11/01/2016
நான் ஒரு Engineer, நான் ஒரு teacher , நான் ஒரு doctor, நான் ஒரு college student, நான் ஒரு bank employee எனக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம். office work-கே எனக்கு அதிகம். நான் கரும்பு சாப்பிடுவேன், வீட்டுல செய்யிற பொங்கல் சாப்பிடுவேன், T.V-ல காட்டுற ஜல்லிக்கட்டு பார்ப்பேன்… அவ்வளவுதான் என்னுடைய பொங்கல் programme. இதுக்கு மேல வேற என்ன செய்ய? அப்புடின்னுதான் உயர்மட்ட, கிடைமட்ட மக்கள் எல்லாரும் நினைக்கிறோம். ஆனால் அப்புடி இல்லைங்க. ஒவ்வொரு நாள் முழுதும் நல்லா சாப்பிடுவதர்க்கு உதவி செய்கிற விவசாய நண்பர்கள், நெற்பயிர், மாடு, உழவு பொருட்கள், நிலம்ன்னு எல்லாவற்றையும் நினைச்சி பார்ப்பதுதான் பொங்கலுடைய சிறப்பு. இவங்க எல்லாத்தையும் ஒவ்வொரு நாளும் நினைச்சி பாக்கலைன்னாலும் வருசத்துல ஒரு நாள் நினைச்சி பார்த்து அவர்களுக்கு நன்றி சொல்லி விழா எடுப்பதுதான் இந்த பொங்கல், மாட்டுப் பொங்கல், உழவர் திருநாள். இது “தமிழர் திருநாள்” என்றும் அடையாளபடுத்துவதற்கும் பல காரணங்கள் உண்டு. அடுத்தவன் வயிற்றில அடிக்கிற கலாச்சாரம் மெல்ல மெல்ல வளர்ந்துக்கிட்டு இருந்தாலும், தமிழன்னா அடுத்தவன் வயிறார சோறு போடுபவன் தான் என்பதை நினைவுபடுத்துகிற பெருவிழா இது. நம்ம மகிழ்ச்சியை நன்றியை நம்ம நண்பர்கள் உறவினர்கள்-ன்னு சுற்றியிருக்கிற எல்லாருடனும் பகிர்ந்து கொள்ளனும். ஒரு குட்டிகதையை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். கண்களுக்கு குளிரூட்டும் நெற்பயிர்களுக்கு இடையே அழகான பெரிய கூடு கட்டி குடியிருந்தது அந்த வெளிநாட்டு பறவை. ஒரு நாள் அதன் குட்டிப்பறவை வெளியிலே மனிதர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்டது. உடனே, அலரிஅடித்து கொண்டு தன் தாய்பறவையிடம் ஓடிவந்து சொன்னது: “ அம்மா அங்கே விவசாயிகள் இந்த நிலத்துபயிர அறுவடை செய்யபோகிறதா பேசிக்கிட்டு இருக்காங்க ” என்றது. அதிர்சியடைந்த தாய்பறவை, அப்புடியா இது நல்லதுக்கு இல்லையே! இப்படி விடக்கூடாதே!!! என்று ஒரு திட்டம் தீட்டியது. தாய்பறவை தன் தோழியான உள்ளூர்பறவையிடம் இதை எப்படியாவது தடுக்கனுமே எனக்கு உதவி செய். நான் உனக்கு தேவையான உணவு, இருப்பிடம் எல்லாத்தையும் செய்துதருவேன் என்று சொல்லியது. உள்ளூர்பறவை சிறிதும் யோசிக்காமல் வெளியூர் பறவை பேச்சைகேட்டு பேராசை கொண்டு விவாசாயிடம் பேச சென்றது. விவசாய நண்பனே, இந்த நாட்டின் முதுகெலும்பே, உன்னாலே பலர் இன்று வயிறாற உன்னமுடிகிறது என்று விவசாயிக்கு பொறி வைத்தது. மீண்டும் தொடர்ந்தது, உன்னுடைய வயலில் ஒரு வெளிநாட்டு பறவை தஞ்சம் புகுந்துள்ளது. அது உன் நிலத்திலே வாழ்ந்து சுற்றியுள்ள நீர்வளம், மண்வளம், உணவுவளம், இயற்கை இவற்றை அனுபவிக்க வேண்டுமாம். நீதான் அவற்றுக்கு உதவி செய்ய வேண்டும். நான் என்ன செய்ய வேண்டும் என்று நீ நினைக்கிறார் என்றார் விவசாயி. அதற்கு உள்ளூர் பறவை விவசாயிடம் உனக்கு தேவையான உன் பரம்பரைகே தேவையான உணவு, வேலை எல்லாம் கிடைக்கும், நீ….. உன் நிலத்தை அந்த வெளிநாட்டு பறவைக்கே கொடுத்துவிடு என்றது. அதற்கு விவசாயி உள்ளூர் பறவையை பார்த்து “………………………….” என்ன கூறியிருப்பார்.. விவசாயி இடத்தில் நீங்கள் இருந்து இக்கதையில் உண்மைக்கு தகுந்த முடிவெடுங்கள். (ஒரு நாள் முதல்வர்ன்னா சரின்னு சொல்லுவாங்க , ஒரு நாள் விவசாயின்னா சிரிப்பாங்கன்னு நினைக்கிறீங்களா) நமக்கு ஸ்கோர விட , சோறுதான் முக்கியம்-ன்னு வளைதளங்களில் ஒரு குறுஞ்செய்தி அடிக்கடி எட்டிப்பாக்கும். நமக்கு படியளக்குற விவசாயிகளுக்கு விவசாயத்துக்கு ஏற்படுகிற பிரச்சனையதான் ஒரு கதையா பகிர்ந்தேன். எந்த நிலம் எந்த பயிருக்கு, எந்த பயிர் எந்த காலத்துக்கு எந்த காலத்துல என்ன மழைன்னு அறிய கூடிய நம்ம விவசாயிகளுக்கு கூடவேயிருந்து குழிபறிக்கிறவங்கள பற்றி தெரியமாட்டைக்கே!!! நாமாவது அவங்களுக்கு தொல்லை கொடுக்காமயிருப்போம். ஆங்கில புத்தாண்டை வெகுவிமரிசையாக கொண்டாடினோம். அத்தோடு பல தீர்மானங்களையும் எடுத்திருப்போம். இந்த பொங்கல் திருநாள் தமிழ் புத்தாண்டாகவும் கொண்டாடப்படுகிறது. இதனை அவ்வளவு சிறப்பாக கொண்டாடவில்லையென்றாலும் சில தீர்மானங்களை எடுத்துக்கொள்வோம். என் குடும்பத்தாலயோ, என்னாலயோ விவசாயத்துக்கு கெடுதி செய்யமாட்டேன். எனக்கு சோறு போடுகிறவங்களை நான் பாதுகாக்கிறேனோ இல்லையோ அவங்களுக்கு இடையூறு செய்யமாட்டேன். பொதுவாக இயற்கையை பாதுகாப்பேன்னு மேலோட்டமாக சொல்லாமல் உயிரோட்டமாக விவசாயத்துக்கு உதவி செய்வேன்-னு தீர்மானங்கள் எடுப்போம் வெளிநாட்டு மக்கள் நம் ஊர் திருநாளை சிறப்பா கொண்டாடும்போது நாம மட்டும் ஏன் வீட்டுக்குள்ளயே அடைபட்டு இருக்கிறோம். வாங்க இந்த விழாவை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடுவோம். ஏன்னா? இது நம்ம திருவிழா!!!
http://inboxepaper.com/blog/2016/01/11/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b3%e0%af%8d/
நான் ஒரு Engineer, நான் ஒரு teacher , நான் ஒரு doctor, நான் ஒரு college student, நான் ஒரு bank employee எனக்கும் பொங்கலுக்கும் என்ன சம்பந்தம். office work-கே எனக்கு அதிகம…