17/05/2026
Are you controlling your emotions, or are they controlling you?
Join us for a completely FREE WEBINAR: The War Within. We are breaking down practical, faith-based psychological tools to help you navigate your nafs, reframe your stress, and rewire your emotions. If you are interested in Islamic psychology, mental health, and building true emotional intelligence, this session is for you.
📅 Date: Sunday, 7 June 2026
🕗 Time: 8:00 PM Onwards
💻 Platform: Live on Google Meet
📖 Bonus: Free course materials provided!
Open to brothers and sisters.
🔗 Tap the link in our bio to register now! tinyurl.com/twwreg
FB: https://facebook.com/share/p/17o2SRfH81
IG: https://www.instagram.com/p/DYb-Ifrlz9-
17/05/2026
سريلانكا تعلن عن اجتماع تحرّي هلال ذي الحجة 1447هـ
أعلنت لجنة تحرّي رؤية الهلال في سريلانكا، المتمثلة في جمعية علماء سريلانكا والمسجد الكبير، عن عقد الاجتماع الرسمي لتحرّي هلال شهر ذي الحجة لعام 1447هـ، وذلك في المسجد الكبير بكولومبو مساء اليوم الأحد الموافق 17 مايو 2026، بالتنسيق مع الجهات الدينية والرسمية المختصة في سريلانكا.
وسيتم خلال الاجتماع دراسة التقارير الواردة من مختلف مناطق البلاد بشأن رؤية الهلال، تمهيدًا لإصدار الإعلان الرسمي حول بداية شهر ذي الحجة لعام 1447هـ، وما يترتب على ذلك من تحديد موعد عيد الأضحى المبارك.
ودعت الجمعية المواطنين إلى التعاون والإبلاغ عن أي رؤية مؤكدة للهلال عبر القنوات الرسمية المعتمدة.
#سريلانكا #الهلال #كولومبو
12/05/2026
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ.
மன்ஹஜ் தொடர்பாக இன்று நாட்டில் பேசப்பட்டு வருகின்ற கருத்துக்கள் மற்றும் “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” வெளியீட்டின் பின்னணிக் காரணங்கள் குறித்து சில விடயங்களை பணிவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
“அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” என்பது தகுதியும் அனுபவமும் கொண்ட ஆலிம்களின் வழிகாட்டுதலுடனும், சுமார் 2016 ஆம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்டு, தவிர்க்க முடியாத சில காரணிகளால் இடையில் நிறுத்தி வைக்கப்பட்டது. இப்பணியை நிறைவு செய்ய வேண்டும் எனும் தூர நோக்குடன் அல்லாஹ்வின் கிருபையால் ஒன்றரை வருடங்களுக்குமுன் மீண்டும் “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” தொகுக்கும் பணி ஆரம்பமானது. அதனைத் தொடர்ந்து வந்த ஒன்றரை வருங்களை தாண்டிய பல்விதமான ஆய்வுகள், கலந்துரையாடல்கள் மற்றும் திட்டமிட்ட பணிகளின் மூலமும் உருவாக்கப்பட்ட ஒரு முயற்சியே இந்த “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” ஆகும்.
இலங்கையின் பல பகுதிகளில், அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா அடிப்படையில் செயல்பட்டு வருகின்ற அறிஞர்கள், உலமாக்கள், மஸ்ஜித்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் பங்குபற்றிய ஏற்பாட்டுக் கூட்டங்கள் மூலம் இந்த “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” தெளிவுபடுத்தப்பட்டு வந்தது. இதன் தயாரிப்பை மேலும் செம்மைப்படுத்த பல சந்திப்புகளும் ஆலோசனை கூட்டங்களும் இடம்பெற்றன. குறிப்பாக கொழும்பை மையமாகக் கொண்டு பல முக்கிய கலந்துரையாடல்கள் நடைபெற்றன.
விசேடமாக, மூத்த உலமாக்களுடனும், சிரேஷ்ட சட்டத்தரணிகளுடனும், கொழும்பு புக்கர் மண்டபத்தில் நடைபெற்ற நாடளாவிய தஃவா துறைசார்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட உலமாக்களுடனான கலந்துரையாடல் மற்றும் ஆய்வுகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும், நாட்டின் 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பிரதேச ரீதியாகவும் இது பரிசீலிக்கப்பட்டது. சில இடங்களில் கருத்துகள் சேர்க்கப்பட வேண்டும், சில வசனங்கள் திருத்தப்பட வேண்டும் அல்லது மொழிநடை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டபோது, அவை கலந்துரையாடல்களின் அடிப்படையில் ஆரோக்கியமான முறையில் திருத்தப்பட்டன.
இலங்கையின் பல அரபு கலாசாலைகளின் அதிபர்கள், உஸ்தாத்மார்கள், மூத்த ஆலிம்கள் மற்றும் துறைசார் நிபுணத்துவம் பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இதனை ஆய்வு செய்து கருத்துகளை வழங்கியுள்ளனர்.
இறுதியாக, 02.05.2026 அன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வரையறுத்து அழைக்கப்பட்ட முக்கியஸ்தர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர்* கலந்து கொண்டதுடன், அவர்களைச் சார்ந்த குடும்பங்கள் மற்றும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள நாநூற்றுக்கும் குறையாத மஸ்ஜிதுகள், மேலும் ஐந்து இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத் தலைவர்களும் தலைவிகளும் இந்த முயற்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல உலமாக்களும் இதனை வாசித்து புரிந்து கொண்டு தங்களது அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். 2016 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் 2024 அக்டோபரில் இரண்டாம் கட்ட நகர்வு ஆரம்பிக்கப்பட்டு நிறைவு பெற்றது. இந்த முயற்சி இரகசியமான ஒன்றல்ல. இந்நாட்டின் ஏனைய அமைப்புக்களை சேர்ந்த பல முக்கிய உலமாக்கள், நிறுவனங்கள் மற்றும் அதன் பொறுப்பாளர்கள் இதனை ஏற்கனவே அறிந்திருந்தனர். சிலுபோது இப்பணியை ஆர்வமூட்டவும் செய்தனர். ஆகவே இது யாருக்கும் புதிதான விடயமுமல்ல. எதிரான விடயமுமல்ல.
ஒரு நூல் “மன்ஹஜ்” என்ற பெயரில் ஏற்கனவே வெளியிடப்பட்டிருக்கிறது என்பதற்காக “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” என்ற பெயரில் இன்னொரு நூல் வெளிவரக்கூடாது என்று கூறப்படுமானால், உலகில் உள்ள எண்ணற்ற நூற்கள் சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட வேண்டிய நிலை உருவாகும். மனிதப் பெயர்களாயினும், நூற்களின் பெயர்களாயினும் ஒரே பெயரில் பல இடங்களில் பயன்படுத்தப் படுவது மிகச் சாதாரணமாக சமூகத்தில் வழமையான ஒன்றே.
இதுவரை “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” குறித்து அறிவுப்பூர்வமான, ஆதாரபூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதற்குப் பதிலாக, சிலர் உணர்ச்சி வசப்பட்ட கருத்துக்களையும் சமூக வலைத்தள தூண்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்டு எதிர்ப்புகளை முன்வைத்து வருகின்றனர். இவ்வாறான விமர்சனங்களை நாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் விமர்சகர்களுக்கே ஒரு வகையான Negative Marketing ஆகவே பார்க்கின்றோம். இது தஃவா களத்தில் எமக்கு சாதாரணமாகிப் பழகிப்போன ஒரு விடயமுமாகும்.
உண்மையில், இலங்கையில் அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னா அடிப்படையில் இயங்கும் சமூகம் ஒன்றுபடுவதை சிலர் விரும்பாத நிலையும் காணப்படுகிறது. அதனால் சில அமைப்புகளும் தனிப்பட்ட நபர்களும் “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” எனும் இந்த முயற்சியை எவ்வாறு தடுக்கலாம், நிறுத்தலாம் என்ற நோக்கில் செயல்பட்டதாகவும் அவதானிக்க முடிகிறது.
எனினும், எம் எல்லோரையும் படைத்த அல்லாஹ், அவனுடைய மார்க்கத்தை அதன் தூய்மையான வடிவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சியை நிறுத்தி வெற்றிபெற வரலாற்றில் எப்போதும் இடம் கொடுத்ததில்லை. அல்ஹம்ந்துலில்லாஹ். அக்காலங்களில் இருந்தே சத்தியத்தை எதிர்த்தவர்களால் எமக்கும், நாட்டின் சட்ட ஒழுங்கிற்கும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதே அன்றி, இந்த இடத்தில் ஒலிக்க ஆரம்பித்த சத்தியம் அடியோடு அழிக்கப் பட்டுவிட்டது என்று உதாரணம் காட்ட ஒரு இடமும் இல்லை என பதை இதனை எதிர்ப்பவர்கள் உணர்ந்து கொள்ள கடமைப் பட்டுள்ளனர். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ்.
யாருடனும் பகைமை, கோபம் அல்லது முரண்பாடு கொண்டு செயல்படுவது “மன்ஹஜ் அகடமி”யின் நோக்கம் அல்ல. யாரையும் குறிவைத்து விமர்சிப்பதற்காக இந்நூல் உருவாக்கப் படவுமில்லை. மாறாக சமூகத்தில் நிழவும் புரிந்துணர்வற்ற நிலைகளை கலைந்து புரிந்துணர்வுமிக்க ஒரு சமூகமாக இச்சமூகத்தை கட்டியெழுப்பும் தூய்மையான நோக்கங்களில் ஒன்றாகவே “அல் மன்ஹஜுஸ் ஸஹீஹ்” தொகுக்கப் பட்டது.
சமூக வலைத்தளங்களில் சில எதிர்வினைகள் மற்றும் எதிர்மறையான கருத்துக்கள் பரிமாறப்பட்டிருப்பதை காண முடிகிறது. எனினும், அவை நல்ல முறையிலான ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கான வாயில்களை மூடிவிடக்கூடாது என்பதில் அனைத்து தரப்பினரும் கவனமாக இருக்க வேண்டும்.
எமது முயற்சியை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு வெற்றிகரமாக நிறைவேற்றித் தந்தான். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அல்ஹம்துலில்லாஹ். கொள்கையில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரே சமுதாயமாக புரிந்துணர்வுடன் வாழ்ந்து, மரணிக்கும்போது முஸ்லிமாக மரணிக்க நம் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ் அருள் செய்வானாக.
والسلام عليكم ورحمة الله وبركاته
நற்புடன்,
M.M.M சாபிர் (Reading PhD)
சிரேஷ்ட விரிவுரையாளர்- கொழும்பு பல்கலைக்கழகம்.
பிரதான ஒருங்கிணைப்பாளர்*
"அல்மன்ஹஜுஸ் ஸஹீஹ்"
07.05.2026
18/04/2026
طفلة حافظة للقرآن تُبهر الحضور في احتفال مميز بكولومبو
احتضنت قاعة باندارانايكا التذكارية للمؤتمرات الدولية في كولومبو عاصمة سريلانكا حفلًا استثنائيًا نظمته دار القرآن لبراعم الإيمان، احتفاءً بمرور 25 عامًا على تأسيسها، وسط حضور واسع من الشخصيات الدينية والتربوية وأولياء الأمور.
وشهد الحفل لحظة لافتة عندما خطفت طفلة حافظة للقرآن الكريم أنظار الحضور بتلاوة عذبة وأداء متقن، أظهرت فيه تمكنًا واضحًا من أحكام التجويد وثقة كبيرة على المسرح، ما قوبل بإعجاب وتصفيق الحاضرين.
كما تضمن الحفل فقرات تكريمية واستعراضًا لمسيرة الدار وإنجازاتها في تعليم النشء كتاب الله، في تأكيد على دورها المستمر في تنشئة جيل مرتبط بالقيم القرآنية.
واختُتمت الفعالية بتكريم الطفلة وعدد من الحفظة المتميزين، في أجواء سادها الفخر والاعتزاز.
شبكة سيلان الإخبارية
شاهدوا جانبًا من هذه اللحظات المؤثرة في الفيديو:
https://youtu.be/HhkZiK08hYw
https://youtube.com/shorts/mnccd46h8BM?si=oves-Pv6akwA_bkE
https://youtube.com/shorts/lqZ9OL5cTao?si=mE4K9pj6Ylc2MriB
دار القرآن لبراعم الإيمان | 25 عامًا من العطاء تُتوّج بصوت طفلة أذهل الجميع
Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.