26/09/2021
நூற்றாண்டைக் கடந்து பீடு நடைபோடும் காரைக்குடி எஸ்.எம்.எஸ்.வி மேல்நிலைப்பள்ளியின் எனது அன்பிற்கினிய தாளாளர் (correspondent) M.S.M.M Family உயர்திரு சொ.மெய்யப்பன் அவர்களுடனான இனிய மாலைப்பொழுது ,மறக்க இயலாத இனிய நற்பொழுது....உடன் தம்பிகள் அண.சீனிவாசன்,முனைவர் ஜெ.பிரகாஷ் மணிமாறன்.
*காரைக்குடி ரஸ்தா ஆர்ச் அருகில் 25 ஏக்கர் நிலத்தைப் பள்ளிக்காக இலவசமாகத் தந்த குடும்பம்...இன்றோ குப்பைக்கிடங்காக,..தந்த நோக்கம் நிறைவேற்றப்படாமல் ...சமூக ஆர்வலர்கள் கவனத்திற்காக..
*1930 போல் சம்பை ஊற்றுப்பகுதிகளில் நீர் ஆதாரத்தை ஜெர்மானிய பொறியாளர்களைக்கொண்டு, இனங்கண்டு நகரில் குழாய்களைப் பதித்து, குடிநீர்த்தொட்டிகளை அமைத்து, இன்றளவும் காரைக்குடியில் நீர்வளம் செழிப்பாக இருக்க அடித்தளம் அமைத்த குடும்பம்.
*கழனிவாசல் EB ,செஞ்சை தாய்சேய் நலவிடுதி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் பள்ளி,தேவகோட்டையிலிருந்து காரைக்குடி நுழைவு செஞ்சை சாலைக்கு, இடம் வழங்கியது என ....எண்ணற்ற கொடைகள் நல்கிய குடும்பம்...வாழி! வாழி! வாழியவே!
சேவு.முத்துக்குமார்
ஆசிரியர்
KNOW YOUR NAGARATHARS | M.S.S.M FAMILY சேவைச்செம்மல் சொ.மெய்யப்பன் அவர்கள் | KARAIKUDIநூற்றாண்டைக் கடந்து பீடு நடைபோடும் காரைக்குடி எஸ்.எம்......