13/01/2024
உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்தினால் பாதிஹில் இருந்து இறுதியாக கற்று வெளியேறிச் சென்ற மாணவர்களுக்கான 07 நாட்களைக் கொண்ட "Graduate Empowerment Program" ஏற்பாடு செய்யப்பட்டு 2024.01.08 அதாவது சென்ற திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டது.
இந் நிகழ்வானது அடுத்த கட்டமாக சமூகத்தினுள் நுழைகின்றவர்கள் என்ற வகையில் எம் மீது உள்ள சமூகத்தின் எதிர்பார்ப்பை எவ்வாறு நிறைவேற்றுவது என்பது என் நிகழ்வின் நோக்கமாக கொள்ளப்பட்டது. அதேபோன்று தனிமனிதன் குடும்பம் சமூகம் இலக்கு ஆகியவற்றை புரிந்து கொள்ளுதல் என்பதனையும் நோக்காக கொண்டு காணப்பட்டது.
இந் நிகழ்வானது 05 நாட்கள் நிறைவடைந்து இருக்கின்றது. இந் நிகழ்வைப் பொறுத்தவரை மிகவும் பிரயோசனமானதாகவும் பல அனுபவங்கள் நிறைந்தாகவும் காணப்பட்டது. அதேபோன்று பல சிறந்த ஆளுமைகளையும் சந்திக்க கிடைத்தது. அத்தோடு சில முக்கியமான இடங்களையும் தரிசிக்க கிடைத்தது.
எனவே இந்நிகழ்வை ஏற்பாடு செய்து அதில் எம்மை கலந்து கொள்வதற்காக வாய்ப்பை ஏற்படுத்தியமைக்கு உயர் கல்விக்கான பாதிஹ் நிறுவனத்திற்கும், இதற்காக உதவி செய்த சகோதரர்களுக்கும், குறிப்பாக இந் நிகழ்வை இறுதிவரை சிறப்பாக வழிநடாத்திய அஷ்ரக் இஸ்மாயில் சேர் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த சகோதரர் இன்ஸாம் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
جزاكم الله خيرا ❤️