Swamy Vivekanandar / சுவாமி விவேகானந்தர்

Swamy Vivekanandar / சுவாமி விவேகானந்தர்

Share

Account created to Share the Views of Swamy Vivekanandar.

08/12/2023

யாரையும் கண்டிக்காதீர்கள்: உங்களால் முடிந்தால் உதவி கரம் நீட்டுங்கள்.

உங்களால் முடியாவிட்டால், உங்கள் கைகளை கோர்த்து, உங்கள் சகோதரர்களை ஆசீர்வதியுங்கள், மேலும் அவர்களை தங்கள் வழியில் செல்லவிடுங்கள்.

-சுவாமி விவேகானந்தர்.

16/10/2023

சுவாமி விவேகானந்தரின் கதைகள்...

துணிவு மிக்க சிறுவன்!

கொல்கத்தாவில் ஒரு நாடக அரங்கத்தில் நாடகம் நடந்துகொண்டிருந்தது. மக்கள் நாடகக் காட்சிகளில் மனத்தைப் பறிகொடுத்து இரசித்துக்கொண்டிருந்தார்கள். அப்போது எதிர்பாராத வகையில் திடீரென்று நாடகமேடையில் ஒரு காட்சி. அதில் நாடகத்திற்கு ஒரு சிறிதும் தொடர்பில்லாத பாத்திரங்கள் நாடகமேடையில் தோன்றினர். அதைத் தொடர்ந்து நாடகமேடையிலும் மக்களிடமும் சலசலப்பு எழுந்தது.

விஷயம் இதுதான் நாடகத்தில் முக்கியப் பாத்திரம் ஏற்று நடித்துக்கொண்டிருந்த நடிகர்களில் ஒருவர், எவரிடமோ பணம் கடன் வாங்கியிருந்தார். அது காரணமாக அந்த நடிகரைக் கைது செய்யும் பொருட்டு, ஆங்கிலேயப் போலீசார் கையில் வாரண்டுடன் நாடகமேடைக்கே சென்றுவிட்டனர். இந்த விஷயம் நாடகம் பார்க்க வந்திருந்த பொதுமக்களுக்குத் தெரிய வந்தது.

ஆனால் அவர்கள் அனைவரும் மறுப்பு எதுவும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தனர்.

அப்போது ஒரு சிறுவனின் குரல், போலீஸ்காரரை நோக்கி இடி போன்று அங்கே முழங்கியது, 'மேடையை விட்டு வெளியே போ... நடிகரைக் கைது செய்யும் உன் வேலையை நாடகம் முடிந்த பிறகு வைத்துக்கொள்... நாடகத்தின் இடையில் புகுந்து பொதுமக்களைத் தொந்தரவு செய் யாதே' அந்தச் சிறுவனின் குரல் திட்டவட்டமாகவும், போலீஸாருக்குக் கட்டளை பிறப்பிப்பது போலவும் கணீரென்று ஒலித்தது. அதைக் கேட்டுப் போலீஸாரே திடுக்கிட்டு விட்டனர். அதற்குள் சிறுவன் கூறியதை. ஆமோதித்துப் பொதுமக்களும் ஒருமித்த குரலில் போலீசாரை நோக்கி, மேடையை விட்டுக் கீழே இறங்கு! நாடகம் முடியும் வரையில் காத்திருந்து நடிகரைக் கைது செய்துகொள் என்று கூவினர்.

பெருத்த எதிர்ப்பு எழுந்ததால், போலீசாரும் அவ்விதமே நடந்துகொள்ளும்படி ஆயிற்று. பொதுமக்கள் சரியான சமயத்தில் குரலெழுப்பிய சிறுவனைப் பாராட்டினார்கள். இது நடந்த சமயத்தில் துணிவு மிக்க அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. பிற்காலத்தில் அந்தச் சிறுவன் வளர்ந்து பெரியவனானபோது, அஞ்சாமை என்ற கருத்தை ஆணித்தரமாக இந்திய மக்களுக்குப் போதித்தான். ஆம், பிற்கா லத்தில் சுவாமி விவேகானந்தராக மலர்ந்த நரேந்திரன்தான் அந்தச் சிறுவன்.

# #

கங்கை ஜாடியின் கதை!

மேலைநாடுகளுக்கு சுவாமி விவேகானந்தர் இரண்டாம் முறையாகக் கப்பலில் புறப்பட்டார். 1899 ஜூன் 24-இல் கப்பல் சென்னை வந்து சேர்ந்தது. சுவாமி துரியானந்தரும் சகோதரி நிவேதிதையும் சுவாமிஜியுடன் பயணித்தனர்.

சென்னை மடத்தில் பூஜைக்காக கங்கை நீர் தேவைப்பட்டது. சுவாமிஜியிடம் சசி மகராஜ் அதைக் கேட்டிருந்தார்.

எனவே ஒரு பெரிய பீங்கான் ஜாடியில் சுவாமிஜி கங்கை நீரைக் கொண்டு வந்தார். அந்த சமயத்தில் துரதிர்ஷ்டவசமாகக் கல்கத்தாவில் பிளேக் என்னும் கொள்ளை நோய் பரவியிருந்தது. சுவாமிஜி கப்பலிலிருந்து தரையில் இறங்க அனுமதிக்கப்பட வில்லை. ஆகையால் சசி மகராஜ் ஒரு படகை அமர்த்திக் கொண்டு கப்பலுக்கு அருகில் சென்றார்.

சுவாமிஜிக்காகத் தான் அன்புடன் கொண்டு சென்றிருந்த இனிப்புக்களையும் உணவு வகைகளையும் ஒரு கூடையில் வைத்தார். கூடை மேலே ஏற்றப்பட்டது. அதே கூடையில் கங்கை நீர் நிறைந்த பீங்கான் ஜாடி கீழே இறக்கப்பட்டது. அந்த ஜாடியை சுவாமிஜி ஒரு கயிற்றி னால் அழுத்தமாகக் கட்டியிருந்தார் அதை சசி மகராஜால் அவிழ்க்க முடியவில்லை. ஆகவே, சுவாமிஜி அதை அறுப்பதற்காக ஒரு கத்தியையும் கீழே போட்டார்.

திரும்புவதற்கு முன்னால் சசி மகராஜ் படகுக்காரனிடம் கப்பலை மூன்று முறை வலம் வருமாறு பணித்தார். இரண்டு பெரிய மகான்களின் பாதங்களை இன்று நம்மால் பணிய முடியவில்லை கப்பலை வலம் வந்தாவது நாம் திருப்தி அடைவோம் என்றார். சுவாமிஜி கொண்டுவந்தது என்பதற்காக, அந்த ஜாடியையும் அவரது திருக்கரங்கள்பட்டது என்பதற்காக அந்தக் கத்தியையும் சசி மகராஜ் பூஜையறையில் வைத்து வழிபடத் தொடங்கினார். அவை இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

# #

வெள்ளரிக்காய் வழங்கிய முஸ்லிம் அன்பர்!

அமெரிக்காவில் சிகாகோ நகரத்தில் 1893-ஆம் ஆண்டு சர்வ சமயப் பேரவை நடைபெற்றது. அதில் உலகில் முக்கியத்துவம் வாய்ந்த எல்லா மதங்களையும் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டார்கள்.

இந்தப் பேரவை நிகழ்ச்சிகள் 1893 செப்டம்பர் 11-ஆம் தேதி முதல், 27ஆம் தேதி வரை பதினேழு நாள்கள் நடைபெற்றன. பேரவை நிகழ்ச்சிகளில், சுவாமி விவேகானந்தர் இந்துமதத்தின் பிரதிநிதியாகக் கலந்துகொண்டு சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். அதனால் அவர் இந்தியாவின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தினார். சுவாமி விவேகானந்தர் அமெரிக்கா செல்வதற்கு முன்பு சுமார் நாலரை ஆண்டுகள், இந்தியாவின் பல பகுதிகளுக்கும் திருத்தலப் பயணம் மேற்கொண்டிருந்தார்.

அவ்விதம் அவர் பயணம் செய்தபோது, ஒருமுறை அவருடன் சுவாமி அகண்டானந்தரும் இருந்தார். சுவாமி அகண்டானந்தர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடர்களில் ஒருவர். இருவரும் இமயமலையில் இருக்கும் அல்மோரா என்ற இடத்திற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்கள்.

இருவரும் உணவு சாப்பிட்டு பல மணி நேரங்கள் ஆகியிருந்தது. அல்மோராவை அடைவதற்கு முன்பு சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் முஸ்லிம்களின் இடுகாடு இருந்தது. அந்த இடத்தை அடைந்தபோது, பசி தாகம் காரணமாக விவேகானந்தருக்கு மிகுந்த களைப்பும் சோர்வும் ஏற்பட்டது. அதனால் அவரால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. மயங்கிக் கீழே விழும் நிலைக்கு வந்துவிட்டார். எனவே அவரை அங்கேயே படுக்க வைத்துவிட்டு, பக்கத்தில் எங்காவது உணவோ, தண்ணீரோ கிடைக்குமா? என்று பார்ப்பதற்கு அகண்டானந்தர் சென்றார்.

அந்த இடுகாட்டில் ஜுல்பிகர் அலி என்ற முஸ்லிம் ஒருவர் வேலை செய்து வந்தார். அவர் இடுகாட்டிற்கு அருகில் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தார். அவரிடம் அன்றைய தினம் உணவு என்று சொல்வதற்கு, ஒரே ஒரு வெள்ளரிக்காய் மட்டும்தான் இருந்தது. விவேகானந்தரின் மோசமான உடல் நிலை ஜுல்பிகர் அலிக்குப் புரிந்தது.
எனவே அவர் ஓடிச் சென்று, தம்மிடமிருந்த வெள்ளரிக்காயை விவேகானந்தருக்குக் கொடுத்தார். மிகவும் பலவீனமாக இருந்த விவேகானந்தர், அதைத் தமது வாயில் வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதற்கு ஜுல்பிகர் அலி, சுவாமிஜி, நான் ஒரு முஸ்லிம் ஆயிற்றே என்றார்.
அதனால் என்ன நாம் அனைவரும் சகோதரர்களே அல்லவா? என்று புன்முறுவலுடன் கேட்டார் விவேகானந்தர். முஸ்லிம் வெள்ளரிக்காயை விவேகானந்தர் வாயில் வைத்து சாப்பிடும்படி செய்தார். அதனால் விவேகானந்தரின் களைப்பு சிறிது நீங்கியது.

இதைப் பற்றி பிற்காலத்தில் விவேகானந்தர், அந்த முஸ்லிம் உண்மை யிலேயே அப்போது என் உயிரைக் காப்பாற்றினார். அதுபோல் என் வாழ்நாளில் எப்போதும் நான் களைப்படைந்ததில்லை என்று கூறினார்.

பின்னர் விவேகானந்தர் இந்தியாவின் ஆன்மிகக் கருத்துகளை அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளில் பிரச்சாரம் செய்து புகழ் பெற்றார். ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் ஒருமுறை அல்மோராவிற்குச் சென்றார்.

அப்போது அல்மோராவில் விவேகானந்தரை ஊர்வலமாக அழைத்துச் சென்று, மிகவும் சிறந்த முறையில் வரவேற்பு அளித்தார்கள். அந்த நிகழ்ச்சியின்போது, ஜுல்பிகர் அலி ஓர் ஓரமாக நின்று விவேகானந்தரைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு விவேகானந்தரை இன்னார் என்று அடையாளம் தெரியவில்லை.

ஆனால் விவேகானந்தர், ஜுல்பிகர் அலியைப் பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொண்டார். உடனே அவர் அங்கிருந்த மக்கள் கூட்டத்தையும் பரபரப்பையும் ஒரு சிறிதும் பொருட்படுத்தாமல் நேராக ஜுல்பிகர் அலியிடம் சென்று, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார்.

மேலும் விவேகானந்தர் அருகில் இருந்தவர்களிடம் ஜுல்பிகர் அலியைப் பற்றி நன்றியுணர்வுடன் கூறி, அவர்களுக்கு அறிமுகப்படுத்தினார். மேலும் ஜுல்பிகருக்கு விவேகானந்தர் பணமும் கொடுத்தார்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

30/09/2023

* கடவுள் ஒருவர் இருக்கிறார். அவரே தந்தை அவரே தாய், தம் குழந்தைகளை அவர் ஒருபோதும் பிரிவதில்லை. ஒருபோதும் பிரிவதில்லை. இல்லை. இல்லை. என் ஆன்ம நாயகனே, என் இறைவா, நீ வாழ்க, வாழ்க.

* கிறிஸ்தவர் இந்துவாகவோ பௌத்தராகவோ மாற வேண்டியதில்லை. அல்லது இந்து, பௌத்தராகவோ கிறிஸ்தவராகவோ மாறவேண்டியது இல்லை. ஒவ்வொருவரும் மற்ற மதங்களின் நல்ல அம்சங்களைத் தனதாக்கிக் கொண்டு, தன் வளர்ச்சி நியதியின்படி வளர வேண்டும்.

* என் சகோதரா, தடையின்றி நற்காரியம் எதையும் சாதித்துவிட முடியாது. இறுதிவரை விடாமுயற்சியுடன் இருப்பவனேவெற்றி பெறுவான்.

* பிரம்மச்சரியம், தூய்மை இவற்றைப் பற்றி மேலைநாட்டினரின் கருத்துக்கள் இந்தியர்களின் கருத்தை போன்றதே என்று எண்ணிவிடக் கூடாது.

* மக்கள் இப்போது என்னைச் சுற்றி அதிகமாகக் கூடுகிறார்கள். உடல் அசைவுகளை உண்மையிலேயே அடக்கியாளக் கூடிய மனிதர்கள் உள்ளார்கள் என்பதை இப்போது நூற்றுக்கணக்கானோர் பூரணமாக நம்புகின்றனர். இந்தக் கருத்துக்களில் மக்களின் பக்தியும் சிரத்தையும் அதிகரித்து வருகின்றன். காத்திருப்பவனுக்கு எல்லாம் வந்து சேர்கின்றன.

* நற்பண்புகளைப் பொறுமையாக வளர்த்துக் கொள்வதும், உண்மைப் பொருளை அறிய தீவிரமாகப் போராடுவதுமே எதிர்கால மனித இனத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

வெவ்வேறு பாதைகள் மூலம் நாம் ஒரே குறிக்கோளை அடைய முடியும் என்பது வேதாந்த மதத்தின் மகத்தான கருத்தாகும். இந்தப் பாதைகளை நான் பொதுவாக கர்மம், பக்தி, யோகம், ஞானம் என்று நான்காகப் பிரித்திருக்கிறேன்.

ஆனால் இந்தப் பிரிவுகள் துல்லியமாகக் கோடிட்டுப் பிரிக்கப்படாதவை. ஒவ்வொன்றும் முற்றிலும் தனியானவை அல்ல, ஒன்றோடொன்று கலந்தவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தக் கலப்பில் எந்த அடையாளம் முக்கியமாக தென்படுகிறதோ, அதை வைத்து அந்தப் பிரிவை அழைக்கிறோம். கர்மத்தைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாதவர்கள், பக்தியுடன் வழிபடுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாதவர்கள், வெறும் ஞானத்தைத் தவிர வேறெதுவும் அற்றவர்கள் என்று தனித்தனியாக யாரையும் நீங்கள் காண முடியாது. எத்தகைய மனப்போக்கு, எந்த அடையாளம் ஒருவரிடம் சிறந்து விளங்குகிறதோ, அதற்கு ஏற்ப இந்தப் பிரிவுகள் வகுக்கப்பட்டுள்ளன.

என்னிடமிருந்து எல்லா வேறுபாடுகளும் மறைந்து விட்டன. சரியான எல்லாம், தவறான எல்லாம், மனமயக்கம் எல்லாம், அறியாமை எல்லாம் மறைந்துவிட்டன. குணங்களைக் கடந்த பாதையில் நான் நடந்து போய்க் கொண்டிருக்கிறேன்.
நான் எந்தச் சட்டத்திற்குக் கீழ்ப் படிய வேண்டும்?
எதற்கும் பணிய வேண்டியதில்லை?
அந்த உயர்ந்த நிலையிலிருந்து பார்க்கும் போது இந்தப் பிரபஞ்சம் ஒரு சேற்றுக் குட்டை போல் தோன்றுகிறது. ஹரி ஓம் தத் ஸத் இறைவன் இருக்கிறார். வேறு எதுவும் இல்லை. இறைவா, நான் உன்னிடமும் நீ என்னிடமுமாக உள்ளோம்.

எம்பெருமானே, நீயே எனது நிலையான புகலிடமாக இருப்பாய். சாந்தி, சாந்தி, சாந்தி.

நாளுக்கு நாள் நான் இதயத்தில், ஆற்றலின் வெளிப்பாட்டை அதிகமாக உணர்கிறேன்.

எனக்குப் பின்னால் இருக்கின்ற சக்தி விவேகானந்தன் அல்ல, இறைவனே.

இந்துமதக் கருத்துக்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பது மிகவும் கடினம். வறண்ட தத்துவம், சிக்கலான புராணங்கள், விசித்திரமான பிரமிக்கச் செய்கின்ற மன இயல் இவற்றிலிருந்து எளிய, சரளமான, பாமர மக்களின் உள்ளங்களைக் கவர்வதாக அதே வேளையில் மிக உயர்ந்த மனங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யவல்லதான ஒன்றை அமைப்பது என்பது மிகமிகக் கடினமான விஷயம். முயன்றவருக்கே அதன் கஷ்டம் விளங்கும்.

மிக நுண்ணியதான அத்வைதம், தினசரி வாழ்க்கையில் ஒரு வாழ்கின்ற கவிதையாக வேண்டும். சீராக்க முடியாத சிக்கலான புராணங்களிலிருந்து தெளிவான தார்மீகக் கோட்பாடுகள் உருவாக வேண்டும். பயத்தைத் தருகின்ற யோக சாஸ்திரத்திலிருந்து அறிவு பூர்வமான, செயல்முறை மனஇயல் வரவேண்டும். ஒரு குழந்தைகூட புரிந்து கொள்ளத்தக்க வகையில் இவற்றை கொடுக்க வேண்டும். அதுவே என் வாழ்வின் பணி.

நான் எவ்வளவு தூரம் வெற்றி பெறுவேன் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.

ஒவ்வொரு நாளும் பொறுமையிலும், அதற்கு மேலாக, அனுதாப உணர்ச்சியிலும் நான் பாடம் கற்றுவருகிறேன்.

மேலான, ஆற்றல் மிக்க ஆங்கிலோ இந்தியர்களிலும் கூட நான் தெய்வீகத்தைக் காண தொடங்கிவிட்டேன் என்று எனக்குத் தோன்றுகிறது. சாத்தான் என்று ஒருவன் இருப்பானானால், சாட்சாத் அந்தச் சாத்தானையும் என்னால் நேசிக்க முடியும் என்ற நிலையை நான் மெல்ல மெல்ல நெருங்கிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்குப் புலப்படுகிறது.

உன்னிடம் மூடநம்பிக்கை இல்லை என்பது நிச்சயம். உலகையே அசைக்க வல்ல ஆற்றல் உன்னிடம் உள்ளது என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். வேறு ஆற்றல்களும் உன்னிடம் வந்து சேரும். தைரியமான சொற்கள், அவற்றைவிட தைரியமிக்க செயல்கள் இவையே வேண்டியவை.

உன்னதமானவர்களே விழித்தெழுங்கள், விழித்தெழுங்கள். துன்பத்தீயில் உலகம் வெந்து கொண்டிருக்கிறது. நீங்கள் தூங்கலாமா. தூங்குகின்ற தெய்வங்கள் விழித்தெழும் வரையில் உள்ளேயுள்ள தெய்வம் நமது அழைப்பிற்குச் செவிசாய்க்கும் வரையில் கூவி அழைப்போம். இதைவிட வாழ்வில் வேறு என்ன உள்ளது?
இதைவிடப் பெரிய செயல் வேறு எது?

உலகமே ஒரு குழந்தை விளையாட்டு. பிரச்சாரம் செய்தல், போதனை செய்தல் அனைத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன்.

தூயவனாக இரு. அதற்கு மேலாக, நேர்மையாக இரு. ஒரு கணமும் கடவுளிடம் நம்பிக்கையை இழக்காதே. நீ ஒளியைக் காண்பாய். 'உண்மை எப்போதும் நிலைத்திருக்கும்.

உண்மையல்லாததை ஒருவரும் பாதுகாத்து வைக்க முடியாது. ஒவ்வொன்றும். விரைவாக அலசி ஆராயப்படுகின்ற இந்தக் காலத்தில் பிறந்திருப்பதால் நாம் பிழைத்தோம்.

பிறர் எதை வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும். செய்து கொள்ளட்டும். நீ தூய்மை, ஒழுக்கம், பக்தி இவற்றிலிருந்து விலகாதே. அனைத்திற்கும் மேலாக, ரகசிய இயக்கங்களின் விஷயத்தில் எச்சரிக்கையாக இரு.

இறைவனிடம் அன்பு கொண்டுள்ள யாரும் மாயா ஜாலங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். மண்ணிலும் சரி, விண்ணிலும், சரி, மிக உயர்ந்த மிகவும் தெய்வீகமான ஆற்றல் புனிதமே.

எது நல்லது என்பது இறைவனுக்குத் தெரியும்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

19/09/2023

சுவாமி விவேகானந்தருக்கு ஏழைகள் மீது எத்துணை கருணை. அதை அவர் வரிகளிலேயே காண்போம்.

இந்த எளிய சுபாவம் படைத்த எழுத்தறிவில்லாத ஏழை மக்களைப் பாருங்கள். இவர்களுடைய மிடிமையை ஓரளவேனும் அகற்ற உங்களால் முடியுமா?
இல்லாவிடில் நான் இந்தக் காஷாயத்தைத் தரித்துக் கொண்டு என்ன பிரயோஜனம்?
சில சமயம் நானே எனக்குள் நினைப்பதுண்டு.

மடங்கள் முதலியவற்றைக் கட்டுவதால் என்ன லாபம்? இவற்றையெல்லாம் விற்று விட்டு, கிடைக்கும் பணத்தைத் தெருவோர நாராயணர்களான இந்த எழைகளிடையே வினியோகிக்கலாமா?

நாம் எந்த உறைவிடத்துக்காகக் கவலைப்பட வேண்டும்? மனத்தையே நாம் உறைவிடமாகக் கொள்ளலாம் அல்லவா? நமது நாட்டு மக்களுக்குப் போதிய உணவும் உடையும் கிடைக்க முடியாத நிலையில், நாம் எப்படி நமது வாயில் ஒரு பருக்கைச் சோற்றை மனமாரப் போட்டுக் கொள்ளலாம்?

அன்னையே, இவர்களுடைய கஷ்டத்திற்கு விடிவு இல்லையா? மேலைநாடுகளில் சமயப் பிரசாரம் செய்வதற்கு நான் சென்ற நோக்கங்களில் ஒன்று, எந்த வகையிலாவது என் நாட்டைச் சேர்ந்த இந்த மக்களுக்கு வழி செய்ய வேண்டுமென்பதுதான்.

மேற்கண்ட சுவாமிஜியின் வரிகளின் மூலம் அவருடைய மனம் எத்துணை மென்மையாக, தொண்டு உள்ளம் கொண்டதாக இருந்தது என்பதை அறிய முடிகிறது.

# #

சுவாமி விவேகானந்தரின் -பொன்மொழிகள்

* ஒரே ஒரு பாவம் தான் உண்டு. அதுவே பலவீனம்.

* இசை மிக உயர்ந்த கலை. அதைப் புரிந்து கொண்டவர்களுக்கு அது மிக உயர்ந்த வழிபாடு.

* நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும், அடி வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக, மிக, உயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச் செய்யுங்கள்.

* உலகையே உலுக்கவல்ல எல்லையற்ற ஆற்றல் என்னிடம் இருப்பதை இப்போது நான் உண்ணமையில் உணர்கிறேன்.

* நான் சில பணிகள் செய்ய வேண்டும் என்று இறைவன் திருவுளம் கொண்டிருந்தால் அதற்கான ஆற்றலையும் அவரே தந்தருள்வார்.

* நம்மை மனிதனாகச் செய்வதற்கான வலுவாய்ந்த பகுத்தறிவையும், பொதுநல உணர்ச்சியையும் தருகின்ற தத்துவமும் சமயமுமே இன்றைய தேவை.

* இருள் உன்னைச் சூழ்கின்றபோதெல்லாம் உன் உண்மை இயல்பை வலியுறுத்து. பாதகமானவை எல்லாம் மறைந்தே தீரவேண்டும். ஏனெனில் இவை எல்லாம் வெறும் கனவுகள். துன்பங்கள் மலையளவாகத் தோன்றலாம். எல்லாமே பயங்கரமானவையாக, இருள் சூழ்ந்தவையாகத் தோன்றலாம். ஆனால் எல்லாம் வெறும் மாயை, பயப்படாதே. மாயை மறைந்துவிடும். நசுக்கு, அது ஓடிவிடும். காலால் மிதி, இறந்துவிடும். பயத்திற்கு இடம் கொடுக்காதே.

* மிக உயர்ந்த தேவனிலிருந்து மிகச் சாதாரண புல்வரை ஒரே சக்தி தான் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது. மனிதனில் அந்தச் சக்தியை எழுப்புவதற்காக நாம் வீட்டிற்கு வீடு சென்று முயற்சி செய்ய வேண்டும்.

இரண்டாவதாக, இதனுடன் கல்வியையும் தர வேண்டும். இதைச் சொல்வது எளிது. ஆனால் செயல் முறையில் கொண்டு வருவது எப்படி?

நம்நாட்டில் எல்லாவற்றையும் துறந்த, தன்னலமற்ற, கருணை நிரம்பிய மக்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள்.

அவர்கள் பல்வேறு இடங்களுக்கு யாத்திரை செல்லும் போது, எவ்விதப் பிரதி பலனையும் எதிர்பார்க்காமலே மதத்தைப் போதிக்கிறார்கள்.
அவர்களுள் பாதி பேராவது ஆசிரியர்களாகப் பயிற்சி பெறலாம். எத்தகைய கல்வி நமக்கு மிகவும் தேவையாக உள்ளதோ, அத்தகைய கல்வியை அவர்கள் கொண்டு செல்லலாம்.

* மனிதர்களை நாடினால் துன்பம் தான். எனவே இறைவனையே நாட வேண்டும்.

*சகோதரா, என் இதயம் விரிந்துள்ளது. மிகவும் பரந்து விரிந்துள்ளது. நான் உணரக் கற்றுக் கொண்டுள்ளேன். உண்மைதான் சகோதரா, நான் மிகவும் ஆழமாக உணரக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.

* வாருங்கள், மனிதர்களாக ஆகுங்கள். உங்கள் குறுகிய வளைகளிலிருந்து வெளியேறி, பார்வையை விரியுங்கள். நாடுகள் முன்னேறுவதைப் பாருங்கள். மனிதனை நீங்கள் நேசிக்கிறீர்களா? உங்கள் நாட்டை நேசிக்கிறீர்களா? அப்படியானால் வாருங்கள். உயர்ந்த சிறந்த விஷயங்களுக்காக நாம் பாடுபடுவோம்.

* நான் உலகிற்கு அளிப்பதென்று செய்தி ஒன்று உள்ளது. பயமோ, எதிர்காலத்தைப் பற்றிய தயக்கமோ இன்றி அதை நான் அளிப்பேன்.

* ஆன்மீகச் சிந்தனைகளை இலட்சியங்கள் என்ற வகையில் இரசித்து மகிழ்வதே ஒரு சுகமான அனுபவம் ஆகும். அது மனிதனை இன்பம் மிகுந்தவனாகச் செய்கிறது. ஆனால் உலகாயுதம் என்னும் முட்டாள்தனம் உள்ளதே. அது போட்டிக்கும் அளவுக்கு மீறிய பேராசைக்கும் இறுதியில் மரணத்திற்கும், அதாவது தனி மனிதனின் மரணத்திற்கும் தேசிய மரணத்திற்கும் தான் அழைத்துச் செல்கிறது.

* இங்கிலாந்து எங்களுக்கு ஒரு நாட்டை ஆள்வது பற்றி கற்றுத்தரட்டும். ஏனெனில் அந்தக் கலையில் அனைத்து நாடுகளுக்கும் தலைமை இடத்தில் இங்கிலாந்தே திகழ்கிறது.

விவசாயம், விஞ்ஞானம் மற்றும் எதையும் நேர்த்தியாகச் செய்கின்ற திறம் ஆகியவற்றை அமெரிக்கா எங்களுக்குக் கற்றுத் தரட்டும். நாங்கள் உங்கள் காலடியில் அமர்ந்து கற்றுக் கொள்கிறோம்.

ஆனால் இந்தியாவிற்கு அன்மீகத்தைக் கற்றுத்தரலாம் என்று எந்த நாடும் நினைக்க வேண்டாம். ஆன்மீகத்தை இந்தியாவே உலகிற்குப் போதிக்கும்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

12/09/2023

சுவாமி விவேகானந்தரின் இறுதிக்காலம்...

சுவாமி விவேகானந்தரின் மிகச் சிறந்த அயல் நாட்டு பக்தைகளுள் சகோதரி நிவேதிதை மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆவார். எனக்கு வயதாக ஆகச் சின்னஞ்சிறு விஷயங்களில் மகத்துவத்தை நான் வரவர அதிகமாகக் காண்கிறேன் என்று சுவாமி விவேகானந்தர் சகோதரி நிவேதிதையிடம் கூறினார்.

அவர் மேலும், பெரிய அந்தஸ்தில் இருக்கும் எவராலும் பெரிய மனிதராக இருக்க முடியும். புகழின் பிரகாசத்தில் கோழையும் தைரியம் அடைந்துவிடுவான். உலகம் காத்துக் கொண்டே இருக்கிறது.

யாரும் அறியாத சாமானிய மக்கள் தமது கடமைகளைச் சந்தடியின்றி, இடையறாது தொடர்ந்து ஆற்றி வருவதில்தான் உண்மையான பெருமை இருக்கிறது என்பதை நான் வரவர அதிகமாக உணருகின்றேன் என்று கூறினார்.

சுவாமி விவேகானந்தர் மரணத்தை அச்சமின்றி நேருக்கு நேர் பார்த்தார். அது அவரை நோக்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. எல்லாச் சீடர்களையும் நினைத்துக் கொண்டார்.

கடல் கடந்த நாடுகளில் வாழ்பவர்களையும் நினைவு கூர்ந்தார். அவரது சாந்தமான தோற்றம் அவர்களை ஏமாற்றிவிட்டது. இன்னும் மூன்று அல்லது நான்கு வருடகாலம் அவர் பிழைத்திருப்பார் என்று அவர்கள் எண்ணினர்.

ஆனால் தமது இறுதிப்பயணம் நெருங்கிவிட்டதாக சுவாமிஜி நன்கு உணர்ந்திருந்தார். தமது பணியைப் பிறர் கையில் ஒப்படைத்துப் போவதைப் பற்றி அவர் வருத்தப்படவில்லை. சீடர்களுடன் எப்போதுமே இருந்து கொண்டு அவர்களை வளரவொட்டாமல் பாழடித்து விட்டிருக்கும் குருமார் எவ்வளவோ இடங்களில் உள்ளனர் என்று கூறினார்.

தாம் அவர்களிடமிருந்து போய்விட வேண்டும். அப்போது தான் அவர்கள் சுயமாக வளர்ச்சி காண இயலும் என்றார். நடைமுதல் பிரச்சனைகளைப் பற்றி எவ்வித அபிப்ராயமும் கூற அவர் மறுத்துவிட்டார். வெளி விவகாரங்களில் என்னால் இனிப் பிரவேசிக்க முடியாது. நான் போய்க் கொண்டிருக்கின்றேன் என்று அவர் மேலும் கூறினார்.

மகா யாத்திரை தினமாகிய 1902 ஜூலை 4ம் தேதி வெள்ளிக்கிழமையன்று பல வருடங்களாக இல்லாத ஒரு தெம்பும் ஆனந்தமும் அவரிடம் காணப்பட்டது. அதி காலையிலேயே துயிலெழுந்தார். வழக்கத்துக்கு மாறாக அந்நேரத்தில் ஆலயத்துக்குச் சென்று அன்றையப் பணியைத் துவக்கினார். ஜன்னல்களை மூடிக் கதவுகளைத் தாழிட்டார்.

காலையில் 8 மணி முதல் 11 மணி வரையில் தனிமையில் தியானம் செய்தார். காளி தேவியின் மீது அழகான பிரார்த்தனைப் பாடல் ஒன்று பாடினார். தாழ்வாரத்துக்கு அவர் வந்த போது முற்றும் மாறுபட்டவராகத் தென்பட்டார். நன்றாகப் பசித்த நிலையில் சீடர்களுடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டார்.

புதிய மாணவர்களுக்கு மூன்று மணி நேரம் நகைச்சுவை உணர்வுடன், விறு விறுப்புடன் கூடிய வடமொழிப் பாடபோதனையை நடத்தினார். பிரேமானந்தருடன் பேலூர் சாலையில் இரண்டு மைல் தூரம் நடந்து சென்றார்.

வேதத்துக்கு என்று ஒரு தனிக்கல்லூரி நிறுவுவது பற்றியும், வேத அத்யயனம் பற்றியும் தமது மனத்திலிருந்த திட்டத்தை விவரித்தார். அது மூட நம்பிக்கைகளை கொன்று விடும் என்று கூறினார்.

மாலை நேரம் வந்தது. தமது சகோதரத் துறவிகளுக்கு இறுதியாக அன்பான பேட்டி ஒன்று அளித்தார். சமுதாயங்களின் வளர்ச்சி மற்றும் வீழ்ச்சி பற்றிப் பேசினார்.
அவர் கூறினார், ஆண்டவனைத் தேடி அடையும் தன் வழியில் இந்தியா தொடர்ந்து செல்லுமாயின், அது அழிவற்றிருக்கும். ஆனால் அரசியலிலும் சமுதாயப் போராட்டங்களிலும் அது ஆழ்ந்துவிடுமாயின் அழிந்து விடும்.

மாலை ஏழு மணி. பூஜைக்கான நேரம் என்று மடத்து மணியோசை அறிவித்தது. தமது அறைக்குள் சென்று கங்கையை எட்டிப் பார்த்தார். தம்முடன் கூட இருந்த மாணவனை அனுப்பிவிட்டார். தமது தியானம் கலையப்படக் கூடாது என்ற விருப்பத்தைத் தெரிவித்தார்.

நாற்பத்தைந்து நிமிடங்களுக்குப் பிறகு துறவியை அழைத்து அனைத்துச் சன்னல்களையும் திறக்கச் சொன்னார். தரையில் அமைதியாக இடதுபுறம் திரும்பி அசைவில்லாமல் படுத்துக் கொண்டார். அவர் தியானத்தில் இருப்பது போல் தோன்றியது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு வலது புறம் திரும்பி ஆழ்ந்த பெருமூச்சு விட்டார்.

பிறகு பல விநாடி நேரம் அமைதி நிலவியது. கண்கள் இமைக்காமலேயே குத்திட்டு நின்றன இரண்டாவதாக ஒரு பெருமூச்சு விட்டார் சுவாமிஜி.
பிறகு மெளனம்.

சுவாமிஜியின் சீடர்களில் ஒருவர், அவருடைய நாசித் துவாரங்களில், வாய் ஓரம், கண்களில் சிறிது. இரத்தம் கசிந்திருந்தது என்று கூறினார்.

தாமே சுயமாக முயன்று குண்டலினி சக்தியை வெளிப்படுத்தி, பரமானந்தமான இறுதிநிலையை எய்தி அவர் உயிர் நீத்தார்.

தமது பணி முடிவறுங் காலையில் அதைப் புலப்படுத்துவதாக இராமகிருஷ்ண பரமஹ்மசர் அவருக்கு வாக்களித்தது உண்டு.

சுவாமி விவேகானந்தர் மறையும் போது அவருக்கு வயது 39.
மறுநாள் பகவான் ஸ்ரீஇராமகிருஷ்ணரைப் போலவே அவருடைய சடலத்தையும் அவருடைய சகோதர சீடர்கள் தங்கள் தோள் கொடுத்து தூக்கிச் சென்றனர். அங்கிருந்த அனைவரும் ஜெயகோஷம் செய்தனர்.

ஆம். இந்தியாவின் ஆன்மீக விளக்கு மறைந்தது.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

03/09/2023

இங்கிலாந்தில் சுவாமி விவேகானந்தர்...

1896ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுவாமிஜி இரண்டாம் முறையாக இங்கிலாந்து சென்றார். அவருடைய அழைப்பை ஏற்று சாராதானந்தர் அங்கே வந்திருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு சுவாமிஜி சாரதானந்தரைச் சந்திக்கிறார். எனவே, இருவ ரும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டனர்.

சாரதானந்தரிடமிருந்து ஆலம் பஜார் மடத்து விவரங்களை அறிந்து கொண்டார் சுவாமிஜி. தமது பணிகள் ஸ்ரீஇராம கிருஷ்ணரின் திருவருளால் இந்தியாவில் வேரூன்றுவது கண்டு மிகுந்த திருப்தியடைந்தவராய் இலண்டன் பணிகளில் கவனத்தைச் செலுத்தினார்.

சுவாமி விவேகானந்தர் ஏற்கனவே 1895ம் ஆண்டு முதல் முறை இங்கிலாந்து சென்றுள்ளார். அவருடைய சொற்பொழிவுகள் இங்கிலாந்து மக்களால் பெரிதும் வர வேற்கப்பட்டன. அவர் அங்கே மார்கரெட் நோபல் என்னும் தூய பெண்மணியைச் சந்தித்தார். அவர்தான் பின்னாளில் நிவேதிதை என அழைக்கப்பட்டார்.

சுவாமிஜி இரண்டாம் முறை இங்கிலாந்து செல்லும் போது பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். அவரிடம் பெருமதிப்புக் கொண்டிருந்தார் சுவாமிஜி. பேராசிரியர் மாக்ஸ்முல்லர் பகவான் ஸ்ரீஇராம கிருஷ்ணர் அவதார புருஷர் என்று அவர் நம்பினார். வேத, வேதாந்தங்களில் நிறைபுலமை உடையவர்.

சில நாட்களுக்கு முன்பு நான் அவரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட அவரை வணங்குவதற்காகச் சென்றேன் என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் என்று சுவாமிஜி யின் திருவாயால் பாராட்டப்பட்டவர் பேராசிரியர் மாக்ஸ்முல்லர்.

சுவாமிஜி மாக்ஸ்முல்லரைச் சந்தித்தபோது அவருக்கு வயது 70 ஆகியிருந்தது. ஸ்ரீஇராம கிருஷ்ணரிடம் அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார் மாக்ஸ் முல்லர். மேல் நாட்டினரில் பகவான் ஸ்ரீஇராம கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவருள் இவரே முதலாமவர் ஆவார். ஸ்ரீஇராம கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளை இவருக்கு வழங்கியவர் இராமகிருஷ்ணானந்தர் ஆவார். சுவாமிஜி இறுதிவரை மாக்ஸ்முல்லரிடம் பெருமதிப்பு வைத்திருந்தார்.

கேதே சேன்பான், ஹேல் சகோதரிகளான ஹேரியட் மெகின்ட்லி, மேரிஹேல், இசபெல்மெகின்லி, ஹேரியட்ஹேல், மிசஸ் சாராபுல், மிசஸ் ஜோசஃபைன் மெக்ல வுட், இ.டி.ஸ்டர்டி, பிரான்சிஸ் லெக்கட், ஜான் பி.லியான், மிசஸ் லியான், ஜெஸ்ஸி மீட், டோரதி, நிகோலாடெஸ்ஸா (விஞ்ஞானி), இங்கர்சால், மேடம் சாராபெர்ன் ஹாட், மேடம் எம்மாகால்வே, சகோ தரி நிவேதிதை, ஜெ.ஜெ.குட்ஷன், சகோதரி கிறிஸ்டைன் போன்றோர் சுவாமிஜியின் மீது பெருமதிப்பும் பேரன்பும் வைத்திருந்த மேலைநாட்டுச் சீடர்கள் ஆவர்.

சுவாமிஜி இங்கிலாந்தில் இருந்த போது ஒருநாள் பிற்பகல் உணவிற்குப் பிறகு சாய்வு நாற்காலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். திடீரென்று அவருடைய முகத்தில் கடுமையான வேதனை தெரிந்தது. பிறகு மூச்சை ஆழ்ந்து இழுத்த வாறே ஃபாக்ஸ் என்னும் தன் சீடரிடம், திடீரென்று இதயத்தில் பயங்கர வேதனையை உணர்ந்தேன். இதயம் நின்று விடும் போல் தோன்றியது. என் தந்தை மாரடைப்பால் தான் இறந்தார். மாரடைப்பு எங்கள் பரம்பரை நோய் என்றார்.

சுவாமிஜியின் உடல்நிலை சீர்குலைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. எனவே சுவிட்சர்லாந்தில் சில நாள்கள் ஓய்வெடுப்பதற்காக அவருடைய சீடர்கள் ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் இங்கிலாந்திலும் பலர் சுவாமிஜியின் பாதையில் செல்லத் தயாராயினர்.
மிஸ் முல்லர் தமது பெருஞ்செல்வத்தை எடுத்துக் கொண்டு இந்தியா சென்று எஞ்சிய நாள்களைக் கழிக்க முடிவு செய்தார். சேவியர் தம்பதிகள் இமாலயத்தில் ஓர் ஆசிரமம் நிறுவி வாழ முடிவு செய்தனர்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

27/08/2023

இராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கம் தோற்றுவித்தல் அமெரிக்காவில் இந்து சமயத்தின் பெருமைகளை பலரும் வியக்கும் வண்ணம் அற்புதமாகப் பேசிய சுவாமி ஜி 1897ம் ஆண்டு ஜனவரி 15ம் நாள் மதியம் கொழும்பு வந்து சேர்ந்தார்.

அங்கே இந்து சமயத்தினரால் அவர் பணிவோடு வரவேற்கப்பட்டார்.

1897ம் ஆண்டு மே மாதம் முதல் தேதி கல்கத்தாவில் இராமகிருஷ்ண மடம் என்ற பெயரில் இந்து மதத்தின் சிறப்பை மக்களுக்கு எடுத்துக்கூற மடத்தை ஏற்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.

மேலும் சமுதாய சேவை செய்ய இராமகிருஷ்ண இயக்கம் தொடங்கினார். இதன் மூலம் மக்களுக்குக் கல்வி, கலாச்சாரம் போதிக்கப்பட்டன. நோயுற்றவர்களைக் காப்பாற்றும் பொறுப்பும் இந்த இயக்கம் ஆற்றியது. கர்மயோகத்தின் அடிப்படையில் இந்த இயக்கம் சுவாமிஜி கல்கத்தாவிற்கு அருகே பேலூரில் மடம் நிறுவினார்.

இதுதான் இராமகிருஷ்ண மடம் மற்றும் இயக்கத்தின் தலைமையிடமாகும். இன்னொரு மடம் அல்மோராவிற்கு அருகில் அமைக்கப்பட் டது. அதன் பெயர் அத்வைத ஆசிரமம் என்பதாகும். மூன்றாவதாக சென்னையில் அமைக்கப்பட்டது.

இராமகிருஷ்ண மடம், இயக்கம் ஆகியவற்றின் பணிகளை மக்களுக்குத் தெரிவிக்க இரண்டு இதழ்கள் தொடங்கப்பட்டன. ஒன்றின் பெயர் பிரபுத்த பாரதா என்பதாகும். இது ஆங்கிலத்தில் வெளி வந்தது.

மற்றொன்று உத்போதன் என்பதாகும். இது வங்காள மொழியில் வெளிவந்தது.

டாட்டா மிகப் பெரிய தொழிலதிபர். அவர் சுவாமிஜியால் மிகவும் கவரப்பட்டார். ஒருநாள் சுவாமிஜி டாட்டாவிடம், நீங்கள் ஏன் தீக்குச்சியை ஜப்பானிலிருந்து இந்தி யாவிற்கு இறக்குமதி செய்கிறீர்கள்? அதனால் உங்களுக்குச் சிறிது லாபம் கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால் இந் தியாவின் செல்வவளம் ஜப்பானுக்கு அல்லவா போகிறது.

நீங்கள் இந்தியாவிலேயே ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலை ஆரம்பிக்கலாமே, உங்களுக்கு லாபத்திற்கு லாபமும் கிடைக்கும். வேலையில்லாமல் தவிக்கின்ற இந்தியர்கள் பலருக்கு வேலையும் கிடைக்கும்.

இந்தியாவின் செல்வவளமும் வேறெங்கும் போகாமல் பாதுகாக்கப்படும் என்று டாட்டாவுக்கு ஆலோசனை கூறினார் சுவாமிஜி.

சுவாமிஜியின் தேசப்பற்றும், கூடவே இருந்த செயல்முறை அறிவும், இந்திய முன்னேற்றத்திற்கு அவர் காட்டிய வழியும் டாட்டாவின் மனதில் ஆழமாகப் பதிந்தன. அவர் சுவாமிஜியின் கருத்தைப் பின்னாளில் தமது நிறுவனத்தில் செயல்படுத்தவும் செய்தார்.

சுவாமி விவேகானந்தர் டெல்லி, கேத்ரி போன்ற பல இடங்களைச் சுற்றிப் பார்த்த பின்பு 1896ம் ஆண்டு அவர் கல்கத்தா வந்தடைந்தார். அவர் அங்கு சில மாதங்கள் தங்கியிருந்து மடத்துக்கான பணிகளையும், தன்னுடைய சீடர்களையும் மேற்பார்வையிட்டார். சீடர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களை எதையும் தாங்கும் உறுதியான இதயம் படைத்தவர்களாக மாற்றினார்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

20/08/2023

புகழ்மிக்க சிகாகோ சொற்பொழிவு...

உலக சமய மதங்களின் மாநாடு சிகாகோ கலைக் கழகத்தில் 1893 செப்டம்பர் 11 திங்கள் முதல் 27 வரை கூடியது. மிக்சிகன் அவென்யுவில் அந்தக் கட்டிடம் அமைந்திருந்தது. உலகக் கண்காட்சியின் ஓர் அங்கமான அது. ஓவியங்கள் சிற்பங்கள், செப்புச் சிலைகள் என்று கலையின் பல்வேறு அம்சங்களைக் கொண்டதாக இருந்தது.

அந்தக் கட்டடம் அப்போதுதான் தயாராகி வந்தது. அதன் கூடங்களில் பல கண்காட்சிக்குரிய பொருள்கள் வைக்கப்படவில்லை. காலியாக இருந்தன. அந்தக் கூடங்கள் உலகச் சமய மகாசபைக்குப் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று கொலம்பஸ் ஹால்.

உலக சமய மகாசபை கொலம்பஸ் ஹாலில் தொடங்கியது.
அதில் கீழ்த் தளத்திலும் மேல் தளத்திலுமாக சுமார் 4000 பேர் உட்கார முடியும். நிகழ்ச்சிகளின் போது பலருக்கு இடம் கிடைக்கவில்லை. எனவே, 4ம் நாளிலிருந்து நிகழ்ச்சிகள் வாஷிங்டன் ஹாலில் நடைபெற்றன. இன்னும் சில ஆயிரம் பேர் கூடுதலாக அமரக்கூடிய வசதியுடையதாக அந்த ஹால் இருந்தது.
முதல் 3 நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 4ம் நாள் இங்கே அனைவருக்குமாக மீண்டும் ஒருமுறை நடைபெற்றன.

ஒவ்வொரு நாளும் மூன்று பகுதிகளாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பகுதியும் 2 முதல் 3 மணிநேரம் நடைபெற்றது. எல்லா பகுதிகளுக்கும் மக்கள் ஏராளமாகக் கூடினர். பெண்கள் அதிகமாக இருந்தனர்.

மேடை சுமார் 50 அடி நீளமும் 15 அடி அகலமும் உடையதாக இருந்தது. ஸிஸரோ, டெமஸ்தனிஸ் ஆகிய இருவருடைய பளிங்குச் சிலைகள் அந்த மேடை மீது இருந்தன. இந்தச் சிலைகளுக்கு நடுவில் சிம்மாசனம். போன்ற ஓர் உயர்ந்த இரும்பு நாற்காலி இருந்தது. உலக மதங்களைச் சார்ந்த தலைவர்கள் தங்கள் மதங்களின் சிறப்பைப் பற் றிப் பேசினர். சுவாமி விவேகானந்தர் பேச எழுந்தார்.

ஒரு கணம் கலைமகளை மனத்தில் நினைத்தார். அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்தார்.
அவ்வளவுதான், அவரால் அடுத்த வார்த்தையைப் பேச முடியவில்லை. காதுகளையே பிளப்பது போல் அங்கே கைத்தட்டல் எழுந்தது. வரலாற்றில் மிகவும் புகழ்பெற்ற அந்த சிகாகோ சொற் பொழிவின் சில பகுதிகள் பின்வருமாறு.

இன்பமும் இதமும் கனிந்த உங்கள் வரவேற்புக்கு பதில் அளிக்க இப்போது உங்கள் முன் நிற்கின்றேன். என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதனை வெளியிட வார்த்தைகள் இல்லை.
உலகத்தின் மிகப் பழமை வாய்ந்த துறவியர் பரம்பரையின் பெயரால் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.

அனைத்து மதங்களின் தாய் மதத்தின் பெயரால் நன்றி கூறுகிறேன். பல்வேறு இனங்களையும் பிரிவுகளையும் சார்ந்த கோடிக்கணக்கான இந்து பெருமக்களின் பெயரால் நன்றி கூறுகிறேன் என்று தமது உரையைத் தொடங்கினார் சுவாமிஜி.

பிறமதக் கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல், அவற்றை எதிர்பில்லாமல் ஏற்றுக் கொள்ளுதல் என்னும் இரண்டு பண்புகளை உலகிற்குக் கற்றுக் கொடுத்த மதத்தைச் சார்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன் என்று இந்து மதத்தின் பெருமையை எடுத்துக் கூறினார்.

சிகாகோவில் சுவாமிஜியின் பேச்சுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்ததற்கு என்ன காரணம்.
அவர், தொடக்கத்தில் அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே அழைத்ததா? இல்லை.
ஏனெனில், சுவாமிஜிக்கு. முன்னரே மிஸ் அகஸ்டா என்பவரும் பேராசிரியர் பினாஸ் செராஸ் என்பவரும் இவ்வாறு பேசியிருந்தனர்.
அப்படியானால் சுவாமிஜிக்கு கிடைத்த அமோக வரவேற்புக்கு என்ன காரணம்? இதனை சுவாமிஜியின் வார்த்தைகளிலேயே கேட்போம்.

சிகாகோவில் எனது முதல் சொற்பொழிவில் நான் எல்லோரையும் அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே என்று அழைத்ததும், எல்லோரும் எழுந்து நின்று மகிழ்ச்சி ஆவாரம் செய்ததும் உங்களுக்குத் தெரியும்.
ஆனால், அப்படி அவர்கள் பரவசப்பட்டதற்கு என்ன காரணம் தெரியுமா? ஏதோ அதிசய ஆற்றல் என்னிடம் இருப்பதாக நீங்கள் நினைக்கலாம்.

உண்மைதான். என்னிடம் அத்தகைய ஆற்றல் உள்ளது. அது இதுதான். ஒருமுறை கூட காம எண்ணம் என்னுள் புக நான் அனுமதித்ததில்லை.
என் மனம், எனது சிந்தனை, பொதுவாக மனிதன் அந்த வழியில் செலவழிக்கின்ற என் ஆற்றல்கள் அனைத்தையும் ஓர் உயர்ந்த போக்கில் போகுமாறு பயிற்சி அளித்தேன். அது யாராலும் தடுக்க முடியாத ஒரு மாபெரும் ஆற்றலாக உருவெடுத்தது.

தூய வாழ்க்கையின் ஆற்றல் அத்தகையது. தூய்மை மற்றும் மௌனத்திலிருந்து ஆற்றல் மிக்க சொற்கள் பிறக்கின்றன என்பார் சுவாமிஜி.

அந்த ஆற்றல் மிக்க சொற்கள் தான் அன்று ஆயிரக் கணக்கான இதயங்களையும், பிறகு அமெரிக்கா முழுவதையும், இன்று உலகம் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளது.

இங்ஙனம் சுவாமி விவேகானந்தர் இந்து சமயத்தின் பெருமைகளை உலக அரங்கில் எடுத்துக் கூறி நமது பாரத நாட்டிற்குப் பெருமை சேர்த்தார்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

# #

15/08/2023

இந்தியச் சுற்றுப் பயணம்...

பிருந்தாவனத்திலிருந்து ஹரித்வாரை நோக்கிப் புறப்பட்டார் சுவாமிஜி.
பசியும் களைப்பும் மேலிட அவர் ஹத்ராஸ் இரயில் நிலையத்தில் அமர்ந்திருந்தார். அங்கே இரயில் நிலையத் துணை அதிகாரியாக இருந்தார் சரத் சந்திர குப்தர். இவர் பழகுவதற்கு இனியவர். நல்லவர். உடல் உறுதி வாய்ந்தவர்.

அவர் சுவாமிஜியைக் கண்டதும் அவரால் கவரப்பட்டார். இனம் புரியாத சக்தி ஒன்று தம்மை சுவாமிஜியிடம் ஈர்ப்பதாக அவர் உணர்ந்தார். எனவே நேராக அவரிடம் சென்று, சுவாமிஜி பசியாக இருக்கிறீர்களா? என்று கேட்டார்.

சுவாமிஜி, ஆம் என்று கூறியதும்...
அவர், என் வீட்டிற்கு வாருங்கள் என்று கூறி சுவாமிஜியை அழைத்தார்.
நான் வந்தால் நீ என்ன தருவாய்? என்று ஒரு சிறுவனின் மனோநிலையுடன் கேட்டார் சுவாமிஜி.

ஓ என் அன்பரே, என் இதயத்தையே இன்சுவைப் பண்டம் செய்து தருவேன் என்ற பாரசீகப் பாடல் ஒன்றைப் பதிலாகக் கூறினார் சரத்.

இந்தப் பதிலால் மிகவும் மகிழ்ந்த சுவாமி சரத்தின் வீட்டிற்குச் சென்றார். சுவாமிஜிக்கு நல்ல, சுவைமிகுந்த விருந்தளித்தார் சரத்.

தொடர்ந்து இமயத்தின் உயர் பகுதிகளான கேதார்நாத், பத்ரிநாத் போன்ற கோயில்களுக்குச் செல்ல மிகுந்த ஆவல் கொண்டார் சுவாமிஜி. அனால், சரத் நோயினால் வாடினார். எனவே, தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள முடியாமல் போயிற்று. மீண்டும் ஹத்ராஸிற்கே இருவரும் திரும்பி வந்தனர். அங்கே சுவாமிஜி மலேரியா நோய்க்கு ஆளானார்.

இவ்வாறு இருவரும் நோயுற்று மிகவும் பலவீனமான நிலையில் இருந்தனர்.
அந்த வேளையில் அங்கே தீர்த்த யாத்திரையாகச் சென்று கொண்டிருந்த சிவானந்தர் அவர்களைக் கண்டு சுவாமிஜியை வராகநகர் மடத்திற்குத் திரும்பி அழைத்து வந்தார். அது 1888ம் ஆண்டின் இறுதி.

1889ம் ஆண்டு ஜனவரி மாதத்தின் இறுதியில் அன்னை ஸ்ரீ சாரதா தேவியார் மற்றும் சகோதரத் துறவியர் ஓரிருவருடன் ஸ்ரீஇராமகிருஷ்ண பரமஹம்சர் பிறந்த இடமான காமார்புகூருக்குப் புறப்பட்டார் சுவாமிஜி. வழியில் ஆன்ட்பூரில் அனைவரும் ஒருவாரம் தங்கினார். காமார்புகூர் செல்லும் வழியில் சுவாமிஜிக்குக் காய்ச்சலும் வாந்தியும் ஏற்பட்டன. எனவே, அவர் காமார்புகூர் செல்லாமல் திரும்ப நேர்ந்தது.

இத்தகைய பயணங்களின் போது சுவாமிஜி பல. அரசர்களின் அரண்மனைகளிலும், அதே வேளையில். தன்னை அன்புடன் ஆதரித்த ஏழைகளின் குடிசைகளிலும் தங்கினார்.

இப்பயணங்களின் போது அவர், இந்துமதத்தின் கலை, பண்பாடு, கலாச்சாரம் பற்றி மக்களுக்கு விளக்கியவாறே இருந்தார். சாதி வேறுபாடுகளை அவர் அறவே வெறுத்து ஒதுக்கும்படி கூறினார்.

சுவாமிஜி 1892ம் ஆண்டு டிசம்பர் 24ம் நாள் கன்னியாகுமரியை அடைந்தார். அவர் கடலில் நீந்திச் சென்று அங்கிருந்த பாறை ஒன்றில் அமர்ந்து தியானம் செய்தார். அது விவேகானந்தர் நினைவுப் பாறையாக விளங்குகிறது. சுவாமி விவேகானந்தர் சென்னைக்கும் வந்து அன்றைய இளைஞர்களிடம் இந்து மதப் பெருமைகளைப் பேசியுள்ளார்.

சென்னைவாழ் மக்கள் சுவாமி விவேகானந்தரின் பேச்சால் பெரிதும் கவரப்பட்டார்கள். அவரை அமெரிக்காவில் நடைபெறும் உலக சமய மாநாட்டில் கலந்து கொள்ளச் செய்து பேச வைத்தால் அயல்நாடுகளிலும் இந்து மதத்தின் கலை, பண்பாடு, கலாச்சாரத்தின் பெருமை பரவும் என நம்பினர். எனவே, சுவாமிஜியை அமெரிக்காவிற்கு அனுப்ப பணம் வசூல் செய்தனர்.

இராமநாதபுர பாஸ்கர சேதுபதி மகா ராஜா மற்றும் மைசூர் மன்னர் ஆகியோரெல்லாம் ஒரு தொகையைத் திரட்டி சுவாமிஜி யின் மேலைநாட்டுப் பயணத்திற்கு உதவினர்.

1893ம் ஆண்டு மே மாதம் 31ம் நாள் பெனின் சுலார் என்ற கப்பலில் இரண்டாம் வகுப்புப் பணச்சீட்டுடன் அமெரிக்கா சென்றார் சுவாமி விவேகானந்தர்.

சுவாமிஜியின் பெயர் விவேகானந்தர் என்று எப்போதில் இருந்து ஆனது என்பது பற்றி பல கருத்துகள் உள்ளன. சுவாமிஜி கேத்ரியில் இருந்த போது தான் அந்தப் பெயரை நிலையாக ஏற்றுக் கொண்டார்.



#சுவாமி_விவேகானந்தர்

‘அம்பிகா முரளிதரன்’ அவர்கள் எழுதிய “சுவாமி விவேகானந்தர் வாழ்க்கை வரலாறு” புத்தத்தில் இருந்து.

Want your school to be the top-listed School/college in Mumbai?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Mumbai