிகளுக்காகவும் எங்கள் சாரணர்களை சாதனையாளர்களாக மாற்றுவதற்காகவும், SDEC மற்றும் OBA க்கு இந்த குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதில் அவர்களின் அசைக்க முடியாத ஆதரவிற்காகவும் அல்அஸ்ஹர் சார்பாக எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

மேலும் 27 டிசம்பர் 2024 அன்று நடைபெறவிருக்கும் Kanboree க்கு தயாராகும் எங்கள் சாரணர்களுக்கு நல்வாழ்த்துக்கள். அவர்களின் பயணம் அவர்களுக்கு மறக்க முடியாத நினைவுகள், மதிப்புமிக்க கற்றல் அனுபவங்கள் மற்றும் சாகச மற்றும் ஒற்றுமையின் உணர்வைக் கொண்டுவரட்டும். அத்தோடு பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துகள், ஜம்போரிக்கு தயாராகும் எங்கள் சாரணர்களுக்கு வாழ்த்தி ஒன்றாக, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவோம்.

குறிப்பாக இந்நிகழ்விற்கு பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவோடு இணைந்து உதவிய அல்ஹாஜ் நஸ்ரி சலீம் அவர்களின் ஆதரவிற்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Address

Kandy

Opening Hours

Monday 07:30 - 14:30
Tuesday 07:30 - 14:30
Wednesday 07:30 - 14:30
Thursday 07:30 - 14:30
Friday 07:30 - 12:00

Telephone

+94812056056

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Azhar Central College-Dehianga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category