13/07/2026
அல்-அஷ்ரப் வித்தியாலய முன்றலில் மல்லிகைக் கன்று நடுகை நிகழ்வு சிறப்பான முறையில் ஏற்பாடு!
ஏறாவூர் மட்/மம/ அல்-அஷ்ரப் வித்தியாலயத்தின் அழகையும் பசுமையையும் மேம்படுத்தும் நோக்கில், பாடசாலை முன்றலில் மல்லிகைக் கன்றுகள் நடும் விசேட நிகழ்வு 10/07/2026 அன்று மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.
பாடசாலை அதிபரின் வழிகாட்டலில், பாடசாலை ஆசிரியர்கள், வித்தியாலய அபிவிருத்திச் சங்க செயலாளர், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்களின் கூட்டு ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.
பாடசாலைச் சூழலைப் பசுமையாக்குவதுடன், மாணவர்களிடையே இயற்கை மற்றும் சூழல் பாதுகாப்புப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மல்லிகைக் கன்றுகள் நடுகை செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் வித்தியாலய அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு, பாடசாலை முன்றலில் மல்லிகைக் கன்றுகளை நட்டு வைத்ததுடன், அவற்றைப் பராமரிப்பதற்கான பொறுப்புகளையும் பகிர்ந்து கொண்டனர். பாடசாலையின் இந்த முன்மாதிரியான முயற்சிக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.