28/02/2025
இல்ல விளையாட்டுப் போட்டி - 2025
கல்கமுவ முன்னோடி முஸ்லிம் மஹா வித்தியாலயம்.
நீண்ட நாட்களின் பின் எமது பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி ரூபி, டயமண்ட், எமரல்ட் என்று மூன்று இல்லங்களாக பிரிக்கப்பட்டு கிரிக்கெட், எல்லே, கரப்பந்து, கூடைப்பந்து, உதைப்பந்து என பெரு விளையாட்டுக்களும் 2025.02.24,25 திகதிகளில் மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெற்று இறுதி நாள் நிகழ்ச்சிகள் 2025.02.27ம் திகதி வியாழக்கிழமை கலையகத்தின் கெளரவ அதிபர் திருவாளர் M.M.M நளீம் தலைமையில் கெளரவ அதிதி திரு சிறிமான(உதவிக் கல்விப் பணிப்பாளர் - மாகோ கல்வி வலயம்), விசேட அதிதி பாராளுமன்ற உறுப்பினர் திரு சந்தன தென்னகோன் , வலயத்தின் ஆசிரிய ஆலோசகர்கள்,சக பாடசாலை அதிபராசிரியர்கள் மேலும் பாடசாலை அபிவிருத்தி சங்கம்,பழைய மாணவ ஒன்றியம் ,பெற்றோர், நலன் விரும்பிகள் , ஆகியோரின் பங்கு பற்றுதலுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது.
மேலும் இந்நிகழ்வில் 100M , 100×4 M , 400×4 , வினோத உடை முதலான மாணவர் நிகழ்ச்சிகளும்
இன்னும் பழைய மாணவர்களுக்கான அஞ்சல் ஓட்டம், பெற்றோர்களுக்கான அஞ்சல் ஓட்டம், இல்ல ஆசிரியர்களுக்கான அஞ்சல் ஓட்டம் என இரசனையுடன் கூடிய போட்டிகள் நடைபெற்றன.
மேலும் மாணவர்களின் சங்கீத நடனக் கண்காட்சி, அணி நடை மரியாதை என விழாக் கோலம் கொண்டு நிகழ்வுகள் நடைபெற்றது.
இன்னும் இல்ல அலங்கரிப்பில் எமரல்ட் இல்லமும், அணி நடை மரியாதை நிகழ்வில் டயமண்ட் இல்லமும் வெற்றி பெற்றது.
இறுதியாக இல்லங்கள் பெற்ற புள்ளிகள் வழங்கப்பட்டு
479 புள்ளிகளுடன் எமர்ல்ட் இல்லம் மூன்றாமிடத்தையும், 538 புள்ளிகளுடன் டயமண்ட் இல்லம் இரண்டாமிடத்தையும், 558 புள்ளிகளுடன் ரூபி இல்லம் முதலாமிடத்தையும் பெற்று வெற்றி பெற்றது.
ஆகவே இந் நிகழ்வுக்கு அருள் புரிந்த இறைவனுக்கு முதற் கண் நன்றியையும் , மேலும் அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கம், பாடசாலை பழைய மாணவர் ஒன்றியம்,பெற்றோர்,நலன் விரும்பிகள், நடுவர்களாக பங்குபற்றிய சக பாடசாலை ஆசிரியர்கள் அனைவருக்கும் நன்றிகள்