29/05/2025
கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் , கெளதிய்யா மேல்நிலைபள்ளியில் பல்வேறு சீரமைப்பு பணிகளை கடந்த மூன்று வருடங்காலமாக முன்னெடுத்து வருகின்றது.
அதனை தொடர்ந்து தற்பொழுது மேல்நிலை பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் மர்ஹூம் முஹல்லி. SMH கலீபா சாஹிப் அவர்கள் நினைவாக , முன்னாள் மாணவர்கள் சார்பில் இரண்டு வகுப்பறைகள் கட்டப்பட்டு இன்று 29/05/2025 திறக்கப்பட்டது.
திறப்பு விழா நிகழ்ச்சியை முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் ஆலோசகரும் , கெளதிய்யா மேல் நிலைபள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியருமான
PTM ஜெஹபர் சாதிக் சாஹிப் M.A.,Bed அவர்கள் தொகுத்தளித்தார்.
நிகழ்ச்சியின் துவக்கமாக சங்கத்தின் செயலாளர் ஹாஜி A. M. அப்துல் ஹமீது மரைக்காயர் Bsc இறைமறை ஓதினார்கள்.
சங்கத்தின் துணை செயலாளர்
A. பாவா ஜலாலுதீன் B.B.A., M.Com., நிகழ்ச்சிக்கு வருகை தந்த தலைமை மற்றும் முன்னிலையளர்கள், கெளதிய்யா சங்க நிர்வாகிகள், செயற்குழு , பொதுகுழு உறுப்பினர்கள், நாகூர் தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள், ஆசிரிய, ஆசிரியைகள் முன்னாள் மாணவர்கள், முஹல்லாவாசிகள், ஐமாத்தார்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை நிகழ்ந்தினார்.
முன்னிலை வகித்த பள்ளியின் முன்னாள் தாளாள் Dr. A. H. அபுதல்ஹா ML., LLD அவர்கள் மர்ஹீம். முஹல்லி கலிபா சாஹிப் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து உரையாற்றினார்கள்.
டாக்டர் அல்ஹாஜ் முஹல்லி Dr. H.K யூசுப் சாஹிப் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் வகுப்பறையை திறந்து வைத்தனர்.
மேல்நிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜஹாங்கீர் சார் நன்றியுரை நிகழ்த்த
இறுதியாக காஜி S. சேக்்ஹஸன் சாஹிப் துஆ ஒத நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
வருகை தந்து சிறப்பித்த அனவருக்கும் கெளதிய்யா பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் சார்பின் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இங்ஙனம்
செயலாளர் GSA