Kalam Academy of Mathematics

Kalam Academy of Mathematics Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalam Academy of Mathematics, Chidambaram.

அன்புநிறை பெற்றோர்களே! 9,10,11 ஆம் வகுப்பு குழந்தைகள் தேர்வின்றி தேர்ச்சி என்ற அரசின் இந்த அறிவிப்பு உங்களுக்கு அதிர்ச்ச...
27/02/2021

அன்புநிறை பெற்றோர்களே!

9,10,11 ஆம் வகுப்பு குழந்தைகள் தேர்வின்றி தேர்ச்சி என்ற அரசின் இந்த அறிவிப்பு உங்களுக்கு அதிர்ச்சியையும் வியப்பையும் தரலாம்.

நீண்ட நாட்களாக கல்வி பயிலாததால் குழந்தைகளின் கற்றல் வேகம் குறையலாம்.
பல பெற்றோர்களின் வேண்டுகோளினால் நாங்கள் தொடர்ந்து இயங்குவதாக உறுதி அளித்துள்ளதை தங்களுக்கு தெரிவிக்கின்றோம்.

எவ்விதத்திலும் குழந்தைகளின் கல்வி பாதிப்படையவிடாமல் அவர்களை வழி நடத்துவது எங்களின் கடமை.

வாரத்திற்கு ஏழு நாட்களும் 365 நாட்களும் நாங்கள் குழந்தைகளுக்காக இயங்குகின்றோம்.

ஒன்பதாம் வகுப்பு‌ மாணவர்களுக்கு பத்தாம் வகுப்பு பாடங்கள் தொடர்ந்து நடத்தப்படும்.

மேலும் குழந்தைகளுக்காக சதுரங்கம், Spoken English, கையெழுத்து, கணினி, கணிதம், அறிவியல், வரலாறு ஆகியவை தொடர்ந்து நடத்தப்படும்.

இதற்காக புதிதாக எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.

மேலும் நாங்கள் எந்த நுழைவு தேர்வு வைத்தும் குழந்தைகளை சேர்த்து கொள்வதில்லை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள்.

குழந்தைகள் எவ்வாறு இருப்பினும் அவர்களை வெற்றி பெறசெய்வதே எங்கள் கடமை.

இங்கு உங்களை போலவே நாங்களும் அவர்களை குழந்தைகளாகவே பார்க்கிறோம்.

குழந்தைகளின் குழந்தை பருவத்தை ரசித்து அவர்களை சரியான வழியில் வழிநடத்துவதில் உங்களுடன் நாங்களும் பயணிக்கின்றோம்.

குழந்தைகளுக்கான நூலகம், குழந்தைகளுக்கான தனித்திறமைகளை ஊக்குவிக்கும் சிறப்பு வசதிகள், ஆசிரியர்களுக்கென சீருடை, இலவச வரம்பற்ற இணைய தள வசதிகள், கலாம் அறிவியல் குழுவில் பங்கு, தனி செயலி, வாரத்தேர்வுகள், வாசிக்கும் திறன் பயிற்சி என குழந்தைகளுக்கான எங்கள் சேவைகளும் நோக்கமும் பெரியது.

நாங்கள் என்றுமே குழந்தைகள் மாதகட்டணம் செலுத்தவில்லை என்பதால் திருப்பி வீட்டிற்கு அனுப்புவதில்லை, வகுப்பில் அதை காரணம்காட்டி குழந்தைகளை தண்டிப்பதில்லை.

ஒவ்வொரு குழந்தையின் தனிப்பட்ட கல்வித்தேவையை பூர்த்தி செய்ய நாங்கள் என்றுமே தயங்கியதில்லை..

குழந்தைகளின் கனவை நினைவாக்க உங்களுடன் நாங்களும் பயணிக்கிறோம்.

பேரன்புடன்,
நிர்வாகம்,
கலாம் டியூசன் சென்டர்,
( A School Pro Institution)
சிதம்பரம்.
8148382815
04144355271

22/12/2020

தேசிய கணித தினம்

கணிதம் பலருக்கு பாகற்காயாய் கசக்கும்.. கணக்கா நான் இந்த விளையாட்டுக்கே வரல..
எனக்கு கணக்கு வரது..

இது போல பேசும் பலருக்கும் ஒரு பிரச்சனை உண்டு.

கணிதமும், அறிவியலும் உனக்கு பிடிக்கவில்லை எனில் நீ சரியான ஆசிரியரிடம் கற்றுகொள்ளவில்லை என பொருள்.

சின்ன சின்ன கணிப்பிற்கு கால்குலேட்டர் தேடும் நாம் தான் முன்பொரு காலத்தில் உணவு இடைவேளையில் வாய்பாடு பாடிக்கொண்டிருந்தோம்.

அதிலும் ஒரொன்னொன்னு என்று அர்த்தம் விளங்காத மனப்பாடமாய் பதிந்திருக்கும்.

பாட்டி கடையில பாக்குமிட்டாய் வாங்கி தின்னுறதுல இருந்து, இன்னைக்கு பணம் எண்ணுற வரை நமக்கு தேவை கணக்கு தான்.

90sகுழந்தைகளின் மிகப்பெரிய வங்கி தெருமுனைல இருக்க அண்ணாச்சி கடை இல்ல நாடார் கடை அதும் இல்லன மொன கடை.
அங்க அட்டைகட்டி காசு வைச்சு இருப்பாங்க..

அது கடைசியா வாங்கும் போது கூட்டல் போட்டு சொல்லுனு சொல்லுவாங்க.. அப்போ ஒரு சந்தோஷம் வரும் பாருங்க..

கைநிறைய சம்பளம் வந்த உணர்வு.

இப்படி கணிதம் நமக்கு நிறைய இடத்துல கூடவே வந்துட்டு இருக்கு.

ஏன் வாழ்க்கைல கூட
கடினமானதை முயற்சிக்கும் வலுவும், எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு உண்டு என உணரவும் கணக்கு இங்கு அவசியம்..

அதனால் தான் என்னவோ கணக்கலாம்‌ problem னு சொல்றாங்க போல.

ஒவ்வொரு problem ம் சொல்லும் போதும் கடைசியா Solution அல்லது தீர்வுனு சொல்லி முடிப்போம். இந்த உணர்வு ரொம்ப ஆழமானது.

ஆசிரியர் சொல்ற மாதிரி இல்லாம வேற வகைல போட்டு நமக்கு சரியான விடை வந்துட்டா வர சந்தோஷத்துக்கு ஈடு இணையே இல்ல..

LHS=RHS, sin, cos, tan, AP ,GP Number, pi னு இது ஒரு‌மொழியாவே இருக்கு.. இத புரியவைக்க தான் ஆசிரியர் இருக்காரு‌. அவரு வெறும் மொழிபெயர்பாளர் தான். அதோட சுவைய உணரனும்‌னா அத நீங்க தான்‌ சுவைக்கனும்.

பிதாகரஸ் தேற்றம், கோண இருசமவெட்டி தேற்றம்லாம் வாழ்க்கைல எங்க வரபோகுது னு நினைக்க வேண்டாம்.

இங்க நீங்க பார்க்குற எல்லாத்துக்குள்ளயும் கணிதம் ஒளிஞ்சி இருக்கு.

அத கண்டுபிடிக்க தான் நமக்கு அறிவு போதவில்லை..

கணக்கு வராது னு சொல்ற எல்லாருக்கும் கணிதத்தை வெறுக்க யாரோ தான் காரணமா இருப்பாங்க.. ஆனா ஒரு நாளும் கணிதம் காரணமாவே இருக்காது.

மற்ற நாடுகளின் மக்களைவிட இந்திய மக்களின் கண்கீடுதிறன் சிறப்பானது என ஒரு ஆராய்ச்சி முடிவுகள் இருக்கு..
ஆனா கணித தினம் அறிவிக்கபட்டதோ 8 வருடத்திற்கு‌ முன்னால் தான்..

26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. அந்த வருடமும் தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டது.

அப்போது நமது பிரதமர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனபடுத்தபட்டது.

அந்த நிகழ்வில் இது குறித்த அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார்.

இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இவருடைய வாழ்க்கையை மையமாக A Man Who knew Infinity என்ற புத்தகம் 1991 ஆம் ஆண்டு இராபர்ட் கைனிகல் என்பவரால் வெளியிடப்பட்டது.

அந்த நூலைத்தழுவி மேத்யு பிரவுன் என்ற இயக்குனரால் அதே பெயரில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் தேவ் பட்டேல் என்பவர் சீனிவாசனாக நடித்து இருப்பார்.

108 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம் ஏப்ரல் 8, 2016 அன்று இங்கிலாந்தில் Worber Bros நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.

Writen by

Mr.S.VELPRAKASH
Chief Executive Officer
Kalam Tuition Center
Chidambaram.

19/11/2020

தமிழகத்தில் முதல்முறையாக தனியான செயலி கொண்ட ஒரே நிறுவனம் நமது கலாம் கல்வி நிலையம் மட்டுமே.

ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனி உள்நுழைவு வசதிகள், வருகைபதிவு, ஆன்லைன் மூலமாக தாங்களாகவே தேர்வு எழுதும் வசதிகள், மாதாந்திரகட்டணம் செலுத்தப்பட்டதற்கான விவரங்கள், விடுப்பு வருகையின் போது பெற்றோர்கள் செய்திகள் பெறும் வசதி, வீட்டுபாடங்கள் பற்றிய விவரங்கள், மாணவருக்கு தேவையான புத்தகங்கள் பதிவிறக்க வசதி, என எளிமையாகவும் மேம்பட்டதாகவும் உள்ள செயலி.

இன்றுமுதல் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் பயன்பாட்டிற்காக பிளேஸ்டோரில் கிடைக்கிறது.

இதற்கு உறுதுணையாக இருந்த InvoTech Las நிறுவனத்திற்கும், நமது நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஊக்கமளித்து வரும் பெற்றோர்களுக்கும் நிர்வாகம் தனது நன்றியை தெரிவிப்பதில் பெருமையடைகிறது.

VELPRAKASH
CEO
Kalam Tuition Center,
Chidambaram.

தீபாவளி நல்வாழ்த்துக்கள்
13/11/2020

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

24/09/2020

தென்னிந்தியாவின் முதல் திறந்தவெளி வகுப்புகள் நம் கலாம் கல்வி நிலையத்தில்...

விவரமறிய தொடர்ந்து படியுங்கள்..

100 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் எவ்வாறு இயங்கின?

கொரோனா வைரஸ்.... உயிரை காவு வாங்கும் வாய்ப்புள்ள, தடுப்பு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படாத ஒரு நோய். குழந்தைகள் கற்றல் திறன் குறைந்துவிடாமல் இருக்க, அவர்கள் பாதுகாப்பாக பள்ளிக்கு வந்து செல்ல என்ன மாதிரியான ஏற்பாடுகள் செய்வது என்பது ஒரு பிரச்சனையாக உள்ளது. இப்போதைய பிரச்சனை போலத் தெரிகிறதா?

இல்லை.., நூறாண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒரு சூழ்நிலையை உலகம் எதிர்கொண்டது.

அப்போது *காசநோய்* உயிர்க்கொல்லி நோயாக இருந்தது.

20வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் ஏழு பேரில் ஒருவர் என்ற அளவில் காசநோய் காரணமாக இறந்து போனார்கள் என்று நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அமைப்பு (சிடிசி) தெரிவித்துள்ளது.

1921ல் தான் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. உலகெங்கும் அந்த மருந்து கிடைக்க பத்தாண்டுகள் வரை ஆனது. அந்தச் சூழ்நிலையில், குழந்தைகள் தங்கள் கல்வியைத் தொடர்வதற்கு, *திறந்தவெளிப் பள்ளிக்கூடங்கள்* என்பது ஒரு தீர்வாக அமைந்தது.

மேசைகளும், இருக்கைகளும் தோட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

அறிவியல், புவியியல் அல்லது கலை பாடங்களை இயற்கையை கவனித்தல் மூலம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்தனர்.

இந்தச் சிந்தனை 1903ல் ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் தொடங்கியது.

சீக்கிரத்திலேயே அது பெரிய இயக்கமாக உருவெடுத்தது.

திறந்தவெளிக் கல்வி முறை அமைப்பின் முதலாவது சர்வதேச மாநாடு 1922ல் பாரிஸ் நகரில் நடைபெற்றது.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 1904ஆம் ஆண்டு திறந்தவெளி பள்ளிகள் தொடங்கப்பட்டன.

ஜெர்மனி மற்றும் பெல்ஜியத்தில் 1904ஆம் ஆண்டு திறந்தவெளி பள்ளிகள் தொடங்கப்பட்டன

அமெரிக்காவில் 1907-ல் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் தொடங்கின. நகரில் காலியாக உள்ள இடங்களில் பள்ளிக்கூடங்கள் நடத்தலாம் என்று ரோடே ஐலண்ட் மாகாணத்தைச் சேர்ந்த இரண்டு டாக்டர்கள் பரிந்துரை செய்ததை அடுத்து, அந்தத் திட்டம் தொடங்கப்பட்டது என்று நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அடுத்த 2 ஆண்டுகளில், கட்டடங்களுக்கு இடையே காலியாகக் கிடந்த இடங்கள், உயரடுக்கு மாடிகளில் மொட்டை மாடிகள், பயன்படுத்தாமல் கிடக்கும் படகுகள் ஆகியவற்றில் 65 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன.

உடலும் மனமும்
கோவிட்-19 போல அல்லாமல், காசநோய் காற்றில் பரவக் கூடியது. காற்றில் பல மணி நேரங்களுக்கு ஊசலாடிக் கொண்டிருக்கும் பாக்டீரியாவை சுவாசிக்கக் கூடிய நபர்களுக்கு காசநோய் பாதிப்பு ஏற்படும் என்று சி.டி.சி கூறுகிறது.

20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகையோடு, டிபி-யும் குழந்தைகளிடையே முக்கிய பிரச்சனையாக இருந்தது.

நோய் பாதித்தவர்களிடம் இருந்து வெளியாகும் பெரிய திவலைகள் மூலம், நேரடியாக தொடுதல் அல்லது நோயாளி தொட்ட இடத்தின் மேற்பரப்பை இன்னொருவர் தொடுவதன் மூலம் கோவிட் பரவுகிறது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
இருந்தபோதிலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் நுண்ணிய துகள்கள் மூலமாகவும் கொரோனா வைரஸ் பரவுகிறது என்பதற்கு ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்த அமைப்பு சமீபத்தில் கூறியுள்ளது.

``ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு குழந்தைகளுக்கு மிகவும் ஆபத்தானதாக காசநோய் இருந்தது'' என்று சா பாலோ மத்திய பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் ஆண்ட்ரூ டால்பென் கூறுகிறார்.

அதிகம் பேர் வசிக்கும் குடியிருப்புகள் போன்ற சுகாதாரமற்ற சுற்றுச்சூழலில் இருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வருவதன் மூலம், இயற்கையுடன் அவர்களுக்குத் தொடர்பை ஏற்படுத்தித் தருவதன் மூலம், குழந்தைகளின் கற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மட்டுமின்றி, அவர்களின் நோய் எதிர்ப்பாற்றலை பலப்படுத்த முடிந்தது.

`புதிய சிந்தனைகள்'
இரண்டு உலகப் போர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் எண்ணிக்கை அதிகரித்தன என்றும், அப்போது சமூகம் மற்றும் கல்வி குறித்து புதிய சிந்தனைகள் உருவாயின என்றும் சா பாலோ பல்கலைக்கழகத்தின் வரலாற்றுக் கல்வித் துறை பேராசிரியர் டயானா விடால் சுட்டிக்காட்டுகிறார்.

``அமைதி மிகுந்த மற்றும் ஆதரவு காட்டும் தலைமுறையை'' உருவாக்குவதற்கு, ``நட்பு ரீதியிலான மற்றும் ஜனநாயக ஊக்குவிப்பு'' மாடல்களை பின்பற்ற வேண்டும் என்ற வழக்கமான நடைமுறைகளை கல்வியாளர்கள் உடைத்தெறிந்தனர்.

பிரேஸிலில் 1916 ஆம் ஆண்டிலும் பிறகு 1920கள் மற்றும் 1930களிலும் திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் நிறைய செயல்பட்டதற்கான ஆதாரங்களைப் பேராசிரியர் டல்பென் கண்டறிந்துள்ளார்.

அப்ளைடு திறந்தவெளி பள்ளிக்கூடத்தில் 1939 முதல் 1950 வரையில் சா பாலோ அக்குவா பிரான்கா பூங்காவில் பாடங்கள் நடைபெற்று வந்துள்ளன. பிறகு அருகில் உள்ள கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.

நகர அதிகாரிகள் இதை கல்விக்கான முன்மாதிரியாகக் கருதியபோதிலும், இந்தப் பள்ளியின் எல்லா அம்சங்களுமே பாரம்பர்ய பள்ளிக்கூட நடைமுறையில் இருந்து மாறுபட்டிருக்கவில்லை என்று பேராசிரியர் டல்பென் கூறியுள்ளார்.

``இப்போது 80 வயதைக் கடந்துவிட்ட, அந்தப் பள்ளியின் அப்போதைய மாணவர்களுடன் நான் பேசினேன். ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள் என அவர்கள் கூறினர். எனவே நடைமுறையில், மற்ற பள்ளிகளில் இருந்து இது ரொம்பவும் மாறுபட்டதாக இல்லை'' என்றார் அவர்.

திறந்தவெளி பள்ளிக்கூடங்களை ஒப்பீடு செய்வதாக இருந்தால், ``ஆசிரியர்கள் மொழியில், வால் நட்சத்திரம்'' போன்றவையாக இவை செயல்பட்டன என்று அவர் கூறியுள்ளார். நிறைய பேரின் கவனத்தை இவை ஈர்த்தன ஆனால் 1960களில் மெல்ல மெல்ல அவை காணாமல் போய்விட்டன என்று குறிப்பிட்டார்.

அதன் பிறகு பள்ளிக்கூடம் தொடங்கும் நேரம், வகுப்பு முடியும் நேரம் நிர்ணயித்து, ஆதார வளங்களை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்வதற்காக அதே வகுப்பறையில் முடிந்த வரையில் அதிகமான மாணவர்களை அமர வைப்பது என்பது போன்ற தொழிற்சாலை மாதிரியான போக்கிற்கு பள்ளிக்கூடங்கள் மாறிவிட்டன என்று பேராசிரியர் விடால் கூறியுள்ளார்.

வெளிப்புறங்களில் கோவிட் 19 பாதிப்பு கணிசமாகக் குறையும் என்று ஆய்வு முடிவுகள் இப்போது காட்டும் நிலையில், திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் என்ற சிந்தனையை மீண்டும் ஆராயலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

வெளிப்புற கற்றலில் சாம்பியன்கள்
காஷ்மீரில் ஏற்கெனவே திறந்தவெளி பள்ளிக்கூடங்கள் நடைமுறையில் உள்ளன. பனிமூடிய இமயமலையின் பின்னணியில் மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

தங்களுடைய இளம் வயது குடிமக்களை உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் பலப்படுத்துவதற்கு, சிங்கப்பூரில் பல ஆண்டுகளாகவே வெளிப்புற கற்றல் நடைபெற்று வருகிறது.

பின்லாந்தில் வனப் பகுதி பள்ளிகள் நன்கு அறியப்பட்டுள்ளன. நாட்டின் கலாச்சாரத்தில் வனங்களும் இயற்கையும் அங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

டென்மார்க்கில் வெளிப்புறப் பள்ளிகளுக்கு - udeskole - என்ற பெயரே வைக்கப்பட்டுள்ளது. பல பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் இந்த வகுப்புகள் நடத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். கோவிட் 19 நோய்த் தொற்று சூழலில் இந்த நடைமுறையை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்று அரசாங்கம் யோசனைகள் கேட்டிருக்கிறது.

வெளிப்புறக் கற்றல் மாணவர்களை இயற்கையுடன் தொடர்புக்குக் கொண்டு வருவது மட்டுமின்றி, கல்வியில் ஈடுபாடு காட்டுதலை அதிகரிக்கவும், உடல் இயக்கம் மற்றும் உணர்வு மேம்பாட்டுக்கு உதவுவதாகவும் பேராசிரியர் விடால் கூறியுள்ளார்.

பாடங்களை வழங்குபவர்களாக இருந்து வந்த ஆசிரியர்கள், இந்தச் சூழ்நிலையில் கற்றலுக்கு உதவக் கூடியவர்களாக மாறி இருக்கிறார்கள்.

நன்றி BBC தமிழ்

31/07/2020
Thanks One and All..
26/04/2020

Thanks One and All..

07/04/2020

மற்றுமோர் முயற்சியில்..

19/10/2019

Address

Chidambaram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalam Academy of Mathematics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share