16/06/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்.
கல்வி அமைச்சின் 1964/27, 2008/41, 2009/03ஆம் இலக்க சுற்று நிருபங்களுக்கமைய பாடசாலை பழைய மாணவிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடாத்துவதற்கான
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இடம் : கல்லூரி ஆராதனை மண்டபம்.
காலம் : 17.06.2023 (சனிக்கிழமை)
நேரம் : பி.ப. 04.30 மணி.
இப்பொதுக்கூட்டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான பாடசாலை பழைய மாணவிகள் சங்கத்திற்கான புதிய
அங்கத்தவர் தெரிவும் இடம்பெறும்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.
அதிபர்
யூ.எல்.எம். அமீன்
மஹ்மூத் மகளிர் கல்லூரி,
(தேசிய பாடலை),
கல்முனை.
- ஊடக பிரிவு -
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (
தேசிய பாடசாலை பழைய மாணவியும், அபிவிருத்தி உத்தியோகத்தருமான அப்துல் சலீம் சைசூன் நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பைத் தொடர வாய்ப்பு.
சவால்களை சாதனையாக்கி சிகரம் தொட புறப்பட்ட மாணவி சைசூன் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் சார்பாக ஆத்மார்த்தமான வாழ்த்துக்கள்.
கல்முனையைச் சேர்ந்த மாணவி சைசூன் தரம் 09தில் கல்வி கற்றுக் கொண்டு இருக்கும் போது தனதுகண்பார்வையினை
முழுமையாக இழந்த நிலையில் அதனை ஒரு சவாலாக கொண்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் கலை வர்த்தக பிரிவில் கல்வி கற்று பின்னர் இலங்கை தென்கிழக்குப்
பல்கலைக்கழகத்தின் கலை, கலாசாரபீடத்தின் ஆங்கில மொழித்துறையில் முதற்தரத்தில் சித்தியடைந்த மாணவி அப்துல் சலீம் சைசூன் தற்போது பொதுநலவாய நாடுகளுக்கான உதவித்தொகை பெற்று பிரித்தானியாவிலுள்ள நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பட்டப் பின் படிப்பைத் தொடர்வதற்காகச் சொல்லவுள்ளார்.
இம்மாணவி தான் கல்வி கற்ற காலத்தில் பல மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தார். சைசூன் சவால்களை முறியடிப்பதிலும் தன்னுடைய தூர நோக்கில் பயணிப்பத்திலும் உள்ள சவால்களை எதிர்கொள்வதிலும் பல தடைகளை தாண்டி தன்னுடைய சக்திக்கு அப்பாலும் சில விடயங்களை செய்து சாதிக்க முடியும் என்பதனை நிரூபித்து காட்டியவர்.
அப்துல் சலீம் சைசூன் கடந்த 2020ம் ஆண்டு அரசாங்கத்தினால் பட்டதாரிகள் அரச தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி பயிலுனராக தெரிவு செய்யப்பட்டு தன் கற்ற கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலையில் கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக பட்டதாரி பயிலுனராக கடமையாற்றியது மட்டுமல்லாது 2022ம் ஆண்டு பட்டதாரிகளுக்கான நிரந்தர நியமனத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
குறித்த மாணவியின் அபரிநிதமான முன்னேற்றத்தை கௌரவித்து இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகம் அண்மையில் நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவித்ததும் குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கம்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)
30.09.2022
12/05/2023
இவ்வருட உயர் தர பரீட்சையின் பெறுபேறுகளில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரிக்கு மாவட்ட மட்டத்தில் முன்னணி நிலைகள்.
இலங்கையின் கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கல்முனைக்குடி 14 கிராம சேவகர் பிரிவில் அமையப்பெற்றுள்ளது கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை).
1971 - 2022 ஆண்டு வரையான கல்வி வரலாற்றில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது 50வது ஆண்டு பொன்விழாவினை கொண்டாடுகின்ற கால கட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் கல்வியின் வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தையும் சர்வதேச ரீதியில் விருதுகளை தக்கவைத்ததும் மற்றும் அகில இலங்கை ரீதியில் பெண் விடுதி மாணவிகளை கொண்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி கடந்த 08.03.2022 உத்தியோகபூர்வமாக தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
இதன் பின்னணியில் கல்விச் செயற்பாடுகளில் பல சாதனைகளை நிலை நாட்டி வருகின்றது அந்த வரிசையில் 2021ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த (உ/ த)ப் பரீட்சையில் அம்பாறை மாவட்ட மட்டத்தில் முன்னணி நிலைகளை பெற்றுள்ளது.
01. உயிரியியல் விஞ்ஞானம் (Bio Science)
உயிரியியல் விஞ்ஞான பிரிவில் 09 மாணவிகள் மருத்துவ பீடம் (இதில் 04 மாணவிகள் 03 பாடங்களிலும் "A" தரத்தினை பெற்றுள்ளனர். அதில் அம்பாறை மாவட்டத்தில் 03ம் மற்றும் 08ம் நிலைகளை பெற்றுள்ளனர் ஏனைய மாணவிகள் உயிரியியல் விஞ்ஞானம் (Bio Science) துறையில் தொடர்பான துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
02. பெளதீக விஞ்ஞானம் (Physical Science)
பெளதீக விஞ்ஞான பிரிவில் 01 மாணவிகள் பொறியியல் பீடம் ஏனைய மாணவிகள் பெளதீக விஞ்ஞான தொடர்பான துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
03. வர்த்தகம் (Commerce)
வர்த்தக பிரிவில் 05 மாணவிகள் முகாமைத்துவ பீடம் (இதில் 03 மாணவிகள் 03 பாடங்களிலும் "A" தரத்தினை பெற்றுள்ளனர். அதில் அம்பாறை மாவட்டத்தில் 03,08ம் மற்றும் 09ம் நிலைகளை பெற்றுள்ளனர் ஏனைய மாணவிகள் வர்த்தக துறையில் தொடர்பான துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
04. உயிரியியல் முறை தொழில்நுட்பம் (Bio System Technology)
உயிரியியல் முறை தொழில்நுட்பம் பிரிவில் 04 மாணவிகள் BST, ICT பீடம் (இதில் 02 மாணவிகள் 03 பாடங்களிலும் "A" தரத்தினை பெற்றுள்ளனர்) அதில் அம்பாறை மாவட்டத்தில் 01,02ம் மற்றும் 07ம் நிலைகளை பெற்றுள்ளனர் 07ம் நிலையினை பெற்ற மாணவி (தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் - ICT) ஏனைய மாணவிகள் உயிரியியல் முறை தொழில்நுட்ப துறையில் தொடர்பான துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
05. கலை (Arts)
கலைப் பிரிவில் 04 மாணவிகள் சட்ட பீடம் (இதில் 04 மாணவிகள் 03 பாடங்களிலும் "A" தரத்தினை பெற்றுள்ளனர்) ஏனைய மாணவிகள் கலை துறையில் தொடர்பான துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்தர வெட்டுப்புள்ளி, அகில இலங்கை மற்றும் மாவட்ட மட்ட தர வரிசையின் படி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) இருந்து மொத்தமாக 123 மாணவிகள் இவ் வருடம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வரலாற்று சாதனைக்கு கற்றல், கற்பித்தல் மற்றும் ஏனைய பயிற்சி, மேலதிக வகுப்புக்கள், வழிகாட்டல் உறுதுணையாக செயற்பட்ட கல்லூரியின் அபிவிருத்தி பணிகளில் தன்னை முழுமையாக இனைத்துக் கொண்ட கல்லூரி முதல்வர் யூ. எல்.எம். அமீன் சேர் ஆத்மார்த்தமான நன்றிகள் தெரிவித்துக்கொள்கிறோம்.
மேலும் இதற்கு உதவியாக இருந்து செயற்பட்ட கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். .அஸ்மி காரியப்பர், உதவி அதிபர் ஏ.எச். நதீரா, தர்ஸான், மனுனா, உயர் தரப்பிரிவின் பகுதித் தலைவர்கள், உயர் தர பாட ஆசிரியர்கள் மற்றும் சாதனை படைத்த மாணவிகளின் பெற்றோர்கள் இத்தருனத்தில் வாழ்த்துக்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
பல்கலைக்கழகத்துக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவிகள் கடந்த வாரம் பாடசாலை நேரடியாக சமூகமளித்து அதிபர்கள், கற்பித்த ஆசிரியர்கள் சந்தித்து நன்றிகள் தெரிவித்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Source : கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினால் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்ட 2021 உயர் தர பரீட்சையின் சிறந்த பெறுபேறுகள் ஆவணத்தில் இருந்து.
03.09.2022
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியினை (பெண்மையினை கெளரவிக்கும் சர்வதேச மகளிர் தினத்தில்) தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு.
(1971-2022) ஆண்டு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியானது 50வது ஆண்டு பொன்விழாவினை கொண்டாடுகின்ற கால கட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெண்கள் கல்வியின் வளர்ச்சியில் தனக்கு என்று தனித்துவமான அடையாளத்தையும் சர்வதேச ரீதியில் விருதுகளை தக்கவைத்ததும் மற்றும் அகில இலங்கை ரீதியில் பெண் மாணவிகளை கொண்ட மஹ்மூத் மகளிர் கல்லூரி ஜக்கிய நாடுகள் அமைப்பு 2022ம் ஆண்டு "நாளைய நிலையான உலகிற்காக இன்றைய பாலியல் சமத்துவம்" எனும் தொனிப்பொருளில் பெண்மையினை கெளரவிக்கும் சர்வதேச மகளிர் தினத்தில் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தி உத்தியோகபூர்வமாக மாணவிகளுக்கு கையளிக்கும் நிகழ்வில் கல்வியாளர்கள் புடைசூழ மிக பிரமண்டமான முறையில் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் தலைமையில் அதன் நிர்வாகம் சேர்ந்து நடத்தியிருப்பதானது பாடசாலை வரலாற்றில் மிக முக்கியமான பதிவாகவும் வரவேற்கத்தக்க விடயமாகும்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் தேசத்தைக் கட்டியெழுப்பும் “சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைக்கு அமைவாக இலங்கைக் கல்வியின் உண்மையான சுதந்திரத்திற்காக தேசிய பாடசாலைகள் எண்ணிக்கையை 1000 வரையில் அதிகரிக்கும் தேசிய நிகழ்வும், சர்வதேச மகளிர் தினமும் - 2022 நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியை தேசிய பாடசாலையாக மாணவிகளுக்கு உரித்தாக்கும் நிகழ்வு 08.3.2022 (செவ்வாய்க்கிழமை) சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் பாடசாலை அதிபர் யூ. எல்.எம். அமீன் தலைமையில் நடைபெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நாடு முழுவதும் நடைபெற்றுவரும் இந்நிகழ்வின் ஒரு அங்கமாக கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் கல்வி வெளியீட்டு திணைக்கள மேலதிக ஆணையாளர் நாயகம் இசட். தாஜுதீன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன், கல்முனை கல்வி மாவட்ட பொறியியலாளர் ஏ.எம். ஸாஹிர், பிரதிக்கல்வி பணிப்பாளர்கள், உதவிக்கல்வி பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி அதிகாரி வீ. எம். ஸம்ஸம், முன்னாள் அதிபரும், சாய்ந்தமருது கலாச்சார அதிகார சபை பிரதித்தலைவருமான ஏ. எச்.அப்துல் வஸீர், கல்முனை வலய பாடசாலைகளின் அதிபர்கள், கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். .அஸ்மி காரியப்பர் உதவி அதிபர் ஏ.எச். நதீரா, மனுனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகம், மாணவர்கள், பிரதேச முக்கியஸ்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரதம அதிதியாக கலந்து கொண்ட
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், அண்மையில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நியமிக்கப்பட்ட எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ. திஸாநாயக்கா, கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் என். புள்ளநாயகம், கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். புவனேந்திரன் பொன்னாடை போற்றி கெளரவிக்கப்பட்டதுடன் நினைவு சின்னங்களும் பாடசாலை அதிபர் மற்றும் நிர்வாகத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை மாணவிகளினால் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
08.03.2022
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை) யில் ஜந்து வருடங்களாக காவலாளியாக கடமையற்றி இடம் மாற்றம் பெற்று சென்ற இ.நேசராசா சேவை நலன் பாராட்டு விழா.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் (தேசிய பாடசாலை) சுமார் 05 வருடங்களாக சேவையாற்றி 31.12.2021 யில் கல்முனை வலய கல்வி அலுவலகத்துக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற பகல் நேர காவலாளியான இ.நேசராசா சேவை நலன் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் புதிய 2022ம் ஆண்டுக்கான முதலாவது ஆசிரியர்களுக்கான ௯ட்டமும் 04.01.2022 (செவ்வாய்க்கிழமை) பாடசாலையின் கேட்போர் ௯டத்தில் கல்லூரியின் அதிபா் யூ.எல்.எம். அமீன் தலைமையில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம். மசூது லெவ்வை, ஆர்.எம். .அஸ்மி காரியப்பர் உதவி அதிபர் ஏ.எச். நதீரா, மனுனா, பகுதித் தலைவர்கள், ஆசிரியர்கள், பட்டதாரி பயிலுனா்கள் மற்றும் கல்விசார உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இ.நேசராசா சேவை நலன் பாராட்டு விழா நிகழ்வானது பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடை பெற்றதுடன் அதன் தலைவா் அலியாா் றிபான் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இ.நேசராசா ஐந்து வருட சேவையினை பாராட்டி நினைவு பரிசினை கல்லூரியின் முதல்வர் யூ.எல்.எம். அமீன் வழங்கி வைக்கப்பட்டது.
இரண்டாம் கட்ட நிகழ்வாக ஆசிரியர்களுக்கான ௯ட்டம் நடைபெற்றது.
05.01.2022
12/05/2023
Welcome to Happy New Year 2022
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த (ச/த) தர பரீட்சை தோற்றவுள்ளவர்களுக்கும் 15 - 19 வயது மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு..! 💉💉
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் இவ்வருடம் க.பொ.த (ச/த) தர பரீட்சை தோற்றவுள்ளவர்களுக்கும் 15 - 19 வயது மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நிகழ்வுகள் 03ம் கட்டமாக இன்று (01/11/2021) திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலை மாணவிகளுக்கு இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் ,
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி தலைமையில் கல்முனை பிரதேசத்தில் மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவிகள் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியை இன்று (01) பெற்றுக் கொண்டனர்.
தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள்,
குடும்ப நல உத்தியோகத்தர்கள், கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், கல்விசார ஊழியர்கள், பட்டதாரி பயிலுனர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு படையினர், கல்முனை கொரோனா தடுப்பு செயலனியினர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தினால் "டோக்கன் இலக்க" முறையில் 03 குழுக்களாக பிரிக்கப்பட்டு 400க்கும் மேற்பட்ட தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஒழுங்கமைப்புக்கள் மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டதை காணக்கூடியதாக இருந்தது.
இதன் மூலம் சிரமமின்றி மாணவிகள் மிகவும் இலகுவாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதுடன் சுகாதார துறையினருக்கு, கல்லூரி அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கும் நன்றியினை தெரிவித்தனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி
(தேசிய பாடசாலை)
01.11.2021
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் 16 - 19 வயது மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி வெற்றிகரமாக முன்னோடுப்பு..!
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவில் பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 11,12,13 ம் ஆண்டு 16 - 19 வயது உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.
தடுப்பூசி செலுத்தும் மற்றும் ஒரு கட்டமாக இன்று (25/10/2021) திங்கட்கிழமை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் ,
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம் அஸ்மி தலைமையில் கல்முனை பிரதேசத்தில்
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையில் மாணவிகள் ஆர்வத்துடன் வருகை தந்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தடுப்பூசியை இன்று (25) பெற்றுக் கொண்டனர்.
தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொதுசுகாதார பரிசோதகர்கள்,
குடும்ப நல உத்தியோகத்தர்கள், கல்லூரியின் அதிபர், பிரதி அதிபர்கள், கல்விசார ஊழியர்கள், பட்டதாரி பயிலுனர்கள், ஆசிரியர்கள், பாதுகாப்பு படையினர், கல்முனை கொரோனா தடுப்பு செயலனியினர் ஆகியோர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அத்துடன் மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகத்தினால் "டோக்கன் இலக்க" முறையில் 04 குழுக்களாக பிரிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஒழுங்கமைப்புக்கள் மிகவும் நேர்த்தியான முறையில் மேற்கொள்ளப்பட்டதை காணக்கூடியதாய் இருந்தது.
இதன் மூலம் சிரமமின்றி மாணவிகள் மிகவும் இலகுவாக தடுப்பூசியினை பெற்றுக் கொண்டதுடன் சுகாதார துறையினருக்கு, கல்லூரி அதிபர் மற்றும் நிர்வாகத்துக்கும் நன்றியினை தெரிவித்தனர்.
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி
(தேசிய பாடசாலை)
25/10/2021.
12/05/2023
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் (1999 O/L & 2002 A/L Batch) பழைய மாணவிகளினால் கல்லூரிக்கு
PODIUM மற்றும் மின் குமிழ் தொகுதிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மஹ்மூத் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் (1999 O/L & 2002 A/L Batch)
பழைய மாணவிகள் ஒன்றுகூடல் (சுகாதார விதிகளுடன்) 22.10.2021 வெள்ளிக்கிழமை, கமு/கமு/மஹ்மூத் மகளிர் கல்லூரியின் சேர் றாசிக் பரீட் ஆராதனை மண்டபத்தில்
சிறப்பாக நடைபெற்றது.
1999 ஆம் ஆண்டு க.பொ.த.(சா/த) த்திலும், 2002 க.பொ.த.(உ/த) த்திலும், கல்வி கற்று பல்வேறு துறைகளில் மிளிரும் இப்பாடசாலையால் உருவாக்கப்பட்ட மாணவிகள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில், இப்பாடசாலைக்காக சேவையாற்றிய, சேவையாற்றிக் கொண்டிருக்கின்ற பாடசாலை சமூகத்தை சேர்ந்த அனைவரையும் நினைவு கூர்ந்து, தங்களின் நன்றிகளை வெளிப்படுத்தும் வகையில், முழு மனதுடனான விருப்பத்துடன் நிதி அன்பளிப்புக்களை வழங்கி அந்நிதியின் மூலம் 50,000/- பெறுமதியான "PODIUM" ஒன்றினையும், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் பாடசாலை சுற்று மதில் தூண்களுக்கு பொருத்தப்படக்கூடிய 170,000/- பெறுமதியான மின்குமிழ்களின் தொகுதியொன்றினையும் பாடசாலையின் அதிபர் ஜனாப். ULM.அமீன் சேர் அவர்களிடம் கையளித்தனர்.
இன் நிகழ்வில் உரையாற்றிய அதிபர் அவர்கள், பழைய மாணவிகளால் ஒழுங்கமைக்கப்பட்ட இவ்வாறானதொரு ஒன்றுகூடலும், பெறுமதிமிக்க அன்பளிப்புக்கள் பாடசாலைக்கு அவர்களால் வழங்கப்பட்டமையும் இதுவே பாடசாலையின் அண்மித்த கால வரலாறுகளில் முதல் தடவையாகும் எனக் குறிப்பிட்டதோடு, இம் மாணவிகளின் வாழ்வு மேலும் சிறக்கவும், அவர்களின் சேவை தொடரவும் வாழ்த்தினார். அத்துடன்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும், கெளரவிக்கும் முகமாக, பாடசாலை இலட்சினை பொறிக்கப்பட்ட "MUG" நினைவுச் சின்னமாக வழங்கி வைக்கப்பட்டது.
தகவல்: பழைய மாணவிகள் சங்கம் (MLCK)
24.10.2021
12/05/2023
Mahmud Ladies College Kalmunai (National School) - GCE O/L 2020 Results....! 🎓📖
Congratulations...!
Up to now...!
22 students obtained 9A passes
(18 Tamil Medium and 4 Bilingual)
19 students obtained 8A passes.
(12 Tamil Medium and 5 Bilingual)
Message From :
Azmie Kariapper D.P
MLCK (NS)
24.09.2021