08/01/2023
யாழ்ப்பாணம் இந்து பௌத்த கலாச்சார பேரவையின் இரண்டாம் மொழி கற்கையை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான கலந்துரையாடல் இன்று யாழ்ப்பாணத்தில் இடம் பெற்றது.
இந்த கலாச்சார பேரவையில் இரண்டாம் மொழி கற்கையைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்கு ஆசிரிய நியமனம் வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சர் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இன்று ஆளுநர் அலுவலகத்தில் ஆசிரிய பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது இந்து கலாச்சார பேரவையின் தலைவர் எம்.ரி.எஸ்.இராமசந்திரன் கருத்து தெரிவித்தார்.
இதன்போது வடக்கு மாகாணத்தில் இருந்து ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
03/01/2023
Wel Come to Academic year 2023
Application Now...
Contact Number _ 0772711181, 0212232072 ( Jaffna Head Office )
28/12/2022
இந்து பௌத்த கலாசார பேரவையில் இரண்டாம் மொழி சிங்கள ஆசிரியர் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஓர் மகிழ்ச்சி செய்தி
பேரவையால் தெரிவு செய்யப்பட்ட சிங்கள ஆசிரிய பயிற்சி மாணவர்களுக்கு அவர்களின் வதிவிடத்திற்கு அருகாமையில் உள்ள வடமாகாண அரச பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாக உள்வாங்கப்படவுள்ளார்கள். எதிர்காலத்தில் பேரவையினால் தெரிவு செய்யப்படும் மாணவர்கள் எதிர்வரும் புத்தாண்டு 2023 இல் வடமாகாண ஆளுநர் கேட்போர் கூடத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு பகுதி பகுதியாக வடமாகாண அரச பாடசாலையில் பயிற்சி ஆசிரியர்களாக உள்வாங்கப்படவுள்ளார்கள். என்றும் இலங்கை அரசாங்கத்தினால் நியமனம் வழங்கப்படும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்றும் வடமாகாண ஆளுநர் தேசமான்ய MTS இராமச்சந்திரனுடன் கலந்துரையாடும் போது தெரிவித்தார் என்பதையும் அறியத் தருகின்றோம்.
இப் பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் எம்மோடு இணைந்து கொள்ளவும்.
25/12/2022
இந்து பௌத்த கலாச்சார பேரவை சார்பாக அனைத்து உள்ளங்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.
22/12/2022
இந்து பௌத்த கலாச்சார பேரவையில் சிங்கள மொழி கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வானது 20.12.2022 எமது தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் பிரதமவிருந்தினராக வட மாகாண ஆளுநர் கெளரவ ஜீவன் தியாகராஜா , கெளரவ விருந்தினராக யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக MR Priyantha Weerasooriya- attorney- at - law Senior Deputy Inspector Of Police Nothern Province கலந்து கொண்டு கிட்டத்தட்ட 150 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
08/11/2022
2022 ஆண்டிற்கான HNDS கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான இறுதிப்பரீட்சை 06.11.2022 எமது யாழ்ப்பாண தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.