16/02/2015
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் - 2015
பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் 2015 ஆம் ஆண்டிற்கான பொதுக்கூட்டம் 13.02.2015 வெள்ளிக்கிழமையன்று மாலை 4:30 மணிக்கு பாடசாலையின் அதிபரும், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் தலைவருமான கலீல் ரஹ்மான் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டதிற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் முன்னால் நிருவாக உறுப்பினர்கள், பெற்றார்கள், பழைய மாணவர்கள் என பலர் வருகைதந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் முதல் கட்டமாக அதிபர் கலீல் ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார். இதன்போது அவர் அதிபராக பதவி ஏற்றது முதல் இன்றுவரையில் பாடசாலை கல்வி நடவடிக்கைகளிலும், இணைபாடவிதான செயற்பாடுகளிலும் எமது பாடசாலை மாணவர்கள் புரிந்த சாதனைகள் மற்றும் பெற்றார்கள், பழைய மாணவர்கள், அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட பௌதிக வள அபிவிருத்திகள் தொடர்பாக தெளிவுபடுத்தினார்.
அதனைத்தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டிற்கான புதிய நிருவாக உறுப்பினர்களின் தெரிவு இடம்பெற்றது. இதன்போது A.R.M. அஸ்லம் (செயலாளர்), A.L.M. அரபாத், A.C.S. ஹமீத், N.M. நிலாம், ரிகாஸ் ஆகியோர் பெற்றார், பழைய மாணவர் சார்பில் நிருவாக சபை உறுப்பினர்களாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.
தொடர்ந்து அதிபர் உரையாற்றுகையில், தான் இவ்வருடம் பெப்ரவரி மாத இறுதியில் இடம் மாற்றம் பெற்று செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்னர் பொருத்தமான அதிபர் ஒருவரை தெரிவு செய்யுமாறும் புதிய நிருவாக உறுப்பினர்களிடம் வேண்டிக்கொண்டார்.
இறுதியாக, புதிதாக தெரிவு செய்யப்பட்ட செயலாளரின் நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.