02/10/2024
HinduMithran Tamil
Nation First, Self Next...
Info, News, Media for Worldwide Hindus in Tamil from Online
02/10/2024
02/10/2024
பழந்தமிழரின் மழைமானி என்றால் என்ன.?
ஆட்டுக்கல் தான் அது வெறுமனே மாவு அரைப்பதற்கு மட்டுமல்ல ,அந்தக் காலத்தில் அதுதான் மழைமானி. வீட்டு முற்றத்தில்தான் பெரும்பாலும் ஆட்டுக்கல் இருக்கும். முதல்நாள் இரவில் மழை பெய்திருந்தால் அதன் குழிக்குள் நீர்நிறைந்திருக்கும். அந்நீரை விரலால் அளந்து பார்த்து அது ஓருழவுக்கு ஏற்ற மழையா அல்லது ஈருழவுக்கு ஏற்ற மழையா என்பதை அறிந்துக்கொள்வர்.
மழைப்பொழிவின் பழைய கணக்கு முறை “செவி” அல்லது “பதினு” எனப்படும். இது 10 மி.மீ அல்லது 1 செ.மீட்டருக்கு சமமானது. மழையின் அளவுக்கும் நிலத்தின் ஈரப்பதத்துக்கும் தொடர்பு உண்டு. இதனை ‘பதினை’ என்றனர். அறிவியல் கணக்குபடி 18 மி.மீ வரை மழை பெய்தால்தான் அதை முறையாக மண் உறிஞ்சிடும். ஆக எத்தனை “பதினு” மழை பெய்திருக்கிறது எனத் தெரிந்துக்கொண்டு முதல் உழவுக்கு தயாராவார்கள்.
மழைக்குப் பெய்திறனின் அடிப்படையில் தமிழில் பெயர் வைக்கப்பட்டிருந்தது.
“தூறல்” – பசும்புல் மட்டுமே நனைவது. விரைவில் உலர்ந்துவிடும்.
“சாரல்” – தரைக்குள் ஓரளவு நீர் செல்லும்.
“மழை” – ஓடையில் நீர்ப்பெருக்கு இருக்கும்.
” பெருமழை” – நீர்நிலைகள் நிரம்பும்.
” அடைமழை” – ஐப்பசியில் பெய்வது
” கனமழை” – கார்த்திகையில் பெய்வது..
இதையே அறிவியல் வேறுவகையில் கூறுகிறது:
மழைத்துளியின் விட்டம் 0.5 மி.மீட்டருக்கு குறைவாக இருந்தால் அது தூறல்.
அதுவே விட்டம் 0.5 மி.மீட்டருக்கு மேல் இருந்தால் அது மழை.
4-6 மி.மீட்டருக்கு மேல் துளியின்விட்டம் இருக்குமானால் அது கனமழையாகும்.
மழையைப் பற்றித் திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே "மாறாநீர்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த உலகம் தோன்றியபோது எவ்வளவு நீர் இருந்ததோ அதில் ஒரு துளிக்கூடக் குறையவும் இல்லை கூடவும் இல்லை என்பதை நாம் ஏற்கனவே அறிந்தோம். அதாவது உலகில் இதுவரையுள்ள நீர், நிலையானது, அளவு மாறாதது என்கிறார்.
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி.
(குறள் 701)
இங்கு மாறாநீர் என்பது நீரின் தன்மையைக் குறிக்கும் எனச் சிலர் பொருள் கூறுவது பொருத்தமன்று என்று குறிப்பிடுவார்
நிலத்திற்கு ஏற்ப நீரின் தன்மை மாறுபடும் என்பதை வள்ளுவரே பிறிதோர் குறளில் கூறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டுகிறார்
நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு.
(குறள் 452)
எனவே வள்ளுவர் ‘மாறாநீர்’ எனக் குறிப்பிடுவது நீரின் அளவைத்தான் என்பது தெளிவாகிறது.
ஒரு உழவு மழை :
‘பொதுவாக ஊர்ப்புறங்களில் மிக அதிகமாக 5 செ.மீஅளவுக்கு மழை பெய்தால் ஒரு உழவு மழை என சொல்வது உண்டு.பூமியில் ஒரு அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருந்தால், அது ஒரு உழவு மழை. ஓரிரு முறை நல்ல மழை பெய்தாலே இலகுவான மண்ணில் ஓர் அடி ஆழத்துக்குத் தண்ணீர் இறங்கியிருக்கும்.’
நிலத்தடி நீரைக் காப்பாற்ற பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்கவும்....
பனையை வெட்டினால் நதிகள் வறண்டு போகும்...
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நீர் மேலாண்மையில் நம் முன்னோர்கள் சிறந்து விளங்கினர்.
அவர்கள் அவர்களுடைய தேவைக்கு மட்டும் எந்த காரியத்தையும் செய்யவில்லை, அவர்களுடைய சந்ததிகள் இந்த பூவுலகில் வாழும் வரை பயன்பெற எண்ணியே அனைத்து காரியங்களையும் செய்தனர்..
அவர்கள் பல குளங்களை வெட்டினார்கள் என்று நம் அனைவருக்கும் தெரியும்...
ஆனால் குளங்கள் வெட்டப்படுவதால் மட்டும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விடாது..
இதனை உன்னிப்பாக கவனித்த அவர்கள் குளத்தை சுற்றியும் பல ஆயிரம் பனைமரங்களை நட்டு வளர்த்தனர்...
இதன் காரணம் என்னவென்றால் பனைமரத்தை தவிர அனைத்து மரங்களின் வேர்களும் பக்கவாட்டில் மட்டுமே பரவும் ஆனால் பனைமரம் மட்டும் செங்குத்தாக நிலத்தடி நீர் வழிப்பாதையை தேடிச்செல்லும்.
அதுமட்டுமில்லாமல் தனது வேரை குழாய் போன்று மாற்றி தரைப் பகுதியில் உள்ள நீரை நிலத்தடி நீர்ப்பாதைக்கு கொண்டு செல்லும்.
இதனால் அனைத்து நிலத்தடி நீர் வழிப்பாதையிலும் நீர் நிரப்பி அது ஊற்றாக அருகில் உள்ள ஆறுகளில் மட்டுமில்லாமல் பல நூறு மைல்கள் அப்பால் உள்ள ஆறுகளிலும் பெருக்கெடுத்து வற்றாத ஜிவ நதியாக ஓட வழிவகை செய்யும்...
இந்த பனைமரங்களை வெட்ட வெட்ட ஒவ்வொரு நதியாக வறண்டு கொண்டே வரும் என்பது மட்டும் உண்மை...
படித்ததில் பிடித்தது
02/10/2024
02/10/2024
*மேற்கு தொடர்ச்சி மலை*
குஜராத்தின் தபதி நதியிலிருந்து ஆரம்பித்து தமிழத்தின் பொதிகை வரை கால் பரப்பி பறந்து விரிந்து காணப்படும் *மேற்கு தொடர்ச்சி மலை* ஒரு உலக அதிசயம்.
இமயமலையில் பனி உருகுவதால் வற்றாத ஜீவநதிகள் உருவாகிறது. ஆனால் பனியே இல்லாமல் ஜீவ நதிகளை உருவாக்கும் சோலைக்காடுகளை போர்த்தி கொண்டிருப்பது மேற்கு தொடர்ச்சி மலை .
பல்லுயிர் வாழும் அற்புத சோலைக்காடுகளைக்கொண்டது. உலகிலுள்ள அடர்ந்த காடுகளின் வரிசையில் இதிலுள்ள "சைலண்ட் வேலி " இடம் பெற்றுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையின் அங்கமான "நீலகிரி "யில், கிழக்கு தொடர்ச்சி மலை சங்கமிக்கிறது.
தொட்டபெட்டா, ஆனைமுடி என்னும் இரண்டு உயர்ந்த சிகரங்களைக்கொண்டது. இதில் ஆனைமுடி அதிக உயரமானது.
"வரையாடு " என்னும் அரிய உயிரினம் வாழும் ஆபூர்வ சூழல் அமைப்பை கொண்டது மேற்கு தொடர்ச்சி மலை.
மேற்கு தொடர்ச்சிமலையின் சிகரங்களில் பசுமை போர்த்திய புல்வெளிகள் உள்ளன.. .இவை மழை நீரை தன்னகத்தே பிடித்து வைத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
மேற்கு தொடர்ச்சி மலை ஆபூர்வ வன விலங்குகள், பல்லுயிரிகள், பறவைகள், பூச்சியினங்கள் வாழும் சூழலியலைக்கொண்டது.
மேற்குதொடர்ச்சிமலையின் ஆனைகட்டி மலைப்பகுதியில் "சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையம்" உள்ளது.
உலகின் அதிசய மலரான, பன்னிரண்டு வருடத்திற்கு ஒருமுறைபூக்கும் "குறிஞ்சி மலர் " நீலகிரி மலையில் பூக்கிறது.
இங்குதான் முதுமலை விலங்குகள் சரணாலயம் உள்ளது.
களக்காடு, முண்டந்துறை புலிகளின்சரணாலயமும் மேற்கு தொடர்ச்சி மலையின் "பொதிகையில் " அமைந்துள்ளது.
திரிகூட ராசப்ப கவி வியந்துபாடிய "குற்றாலமும் "இங்குதான் உள்ளது.
ஆன்மீக வழிபாட்டின் புனித தீர்த்தமான "பாண தீர்த்தம் " இங்குதான் உள்ளது.
"ஜோக் பால்ஸ் " என்னும் அழகிய அருவி சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திளுக்கும் கவின்மிகு தலமாக உள்ளது.
காவிரி அன்னையின் உற்பத்தி கேந்திரமான "குடகின் வனப்புமிகு தலைக்காவிரியும் உள்ளது.
இன்னும் எண்ணிலடங்கா இயற்கை அதிசயங்களைக்கொண்டமேற்குதொடர்ச்சி மலையின் சூழலியல் கட்டமைப்பை தகர்த்தது ஆங்கிலேயன் காலத்தில் பயிரிடப்பட்ட தேயிலை என்றால் மிகையாகாது.
ஆங்கிலன் அதை மட்டுமா செய்தான் பல்லுயிரிகள் வாழும் புகலிடத்தை மனிதர்கள் வாழ்வதற்காக அதன் எழிலை அழித்து ஊட்டி, வெலிங்டன் என்னும் நகரங்களை உருவாக்கி, இயற்கைச்சூழலியல் சீர்கேட்டுக்கு முதன் முதலில் அச்சாரம் போட்டான்.!.
பின் வந்தவர்கள் அங்கு ரிசார்ட்டுகள் என்னும் கேளிக்கை விடுதிகளை யானைகளின் வலசைப்பாதையில் அமைத்து தடையேபடுத்தினான்.
ஆயிரக்கணக்கான வன விலங்குகளின் இருப்பிடத்தை பின் வந்த நம் இனக்கயவர்கள் சூரையாடியதால், அவை மக்கள் வசிக்கும் நகரங்களை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தன!.
விளைவு விவசாயிகளின் விளை நிலங்கள் அழிந்து அவர்களின் வாழ்வாதாரத்திற்குப்பெரும் குந்தகம் ஏற்பட்டது!.
இதன் எதிரொலியாக வனவிலங்குகள் அழிந்து போகும் அபாயம் ஏற்பட்டது!.
வன விலங்குகளின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டதில், மேற்கு தொடர்ச்சி மலையின் பெரும்பான பகுதிகளை தேயிலை, காப்பித்தோட்டங்கள் ஆக்ரமித்துள்ளன.
இவற்றுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பூச்சியினங்களில் ஆபூர்வங்களாக எண்ணப்படும் தேனீக்கள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகளை அழித்துவிட்டது பெரும் சோகம் .
சூழலியலில் தகவமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்த வனவிலங்குகளுக்கு போதிய உணவு கிடைக்காமல் காடுகள் சூரையாடப்பட்டு தேயிலை, காப்பி, ரப்பர் போன்ற மரங்கள் ஆக்ரமித்துக்கொண்டன.
இவ்வகை தாவரங்களின் வேர்ப்பகுதி வலுவற்றதால் பொழியும் மழையினை பிடித்து வைத்துக்கொள்ளும் தன்மையை வெகுவாக இழந்து விட்டன!.
ஆபூர்வ இனமான யானைகளின் சரணாலயமாக விளங்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் வானளாவிய மரங்கள், சந்தணமரங்கள், தேக்கு மரங்கள், ஈட்டி மரங்கள், செம்மரங்கள் கொள்ளையடிக்கப்பட்டு வெகுவாக காடுகள் விசமிகளால் அழிக்கப்பட்டுவிட்டன.
மேற்கு தொடர்ச்சி மலை என்னும் இயற்கையின் கொடை மெல்ல மெல்ல அழிந்து வருகிறது.
வருங்காலங்களில் இதை உயிர்ப்பித்து பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என்றால் இந்திய வரை படத்தில் "தென் இந்தியா " பாலைவனமாகும் அபாயத்திலிருந்து யாரும் காப்பாற்ற முடியாது !.
மேற்குத்தொடர்ச்சி மலையின் சூழலியலை பாதுகாக்கும் உறுதியை ஒவ்வொருவரும் ஏற்க வேண்டும்.
தகவலாக..
#மீள்பதிவு
02/10/2024
ரயிலில் பயணம் செய்யும் போது ரயிலின் இஞ்சினைக் கவனித்திருக்கிறீர்களா?
ஒவ்வொரு இஞ்சினிலும்
"WDM2", "WAP4" போன்று
ஒரு குறியீட்டினை எழுதி இருப்பார்கள்.. அப்படி என்றால் என்ன அர்த்தம்?
WDP 3A
#முதல்எழுத்து:
முதல் எழுத்து ரயில் எந்த வகைப் பாதைக்கானது என்பதைக் குறிக்கும்
W - அகன்ற இருப்பு பாதை
(Broad Gauge / Wide Gauge - 1,676 மில்லி மீட்டர்)
Y - மீட்டர் இருப்புப் பாதை
(Metre Gauge - 1000 மில்லி மீட்டர்)
Z - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 762 மில்லி மீட்டர்)
N - குறுகிய இருப்புப் பாதை
(Narrow Gauge - 610 மில்லி மீட்டர்)
WDM 2
#இரண்டாம்எழுத்து:
இரண்டாம் எழுத்து ரயில் எந்த வகை சக்தியால் இயங்குகிறது என்பதைக் குறிக்கும்.
D - டீசல் இஞ்சின்
A - மின்சக்தி - மாறுதிசை மின்னோட்டம் (AC traction)
C - மின்சக்தி - நேர் மின்னாட்டம்
(DC traction)
CA - மின்சக்தி - எந்த மின்னோட்டத்திலும் ஓடும் (AC & DC traction)
B - பேட்டரி சக்தி
இவற்றில் எதுவும் இல்லாமல் கீழ்காணும் மூன்றாம் எழுத்தில் உள்ள எழுத்துகள் இருந்தால்,
அது நீராவி இஞ்சின்.
YG
#மூன்றாம்_எழுத்து:
மூன்றாம் எழுத்து ரயிலின் பயன்பாட்டைக் குறிக்கிறது. (நீராவி இஞ்சினில் இரண்டாம் எழுத்து)
G - சரக்கு ரயில் (Goods)
P - பயணிகள் ரயில் (Passenger)
M- சரக்கு & பயணிகள் ரயில்
U - புறநகர் ரயில்
சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து எல்லா இஞ்சின்களிலும்
மூன்று எழுத்துகளுக்குப் பிறகு, நான்காவதாய் ஒரு எண் மட்டும் இருக்கும்.
அந்த எண் இஞ்சினின் மாடல் எண்ணைக் குறிக்கிறது
( WAP 5 என்றால் அந்த இஞ்சினின் மாடல் எண் ஐந்து)
WAP 1
மேலே "சில டீசல் இஞ்சின்கள் தவிர்த்து" என்று இருந்தது அல்லவா?
அந்த சில இஞ்சின்களில் மட்டும் நான்காவதாய் ஒரு எண்ணும், அதன் பிறகு ஒரு எழுத்தும் இருக்கும்.
இவை இரண்டும் அந்த இஞ்சினின் சக்தியைக் குறிக்கின்றன. இவை அனைத்தும் 2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு உருவாக்கப்பட்ட இஞ்சின்களாகும். WDM1 மற்றும் WDM2 ஆகிய இஞ்சின்கள் மட்டும் இதில் வராது.
WDG 3A
நான்காம் எண்ணை ஆயிரத்தால் பெருக்கிக் கொள்ளுங்கள். ஐந்தாவதாய் இருக்கும் எழுத்திற்கு இணையான எண்ணை
(A - 1; B - 2; C - 3; D - 4; E - 5; F - 6) எழுதி அதை நூறால் பெருக்கிக் கொள்ளுங்கள். இரண்டையும் சேர்த்தால் கிடைப்பதுதான் அதன் சக்தி (குதிரைச்சக்தியில்).
எடுத்துக்காட்டாக,
WDM 3E
இஞ்சினின் சக்தி = 3×1000+ 5×100 = 3500 HP ஆகும். அதன் பிறகு எதுவும் குறியீடுகள் இருந்தால்
அவை அந்த ரயில் இஞ்சினின் சிறப்பம்சங்களைக் (Technical Features) குறிக்கும். பெரும்பாலும் சரக்கு ரயில்களில்தான் அவை இருக்கும்.
WAG 5
சில ரயில்களில், குறிப்பாக வடநாட்டு ரயில்களில், ஆங்கிலத்தைப் பார்க்க இயலாது. இந்தியில் குறியிட்டு இருப்பர். அதை (இந்தி தெரிந்தவர்கள்) எழுத்துக் கூட்டிப் படித்தால், மேற்கண்ட குறியீடே வரும்.
அதாவது, ஆங்கிலத்திற்குப் பதில் அப்படியே இந்தியில் எழுதி இருப்பார்கள்.
படித்ததில் பிடித்தது
02/10/2024
டீசல் ரயில் எஞ்சின் அணைக்கப்படுவதில்லை ஏன் தெரியுமா?
ரயில் நிலையங்களில் அல்லது யார்டுகளில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு இருக்கும் டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல் தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதை பலர் பார்த்திருக்கக்கூடும். இவ்வாறு ஓட விடுவதால், அதிக அளவில் எரிபொருள் இழப்பும், காற்று மாசு ஏற்படுவதற்கு காரணமாகவும் அமைகிறது. எனினும், அவை தொடர்ந்து ஐட்லிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது பலருக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.
டீசல் ரயில் எஞ்சின்கள் நீண்ட நேரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தபோதிலும் அவை தொடர்ந்து ஓட விடுவதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை. டீசல் ரயில் எஞ்சினை அணைத்து விட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்வதற்கு பல்வேறு நடைமுறைகளை ஓட்டுனர்கள் பின்பற்ற வேண்டி இருக்கிறது.
பெட்ரோல் எஞ்சின்கள் ஸ்பார்க் ப்ளக் மூலமாக வெளிப்புற இக்னிஷனை பெற்றிருப்பது போல் டீசல் ரயில் எஞ்சின்களில் வெளிப்புற எரியூட்டு அமைப்பு இல்லை. மேலும், 16 சிலிண்டர்கள் கொண்ட ராட்சத டீசல் ரயில் எஞ்சின்களை ஸ்டார்ட் செய்யும்போது தேவைப்படும் அதிகப்படியான வெப்பநிலையை பெறுவதற்கு திணறும். மேலும், குளிர்ச்சியான சமயங்களில் டீசல் ரயில் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதில் பிரச்னைகள் எழும் வாய்ப்பும் உண்டு. எனவே, ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்கும் விதமாக, டீசல் ரயில் எஞ்சினை தொடர்ந்து ஓட விட்டு விடுகின்றனர்.
டீசல் ரயில் எஞ்சினை ஸ்டார்ட் செய்வதற்கு முன்பாக ஓட்டுனர் அட்டவணை நடைமுறைகளின்படி, ஒவ்வொரு பாகத்தையும் சோதித்து பின்னர் ஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கும். இதற்கு குறைந்தது 20 நிமிடங்கள் பிடிக்கும்.
டீசல் ரயில் எஞ்சின்கள் அணைக்கப்படாமல் இருப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், ரயிலின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தம் தரும் கம்ப்ரஷருக்கான ஆற்றல் எஞ்சினிலிருந்து பெறுவதுதான்.
ஒருவேளை, ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு மீண்டும் ஸ்டார்ட் செய்தால், அனைத்து ரயில் பெட்டிகளின் ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான காற்றழுத்தத்தை மீண்டும் ரயில் எஞ்சினிலிருந்து பெறுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். இந்த நிலையில், டீசல் ரயில் எஞ்சின்களால் ஏற்படும் மாசு உமிழ்வு பிரச்னை மற்றும் எரிபொருள் இழப்பை தவிர்ப்பதற்காக இப்போது டீசல் ரயில் எஞ்சின்களில் APU என்ற துணை மின் வழங்கும் சாதனம் பொருத்தப்படுகிறது.
டீசல் ரயில் எஞ்சின்களை நீண்ட நேரம் ஐட்லிங்கில் நிற்கும்போது இந்த ஏபியூ சாதனம் மூலமாக, ஹைட்ராலிக் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றலையும், பேட்டரி சார்ஜ் ஆவதற்கான மின்சாரத்தையும் வழங்கும்.
இந்த சாதனம் பொருத்தப்படும் போது ரயில் எஞ்சின் அணைக்கப்பட்டு ஜெனரேட்டர் போன்ற 25 எச்பி பவர் கொண்ட சிறிய எஞ்சின்கள் மூலமாக பேட்டரி மற்றும் பிரேக் சிஸ்டத்திற்கு தேவையான ஆற்றல் வழங்கப்படும். இதன்மூலமாக, ஆண்டுக்கு ரூ.60 கோடி வரை மிச்சப்படும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பயன்பாட்டில் இருக்கும் சில டீசல் ரயில் எஞ்சின்கள் தவிர்த்து, புதிதாக தயாரிக்கப்படும் டீசல் ரயில் எஞ்சின்களிலும் இந்த ஏபியூ சாதனம் பொருத்தப்படுகிறது. எனினும், வரும் காலத்தில் டீசல் பயன்பாட்டை குறைக்கும் விதத்தில் முற்றிலும் மின்சார ரயில் எஞ்சின்களை பயன்படுத்துவதற்கு ரயில்வே நிர்வாகம் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு இருக்கிறது.
ரயில் எஞ்ஜினை ஆஃப் செய்யாமல் இருப்பதற்கான காரணத்தை பார்த்ததுப் போன்று, வாகன எஞ்சின்களில் ஆயில் ஏன் பயன்படுத்தப்படுகின்றது என்ற தகவலை கீழே காணலாம்...
⤵️
வாகன எஞ்சின்களில் ஏற்படும் உராய்வு, எஞ்சின் பாகங்கள் வெப்பமடைதல், பிசின் உருவாவது போன்றவற்றை தவிர்க்கவே வாகனங்களில் ஆயில் பயன்படுத்தப்படுகிறது.
வாகனங்களின் இயக்கத்தை போலவே, ஆயில் பயன்பாடு மற்றும் அதன் பராமரிப்பு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதில் ஒன்றுதான், மெல்லிய குச்சியின் மூலம் ஆயிலின் இருப்பை கணக்கிடுவது. ஆயிலின் டேங்கில் குச்சியை விடுவதற்கு முன்னதாக அதை சுத்தப்படுத்தி பயன்படுத்துவது முக்கியம்.
டேங்கிற்குள் குச்சியை விட்டு அதை வெளியே எடுத்து பார்க்கும் போது ஆயிலின் குறியீடு குச்சியின் மேல்புறத்தில் இருந்தால், பிரச்சனை எதுவுமில்லை. ஆனால் கரை அடிப்பாகத்தில் இருந்தால் டேங்கை ரீஃப்பில் செய்யவேண்டியது அவசியம்.
ரீஃப்பில் செய்யும் போதும் நாம் கவனிக்க வேண்டிய செயல்கள் உள்ளன. அதாவது ஆயிலின் பயன்பாடு வாகனத்தின் செயல்பாட்டிற்கு ஏற்றவாறு தான் இருக்க வேண்டும். அதை மீறி ஓவர்ஃப்பில்லிங் செய்யப்பட்டால் வாகனத்தின் செயல்பாடு ஆட்டம் கண்டுவிடும்.
ஆயிலின் இருப்பு அதிகரித்தால், எஞ்சினுள் இருக்கும் கிராங்க்ஷாஃப்ட் ஆயிலால் நிரம்பிவிடும். தவிர எஞ்சின் சேம்பருக்குள் காற்று ஊடுருவவும் வாய்ப்புள்ளது. கிராங்ஷாஃப்ட் வேகமாக இயங்கும் போது காற்று + ஆயில் கலந்து அதனால் நுரை உருவாகும். நுரை உருவானால் அது எஞ்சினுக்குள் உராய்வை ஏற்படுத்தும்.
இப்படி நடக்கும் போது எஞ்சினுக்குள் வெப்பம் அதிகரிக்கும். இதை நாம் முன்பே கண்டறியாவிட்டால் எஞ்சின் லாக்காகிவிடும். பிறகு மொத்த வாகனத்தின் செயல்பாடும் அதோகதி தான். கம்பஷன் சேம்பருக்குள் ஆயிலின் அளவு அதிகரித்து அதனால் வெப்பம் உண்டாகி அதன் பிறகு அது நீராவியாக மாறி அதிலிருந்து புகையாக வெளியேறும்.
உங்களது வாகனம் அதிகப்படியான வெண்ணிற புகையை (நீலம் அல்லது சாம்பல் நிற கலைவையாக) வெளியேற்றினால், எஞ்சினுக்குள் ஆயிலின் அளவு அதிகரித்துள்ளது என்பது பொருள்.
இதுபோல வெண்ணிற புகை அதிகளவில் உங்களின் கார்களிலிருந்து வெளியேறினால், அதை நன்றாக கவனித்து உங்களது வாகன எஞ்சினை சிறிது நேரத்திற்கு இயக்கத்திலேயே வையுங்கள்.
எஞ்சின் கொஞ்சம் சூடான பிறகு, ஒரு குச்சியை டேங்கிற்குள் விட்டு ஆயிலின் இருப்பை சரிபாருங்கள். ஆயிலின் குறியீடு குச்சியின் மேற்புறத்தில் தெரிந்தால் நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று அர்த்தம்.
ஆயிலின் அளவு அதிகரித்தால், அதை வெளியேற்றுவதற்கான மூடிக்கொண்ட வசதி எஞ்சினின் அடியில் கொடுக்கப்பட்டு இருக்கும். இந்த தேவை பெரும்பாலான கார்களில் உள்ளது.
ஒருவேளை அந்த மூடி வலிமையாக இருந்து, திறக்க முடியவில்லை என்றால் ஸ்பேனர் மற்றும் சில டூல்களை பயன்படுத்தலாம். இது பெரும்பாலும் நல்ல பயனையே தரும்.
ஆயில் என்பது சற்று திரவ நிலையில் இருந்தாலும் அது திடமாக இருக்கும். தரையில் அது ஒழுகினால் அந்த கரை அவ்வளவு எளிதில் போகாது. இதன் காரணமாக எப்போதும் ஆயிலை வெளியேற்றும் போது, அது ஒழுகி வெளிவரும் இடத்தில் ஒரு பேன் அல்லது குவளையை வைத்து விடுங்கள்.
வாகனங்களில் ஆயிலின் தேவை இன்றியமையாதது. வாகனத்தின் தேவையை கருதிஎஞ்சின்கள் அதற்கு ஏற்றவாறு செயல்படும் தன்மையை கொண்டது. அதனால் அதை முறையாக பயன்படுத்துவது வாகன உரிமையாளர்களின் கடமை. இதை மனதில் வைத்து ஆயில் சார்ந்த செயல்பாடுகளில் எப்போது கவனம் கொள்வது அவசியம்.
படித்ததில் பிடித்தது
02/10/2024
02/10/2024
சைக்கிள்.........!
1985க்கு முன்பு முன்னூறு வீடுகள் உள்ள கிராமம் ஒன்று இருந்தால் சுமார் ஐம்பது வீடுகளில்தான் சைக்கிள்கள் இருக்கும். மோட்டார் பைக்குளைப் பார்ப்பதே மிக மிக அரிது.
கிராமங்களில் யாரோ ஒருவர் SWEGA வண்டி வைத்திருப்பார். HERO MAJESTIC, TVS மொபெட்டுகளுக்கு முந்தினது SWEGA.....! அது மணிக்கு இருபது அல்லது முப்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் போகும்.
இப்போது கார், மோட்டார் பைக் வாங்குவதற்கு கூட அவ்வளவு விசாரிப்பதில்லை. ஆனால், அப்போது பழைய சைக்கிள் (SECOND HAND) வாங்குவது என்றால் கூட அவ்வளவு எச்சரிக்கையோடு விசாரிப்பார்கள்.
ராலி, ஹெர்குலஸ், அட்லாஸ், ஹீரோ போன்ற கம்பெனிகளின் தயாரிப்புகள் இருந்தாலும் ராலி சைக்கிள் வைத்திருப்பவர்கள் தான் "கெத்து" .
அடுத்து...... அதிக எடை ஏற்றிச் செல்ல வேண்டுமானால் ஹெர்குலஸ் சைக்கிள் வைத்திருப்பார்கள். குறைந்த பட்ஜெட்காரர்கள் ஹீரோ அல்லது அட்லஸ் சைக்கிள்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.
ஒவ்வொரு ஊரிலும் சைக்கிள் பழுது பார்க்கும் கடையும் வாடகை சைக்கிள் கடைகளும் இருக்கும். வாடகை சைக்கிள்களில் பெரும்பாலும் கேரியர் இருக்காது. கேரியர் உள்ள சைக்கிள்களுக்கு கொஞ்சம் வாடகை அதிகம். சிறுவர்கள் சைக்கிள் பழக சிறிய சைஸ் சைக்கிள்களும் கிடைத்தது. விடுமுறை நாட்களில் இது மட்டுமே பொழுதுபோக்கு.
இப்போது கார்கள் , மோட்டார் பைக்குகளை "சர்வீஸுக்கு"விடுவது போல அப்போது சைக்கிள்களை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சர்வீஸுக்கு சைக்கிள் பழுது பார்க்கும் கடைகளில் விடுவார்கள். அதற்கு "ஓவராயில் " செய்வது என்பார்கள்.
அன்று சைக்கிள் ரிப்பேர் பார்ப்பவர்கள் பலர் கண்ணுக்கு ஹிரோவாக தெரிந்தார்கள்,,
இப்போது கார்களுக்கு "WHEEL. ALIGNMENT, WHEEL BALANCING " செய்வதுபோல சைக்கிள்களுக்கும் செய்வார்கள். அதற்கு " வீல் கோட்டம் எடுப்பது" என்பார்கள்.
1979க்கு முன்பு சைக்கிள்களுக்கு பஞ்சாயத்து அல்லது நகராட்சிகளில் கட்டாயம் கட்டணம் செலுத்தி LICENSE எடுக்க வேண்டும். ஒரு வட்ட வடிவ தகரத்தில் முத்திரையிட்டுத் தருவார்கள். அதை சைக்கிளின் முன்புறம் HANDLE BAR க்கு கீழை நிரந்தரமாக இணைத்து வைத்துக் கொள்வார்கள். இது இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டும்.
சைக்கிளில் டைனமோ இருக்கும். இரவு நேரங்களில் சைக்கிள் ஓட்டும்போது டைனமோ இல்லாவிட்டால் காவல்துறையினர் பிடித்து அபராதம் விதிப்பார்கள்.
சைக்கிளில் ஒருவர் செல்ல மட்டுமே அனுமதி இருந்தது. இருவர் சென்றால் அபராதம். எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது தான் இருவர் செல்ல அனுமதி கொடுக்கப் பட்டது. அந்த லைசென்ஸும் ஒழிக்கப் பட்டது.
அந்த சைக்கிள்களின் கைப்பிடிகளுக்கு பல நிறங்களில் கவர்கள் போட்டும், இரண்டு வீல்களிலும் தேங்காய் நார்களில் செய்யப்பட்ட பலவித நிறங்களில் அலங்காரப் பொருட்களை வாங்கிக் கட்டி "கெத்து" காட்டுவதுமே பெருமையாக இருந்தது.
இந்த தலைமுறையினர் சிறு சைக்கிள்களை வீட்டுக்குள் ஓட்டுவதோடு சரி..... இன்னும் ..... அது கூட இல்லாமல் சிறிய சைஸ் மோட்டார் பைக்குகள், கார்களை வாங்கிக் கொடுத்து வீட்டுக்குள்ளேயே ஓட்டச் செய்கிறோம்.
எப்படி ஆயினும் ...... பழைய நினைவுகள் ஆனந்தத்தையும் வைராக்கியங்களையும் தான் தருகின்றன.
படித்ததில் பிடித்தது....
Click here to claim your Sponsored Listing.
Location
Address
641001