30/10/2022
அஹதிய்யா பாடசாலைகள் அங்குரார்ப்பண நிகழ்வு
ஏறாவூர் பிரதேச அஹதிய்யா பாடசாலைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அஹதிய்யா வகுப்புக்களை முதற்கட்டமாக ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30) டாக்டர் பதியுதீன் மஹ்மூத் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வானது ஒன்றியத்தின் தலைவரும் பாடசாலையின் அதிபருமான எம்.எம் ஜலால்தீன் அவர்களின் தலைமையில் இடமபெற்றது.
அங்குரார்ப்பண நிகழ்வில் ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.எம். நழீம் அதிதியாக கலந்துகொண்டதுடன் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் (கொழும்பு) அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏம்.ஸியாத், மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் உப தலைவரும் கலாச்சார உத்தியோகத்தருமான எஸ்.ஏ.முஹம்மத் நளீம் (நளீமி), மட்டக்களப்பு மாவட்ட அஹதிய்யா பாடசாலைகள் சம்மேளனத்தின் பொருளாளர் மெளலவி எம்.எல்.எம்.இர்ஷாத் (யெமனி), ஏறாவூர் அறபா வித்தியாலயத்தின் அதிபர் எஸ்.எம்.எம். நவாஸ், ஏறாவூர் அல் அமான் வித்தியாலயத்தின் அதிபர் வீ.டி.எம். இஸ்ஸத் , ஏறாவூர் அஹதிய்யா பாடசாலைகள் ஒன்றியத்தின் செயலாளர் எம.என்.எம். ஜெஸ்லான் , ஒன்றியத்தின் உறுபினர்களான எம். எல்.எம்.ஹிஜ்ரத் மெளலவி, ஐ.எம். பிர்தெளஸ் மெளலவி மற்றும் பெற்றோர்கள் , வளவாளர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
அஹதிய்யா பாடசாலைகள் தொடர்பான முக்கியத்துவங்கள், அரச அங்கீகாரங்கள் கலந்தாலோசிக்கப்பட்டதுடன் ஏறாவூர் பிரதேசத்தில் எதிர்காலத்தில் அஹதிய்யா வகுப்புக்களை விருத்தி செய்வற்கு தன்னாளான முறையான பங்களிப்புக்கள் வழங்கப்படும் எனவும் நகரசபை தவிசாளரால் உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இவ் அங்குரார்ப்பண நிகழ்வு சுமார் 120 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டிருந்ததுடன் வாரத்தில் ஒரு நாளான ஞாயிற்று கிழமைகள் மாத்திரம் இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.