04/04/2026
இன்று (04.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் ரவிசுப்ரமணியன் எழுதி இயக்கிய நிலம்+நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஆவணப்படம் திரையிடப்பட்டு அப்படத்தின் இயக்குநர் ரவிசுப்ரமணியனுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்விற்கு முன்பாக, ஆவணப்படத்தின் தயாரிப்பாளர் டி.கே. சந்திரன் மற்றும் புது தில்லி, தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குநர் அண்ணாமலை ஆகியோர் உரையாற்றினர்.
03/04/2026
இன்று (03.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைத்த நிகழ்வில் எழுத்தாளர் பிருந்தா சாரதி எழுதி இயக்கிய கவிக்கோ: கவிஞர்களின் கவிஞர் எனும் ஆவணப்படம் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆவணப்படத்தின் இயக்குநர் பிருந்தா சாரதியுடன் கலந்துரையாடலும் நடைபெற்றது.
02/04/2026
அன்புடையீர், வணக்கம்.
ஜநேப
சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும்
ஆவணப்படம் திரையிடலுக்கு அன்புடன் அழைக்கிறோம்.
ஆவணப்படம்
நிலம் + நீதி = கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்
கலந்துரையாடல்
ரவிசுப்பிரமணியன்
எழுத்து & இயக்கம்
🗓 04.04.2026, சனிக்கிழமை
⏰ பிற்பகல் 02.00 மணி
📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜநேப.
02/04/2026
அன்புடையீர், வணக்கம்.
ஜநேப
சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும்
ஆவணப்படத் திரையிடலுக்கு அன்புடன் அழைக்கிறோம்.
ஆவணப்படம்
கவிக்கோ: கவிஞர்களின் கவிஞர்
கலந்துரையாடல்
பிருந்தா சாரதி
எழுத்தாளர் & ஆவணப்பட இயக்குநர்
🗓 03.04.2026
⏰ காலை 10.00 மணி
📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜநேப.
02/04/2026
தமிழ்ச்செல்வனின் பாவனை, கொங்கணி எழுத்தாளர் தாமோதர் மாவ்ஜோவின் மரணத்தை எதிர்நோக்கி, மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவின் தேன் ஆகிய சிறுகதைகள் குறித்து இன்று (02.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் திறனாய்வாளர் ஆ. பூமிச்செல்வம் உரையாற்றினார்.
02/04/2026
“ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கலை அழகியல் அதிகாரத்தைத் தகர்ப்பதே புதிய கலை வடிவமாக இருக்கும்” என்றும் தாம்சார்ந்த சமூகத்தைப் பாரதியைவிட காத்திரமாக விமர்சனம் செய்து எழுதியவர் அ. மாதவையா என்றும் இயக்கம் சாராமலே சமூகத்தைப் பற்றி எழுதியவர்கள் புதுமைப்பித்தன், கிருஷ்ணநம்பி முதலியோர் என்றும் எழுத்தாளர்களை அவர்கள் வாழ்ந்த காலத்தில் வைத்துப் பார்க்க வேண்டுமென்றும் இன்று (01.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் எழுத்தாளர். ச. தமிழ்ச்செல்வன் உரையாற்றினார்.
02/04/2026
2025 ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்கள், JNU துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்படி பண்டிட் அவர்களை இன்று காலை சந்தித்தார்.
துணைவேந்தர் அவர்கள் விருது பெற்ற தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துத் தாம் எழுதிய நூலை அளித்தார்கள். மேலும், தமிழ்த்துறை வளர்ச்சியைக் குறிக்கும் குரிசில் ஏட்டையும் தமிழ்த்துறை சாகித்ய அகாதமி வெளியீடான கலைஞரின் இலக்கிய ஆளுமை எனும் நூலையும் உடன் அளித்தார்கள்.
02/04/2026
அன்புடையீர், வணக்கம்.
ஜநேப
சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும்
உரையமர்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு
*இந்தியச் சிறுகதைகள்: பொருண்மையும் பரிமாணமும்*
உரையாளர்
*ஆ.பூமிச்செல்வம்*
திறனாய்வாளர்
🗓 02.04.2026
⏰ பிற்பகல் 03.00 மணி
📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜநேப.
01/04/2026
அன்புடையீர், வணக்கம்.
ஜநேப, சிறப்புநிலைத் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும்
உரையமர்விற்கு அன்புடன் அழைக்கிறோம்.
தலைப்பு
தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்: வாசிப்பும் எழுத்தும்
உரையாளர்
ச. தமிழ்ச்செல்வன்
சாகித்திய அகாதெமி விருதாளர்
🗓 02.04.2026
⏰ காலை 10.00 மணி
📍 447 - திருவள்ளுவர் அரங்கம்,SSS-III, ஜநேப.
01/04/2026
தாம் கற்ற இலக்கியங்கள், கற்றதன் வழி எழுத வந்தமை, மாற்றுத் திறனாளர் எழுத்துகளை மாற்றுத்திறனாளர்களே எழுத வேண்டியதன் தேவை முதலியவற்றைக் குறித்து இன்று மாலை (01.04.2026) எழுத்தாளர் கோ. கண்ணன் ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த்துறையில் உரையாற்றினார்.
01/04/2026
“முன் முடிவுகளற்ற வாசிப்பே புதிய திறப்புகளைத் தரும். என்னுடைய புத்தங்ககள் அப்படியே வாசிக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்” எனவும் கற்றல், மீள்கற்றல், அனுபவ வழியிலான அறிவு, விமர்சனங்களை மேம்படுத்த வேண்டிய தேவை ஆகியவற்றைக் குறித்தும் எழுத்தாளர் லட்சுமிஹர் இன்று (01.04.2026) ஜேஎன்யு, சிறப்புநிலைத் தமிழ்த் துறையில் உரையாற்றினார்.
அவரது புலிசாரை, கூத்தொன்று கூடிற்று, கிளாஸிக் டச் முதலிய நூல்களைத் தமிழ்த்துறை நூலகத்திற்கு அளித்தார்.