ஆயிஷா

ஆயிஷா இருளால் இருளை ஒருபோதும்
வெளியேற்றிட முடியாது...
ஒளியால் மாத்திரமே முடியும்...

“அழகிய பொறுமையை கடைப்பிடிப்பீராக”(யூசுப்: 18)எனது நண்பனே! உனது அல்குர்ஆன் பிரதியோடு நீ இருந்து கொள்.உனது தொழுகையைப் பேணி...
27/08/2026

“அழகிய பொறுமையை கடைப்பிடிப்பீராக”
(யூசுப்: 18)

எனது நண்பனே! உனது அல்குர்ஆன் பிரதியோடு நீ இருந்து கொள்.
உனது தொழுகையைப் பேணிப் பாதுகாத்துக் கொள். உனக்கு ஏற்படுகின்ற
வலிகளுக்கு இறைவனிடம் கூலி உண்டு என்பதை நினைத்துக் கொள். எது
நடந்தாலும் அது இறை நியதிப்படியே நடக்கிறது.

உலகம் என்பதே சோதனைதான். அது நிச்சயம் முடிவடைந்து விடும்.
இறுதிக்கட்டத்தில் நாம் கடக்க வேண்டியதை கடந்து விடுவோம். வாழ்வில்
சில கட்டங்கள் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இப்படி எத்தனையோ
கட்டங்களை நானும் நீங்களும் கடந்து விட்டோம். அவற்றை எப்படி கடந்தோம் என்பதை இப்போது யோசித்துப் பார்த்தால் ஆச்சரியம் மேலிடும்.

உறுதியாக நம்பிக்கை கொள்ளுங்கள்! என்றோ ஒரு நாள் சுவனத்தின் நிழலில்
நாம் அமர்ந்து கொண்டு, உலகின் அனைத்தையும் நினைத்துச் சிரித்துக்
கொண்டிருப்போம். எதுவெல்லாம் எமது கவனத்தைத் திருப்பியுள்ளன என்று எமக்கே ஆச்சரியமாக இருக்கும்.

அத்ஹம் ஷர்காவி
"அல் குர்ஆன் சொல்லும் செய்திகள்" நூலில் இருந்து

சிலர் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.நஜீப் மஹ்பூழ்
27/08/2026

சிலர் மற்றவர்களின் வாழ்க்கையில் தலையிடும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

நஜீப் மஹ்பூழ்

“அவர்கள் சொல்கின்றவற்றால் உங்களுக்கு மனநெருக்கடி ஏற்படுகிறதுஎன்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்" (ஹிஜ்ர்: 97)காயப்பட...
26/08/2026

“அவர்கள் சொல்கின்றவற்றால் உங்களுக்கு மனநெருக்கடி ஏற்படுகிறது
என்பதை நாங்கள் அறிந்து வைத்திருக்கிறோம்" (ஹிஜ்ர்: 97)

காயப்படுத்தும் வார்த்தைகள் அவரை நோவினை செய்தன. மோசமான
வார்த்தையின் மூலம் அவரது உள்ளம் கஷ்டப்பட்டது. இத்தனைக்கும் அவர் ஓர் நபி! அப்படியான ஒருவர் அல்லாத மற்றவர்களை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?! மற்றவர்கள் எம்மாத்திரம் !

ஆடைகளைத் தெரிவது போன்று தங்களது வார்த்தைகளை மிகக் கவனமாக தெரிவு செய்து பேசுவோருக்கு இறைவனின் அருள் உண்டாகட்டும்.

ஏனெனில், அப்படியானவர்கள் வார்த்தைகள் கூட நேர்த்தியைக் காட்டும்
என்பதனை நன்றாக அறிந்து வைத்திருக்கிறார்கள்.

எமது வார்த்தைகளால் மற்றவர்கள் காயப்படுவதையிட்டு நாம் எச்சரிக்கையாக
இருக்க வேண்டும். அந்நேரம் அவர்கள் எமக்கெதிராகக் கேட்கும் பிரார்த்தனைகள் உடனடியாக அங்கீகரிக்கப்படும்.

-அத்ஹம் ஷர்காவி-
அல் குர்ஆன் சொல்லும் செய்திகள் நூலில் இருந்து...

"மறக்க முடியாத தருணங்கள்இஃப்க் (அவதூறு) சம்பவத்தின் போது ஓர் அன்சாரி பெண் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தார். ஒரு வார்த்தை க...
26/08/2026

"மறக்க முடியாத தருணங்கள்

இஃப்க் (அவதூறு) சம்பவத்தின் போது ஓர் அன்சாரி பெண் ஆயிஷா (ரழி) அவர்களிடம் வந்தார். ஒரு வார்த்தை கூட பேசாமல் அவரோடு சேர்ந்து வெகுநேரம் அழுதார். ஆயிஷா (ரழி) கூறினார்: "அவரது இந்தச் செயலை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது."

தபூக் போரில் கலந்துகொள்ளாமல் பின்தங்கிய கஃபு இப்னு மாலிக் (ரழி) அவர்களின் தவ்பாவை அல்லாஹ் ஏற்றுக் கொண்டபோது, அவர் மகிழ்ச்சியோடு பள்ளிவாசலுக்குள் நுழைந்தார். உடனே தல்ஹா (ரழி) அவர்கள் அவரை நோக்கி விரைந்து ஓடிவந்து, அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். கஃபு (ரழி) கூறினார்: "தல்ஹாவின் இந்தச் செயலை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது."

மிகக் கடினமான தருணங்களில் காட்டும் ஆறுதலும் கனிவும் என்றும் மறக்க முடியாதவை."

தமிழில் - Dr. APM Abbas

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது. ஒன்றும் இல்லாமலே இங்கு வந்தோம். பிறகு எல்லாவற்றிற்கும் சண்டையிட்டுக்கொண்டோம். பிறகு எல்...
26/08/2026

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.

ஒன்றும் இல்லாமலே இங்கு வந்தோம்.

பிறகு எல்லாவற்றிற்கும் சண்டையிட்டுக்கொண்டோம்.

பிறகு எல்லாவற்றையும் விட்டு விட்டு, ஒன்றும் இல்லாமல் சென்றுவிடுகிறோம்

நஜீப் மஹ்பூழ்

“நான் எனது கவலைகளையும் துயரங்களையும் அல்லாஹ்விடம்முறையிடுகிறேன் என்று அவர் கூறினார்"(யூசுப்:86)யஃகூப் (அலை) அவர்கள் தனது...
25/08/2026

“நான் எனது கவலைகளையும் துயரங்களையும் அல்லாஹ்விடம்
முறையிடுகிறேன் என்று அவர் கூறினார்"
(யூசுப்:86)

யஃகூப் (அலை) அவர்கள் தனது மகனை, தனது பார்வையை இழந்திருந்தாலும் மேலுள்ளவாறு கூறினார்கள். இறைவன் அவரது பார்வையையும் மகனையும் மீளவும் கொடுத்தான். யார் எதையேனும் ஒன்றை முறையிட நினைக்கிறாரோ அவர் இறைவனிடத்தில் முறையிடட்டும்.

இறைவனைத் தவிர நாம் உரிமையுடன் பேசமுடியுமானவர்கள் யாருமில்லை.
அவன் எம்மைப் படைத்தவன். எமக்கான அனைத்தையும் ஏற்படுத்தித் தந்திருப்பவன். அவனைத் தவிர எமக்கு ஆறுதல் தருபவர் எவருமில்லை.

எமது புலம்பல்களை மற்றவர்கள் ஒரு முறை கேட்கலாம். அல்லது இரு முறை கேட்கலாம். அதற்கு மேல் அவர்களுக்குச் சலிப்பு ஏற்பட்டு விடும். ஆனால், இறைவன் அப்படியல்ல. ஒன்றுக்கு ஆயிரம் தடவை சொன்னாலும் அவன் கேட்கத் தயாராக இருக்கிறான்.

எம்மைச் சரியாகப் புரிந்துகொண்டவன் அவன் மாத்திரமே.

அத்ஹம் ஷர்காவி
"அல் குர்ஆன் சொல்லும் செய்திகள்" நூலில் இருந்து.....

நிம்மதியில் அரைவாசி, அடுத்தவனை உற்றுநோக்காமல் இருந்தால் கிடைத்துவிடும். ஒழுக்கத்தில் அரைவாசி, உனக்கு தேவை இல்லாததில் தலை...
25/08/2026

நிம்மதியில் அரைவாசி,
அடுத்தவனை உற்றுநோக்காமல் இருந்தால் கிடைத்துவிடும்.

ஒழுக்கத்தில் அரைவாசி,
உனக்கு தேவை இல்லாததில் தலையிடாமல் இருந்தால் கிடைத்துவிடும்.

ஞானத்தில் அரைவாசி,
மெளனமாக இருந்தால் கிடைத்துவிடும்.

நஜீப் மஹ்பூழ்

பெண், தனது அன்பை நாற்பது வருடங்கள் வேண்டுமானாலும் மறைத்து வைப்பாள். ஆனால், ரோஷத்தை ஒரு மணிநேரம் கூட மறைத்து வைக்கமாட்டாள...
24/08/2026

பெண், தனது அன்பை நாற்பது வருடங்கள் வேண்டுமானாலும் மறைத்து வைப்பாள்.

ஆனால், ரோஷத்தை ஒரு மணிநேரம் கூட மறைத்து வைக்கமாட்டாள்.

நிஸார் கப்பானி

மனிதன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தான் அணிந்திருக்கும் ஆடையை அடிக்கடி மாற்றுகிறான்,  தனது ஆடைய விட அதிகம் அழுக...
24/08/2026

மனிதன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக, தான் அணிந்திருக்கும் ஆடையை அடிக்கடி மாற்றுகிறான்,

தனது ஆடைய விட அதிகம் அழுக்கடையும் தனது சிந்தனையை, மாற்றுவதற்குப் பதிலாக, அதனைப் பாதுகாத்து, தான் ஒரு பெரிய மனிதர் என்று பெருமையடைகிறான்

நஜீப் மஹ்பூழ்

உன்னைத்திறந்த புத்தகமாகஆக்கிவிடாதே;வாசிக்கத்தெரியாதவர்கள்கிழித்துவிடப்போகிறார்கள்!
23/08/2026

உன்னைத்
திறந்த புத்தகமாக
ஆக்கிவிடாதே;

வாசிக்கத்
தெரியாதவர்கள்
கிழித்துவிடப்போகிறார்கள்!

Address

Colombo

Alerts

Be the first to know and let us send you an email when ஆயிஷா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share