Milton Keynes Tamil News

Milton Keynes Tamil News

Share

மில்ரன் கீன்ஸ் நகரில் நடைபெறுகின்ற முக்கியமான செய்திகளை தமிழில் அறிந்து கொள்ள எம்மைப் பின் தொடருங்கள்.

31/01/2026

பிரிட்டிஷ் குடிமக்கள்,விரைவில் சீனாவுக்கு
விசா இன்றி பயணம் செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற உள்ளனர்.

தற்போது,
பிரிட்டனிலிருந்து
சீனாவுக்குப் பயணம் செய்ய விரும்புவோர்,
பயணம் மேற்கொள்ளும் முன்
குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்பே
விசா விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதற்காக,
குறைந்தபட்சம்
130 பவுண்டுகள் கட்டணமாக செலுத்த வேண்டியதுடன்,
விரைவு விசா வேண்டுமெனில்
250 பவுண்டுகள் வரை
செலவாகும்.

மேலும்,
விரல் ரேகைகள் பதிவு செய்ய
பிரிட்டனில் உள்ள
சீன விசா அலுவலகங்களில் ஒன்றிற்கு
நேரில் செல்ல வேண்டிய அவசியமும் உள்ளது.

ஆனால்,
இந்த நடைமுறைகள் அனைத்தும்
விரைவில் முடிவுக்கு வர உள்ளன.

ஜனவரி 29-ஆம் தேதி,
பிரதமர் கியர் ஸ்டார்மர்,
பிரிட்டிஷ் குடிமக்கள்
விரைவில்
சீனாவுக்கு
விசா இன்றி
பயணம் செய்ய அனுமதி பெறுவார்கள்
என்று அறிவித்தார்.

இந்த முடிவால்,
ஆயிரக்கணக்கான
பயணிகள் பயனடைவார்கள் என
எதிர்பார்க்கப்படுகிறது.

தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தரவுகளின்படி,
2024ஆம் ஆண்டில் மட்டும்
சுமார் 6 லட்சத்து 20 ஆயிரம்
பிரிட்டிஷ் குடிமக்கள்
சீனாவுக்குப் பயணம் செய்துள்ளனர்.

இந்த புதிய திட்டத்தின் மூலம்,
ஆஸ்திரேலியா,
நியூசிலாந்து,
பிரான்ஸ்,
ஜெர்மனி உள்ளிட்ட
ஏற்கனவே விசா இன்றி
சீனாவுக்குச் செல்ல அனுமதி பெற்றுள்ள
சுமார் 50 நாடுகளின் பட்டியலில்
பிரிட்டனும் சேர உள்ளது.

உண்மையில்,
பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின்
குடிமக்கள் தற்போது
சீனாவுக்கு
விசா இன்றி
பயணம் செய்ய அனுமதி பெற்றுள்ளனர்.

புதிய விதிமுறைகளின்படி,
பிரிட்டிஷ் குடிமக்கள்
வணிகம் மற்றும் சுற்றுலா பயணங்களுக்காக
30 நாட்கள் வரை
விசா இன்றி
சீனாவில் தங்கலாம்.

ஆனால்,
30 நாட்களுக்கு மேல்
தங்க திட்டமிடுவோர்,
முன்னதைப் போலவே
விசா பெற்ற பின்னரே
பயணம் செய்ய வேண்டியிருக்கும்.

இந்த விசா இன்றி பயணிக்கும் நடைமுறை
எப்போது தொடங்கும் என்பது குறித்து
இதுவரை
துல்லியமான தேதி
அறிவிக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பை வெளியிட்டபோது,
பிரதமர் கியர் ஸ்டார்மர் கூறியதாவது,

“உலகின் முக்கிய பொருளாதார சக்திகளில் ஒன்றான
சீனாவில்
தங்களின் வணிகத்தை விரிவுபடுத்த
பல நிறுவனங்கள்
நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகின்றன.

குறுகிய கால பயணங்களுக்கான
விசா விதிகளை தளர்த்துவதன் மூலம்,
அவர்களுக்கு அது எளிதாக்கப்படும்.
இதன் மூலம்
வெளிநாடுகளில் வளர்ச்சியை ஆதரிப்பதோடு,
உள்நாட்டில்
வேலைவாய்ப்புகளும்
பொருளாதார வளர்ச்சியும்
உருவாகும்”
என்று அவர் தெரிவித்தார்.

31/01/2026

வீடுகளுக்கு உணவு விநியோகம் செய்யும் பணியின் போது,
பொதுமக்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட
ஒரு டெலிவரி ஓட்டுநருக்கு
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

47 வயதான சேதுபதி பெரியசாமி,
பொதுமக்களிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட
ஐந்து குற்றச்சாட்டுகளில்
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதைத் தொடர்ந்து,
ஆறு மாதங்கள் சிறைத் தண்டனைக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளார்.

தேம்ஸ் வேலி போலீசார் வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த ஆண்டு மார்ச் 8 முதல்
மே 11 வரை,
சேதுபதி பெரியசாமி
உணவு விநியோக ஓட்டுநராக பணியாற்றி வந்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலகட்டத்தில்,
விண்ட்சர் பகுதிகளில்
பல முகவரிகளுக்கு சென்றபோது,
அவர் பொதுமக்களிடம்
அநாகரிகமாக நடந்துகொண்டதாக
கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில்,
கடந்த ஆண்டு மே 16-ஆம் தேதி
அவர் கைது செய்யப்பட்டதாகவும்,
அடுத்த நாளே
அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும்
நீதிமன்றத்தில்
தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த
சிஐடி பிரிவைச் சேர்ந்த
கான்ஸ்டபிள் ஆஷ்லி ஜோன்ஸ் கூறியதாவது,
“இந்த குற்றச்செயல்களால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு
கடுமையான மனஅழுத்தம் ஏற்படுகிறது.
குற்றவாளியை நீதியின் முன் கொண்டு வர
முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது”
என்று தெரிவித்துள்ளார்.

மேலும்,
பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்கள்
போலீசை அணுகினால்
முழு ஆதரவு வழங்கப்படும் என்றும்
தேம்ஸ் வேலி போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து,
சேதுபதி பெரியசாமிக்கு
ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன்,
அடுத்த பத்து ஆண்டுகளுக்கு
பாலியல் தீங்கு தடுப்பு உத்தரவு
(Sexual Harm Prevention Order)
விதிக்கப்பட்டுள்ளது.

29/01/2026

தேவையான உரிமம் இன்றி, எம்.கே. நகர சபை (MK City Council) வழங்கிய Private Hire வாகனத்தை ஓட்டிய நிலையில் பிடிபட்டதைத் தொடர்ந்து, கிளாஸ்கோவைச் சேர்ந்த ஒரு பெண் மீது வழக்குத் தொடரப்பட்டது.

Wolverton ல் வழக்கமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த உள்ளூர் டாக்ஸி அமுலாக்க அதிகாரிகள், எம்.கே. நகர சபை உரிமம் பெற்ற ஒரு வாகனம் ஷாப்பிங் பகுதிக்குள் நுழைவதை கவனித்தனர்.

அதிகாரிகள் ஓட்டுநரை அணுகியபோது, ஃபோஸியா நூரீன் என்ற அந்த பெண்ணால் தனியார் வாடகை ஓட்டுநர் அடையாள அட்டையை (badge) காட்ட முடியவில்லை.

பின்னர் நகர சபை நடத்திய விசாரணையில், அவர் தனியார் வாடகை ஓட்டுனர் உரிமம் பெறாதவரும், அந்த வாகனத்தை ஓட்டுவதற்கான காப்பீடும் இல்லாதவரும் என்பது உறுதியாகியது.

சரியான உரிமம் இன்றி உரிமம் பெற்ற வாகனத்தை ஓட்டியதன் மூலம், தன்னை அங்கீகரிக்கப்பட்ட தனியார் வாடகை ஓட்டுநர் என பொதுமக்களை நம்பச் செய்ததாகவும் தெரியவந்தது.

இந்த சம்பவம் அக்டோபர் 2024-ல் நடைபெற்றது. தற்போது, மில்டன் கீன்ஸ் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், உரிமம் இன்றி தனியார் வாடகை ஓட்டுநராக செயல்பட்டதற்கும், காப்பீடு இன்றி வாகனம் ஓட்டியதற்கும் மிஸ் நூரீன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அவருக்கு £699 அபராதம்ம் விதிக்கப்பட்டதுடன், அவரது ஓட்டுநர் உரிமத்தில் ஆறு தண்டனை புள்ளிகள் (penalty points) சேர்க்கப்பட்டன.

29/01/2026

போலீஸார் சிப்ஸ் மற்றும் இனிப்புகள் விட்டுச் சென்ற தடயத்தைப் பின்தொடர்ந்து, லாரியின் பின்பகுதியிலிருந்து திருடிய குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி 27) Blechleyல் சாலையில் தடுமாறிக்கொண்டிருந்த ஒரு ஆணை போலீஸ் அதிகாரிகள் கவனித்தனர்.

அவரின் பின்னால் சிப்ஸ் மற்றும் இனிப்புகள் சிதறிக்கிடந்த தடயத்தையும் அவர்கள் பார்த்தனர். அந்த தடயம், இரவு நேரத்தில் சரக்கு இறக்கிக் கொண்டிருந்த ஒரு லாரி வரை சென்றது.

அவர் திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அதிகாரி அந்த நபரை நிறுத்தி விசாரித்தார்.

தேம்ஸ் வேலி போலீஸ் பேச்சாளர் கூறியதாவது:
“விசாரணையில், லாரி ஓட்டுநர் சரக்குகளை இறக்கிக் கொண்டிருந்தபோது, அந்த நபர் பல்வேறு பொருட்களை தானாக எடுத்துக்கொண்டது உறுதியாகியுள்ளது….

“அவர் திருட்டு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அதோடு, துரதிருஷ்டவசமாக, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதற்காக (Failing to Appear at court) ஏற்கனவே தேடப்பட்டவராகவும் அவர் இருந்தார்.”

புதன்கிழமை (ஜனவரி 28) அன்று, திருட்டு குற்றச்சாட்டிற்கும் நிலுவையில் இருந்த கைது உத்தரவிற்கும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டார்.

26/01/2026

மில்ரன் கீன்ஸில் வழி கேட்டதாக அணுகிய பின்னர், இளம் பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானார்; உடனடியாக உதவிக்கு ஓடிய ஒரு பெண் சம்பவத்தைத் தடுத்தார்.

மில்ரன் கீன்ஸில் நடைப்பயிற்சியில் இருந்த ஒரு இளம்பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக, காவல்துறை சாட்சிகளை முன்வருமாறு கேட்டுக்கொள்கிறது. குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண் உதவிக்காக கூச்சலிட்டதை கேட்டு அவருக்கு உதவிய ஒரு பெண்ணிடம் இருந்து தகவல் கிடைக்கலாம் என காவல்துறை நம்புகிறது.

சனிக்கிழமை, ஜனவரி 17 அன்று மாலை சுமார் 5 மணியளவில், அந்த இளம்பெண் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு நபர் வழி கேட்பதற்காக அவரை அணுகினார். பின்னர் அவர் அவளை பொருத்தமற்ற முறையில் தொட்டார்.

பாதிக்கப்பட்ட இளம்பெண் கூச்சலிட்டதை அடுத்து, அருகிலிருந்த ஒரு வீட்டிலிருந்து ஒரு பெண் வெளியே வந்து உதவினார். விசாரணைக்கு உதவும் தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும் என்பதால், அவருடன் பேச காவல்துறை விரும்புகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரி கூறியதாவது:
“இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் அல்லது விசாரணைக்கு உதவும் எந்த தகவலையும் கொண்டிருப்பவர்கள், தயவுசெய்து Thames valley காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.”

23/12/2025

மில்ரன் கீன்ஸில் ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய நபரைக் கண்டறிய போலீசார் தேடுதல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் சந்தேகத்திற்கிடமான நபரின் முக உருவப்படம் (e-fit) வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு இளம்பெண் நவம்பர் 11ம் தேதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கும் 1.55 மணிக்கும் இடையில் *Granby Court* நோக்கி நடந்துச் சென்றபோது, ஒரு ஆண் நபர் அவளிடம் நெருங்கி, பொருத்தமற்ற கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர் அவரை விலகச் சொல்லியுள்ளார்.

அதன் பிறகு, அந்த நபர் அவளது உடல் மேல் தகாத வகையில் தொட முயற்சித்துள்ளார். இந்த சம்பவம் *Redmoor Bridge* மற்றும் *Granby Court* இடையே இடம்பெற்றுள்ளது.

போலீசார் சந்தேக நபரின் e-fit (முக உருவப்படம்) ஒன்றை வெளியிட்டுள்ளனர். அவர் *வெள்ளை இனத்தைச்* சேர்ந்தவர், பெரிதான உடல் அமைப்புடையவர், உயரம் சுமார் 5 அடி 7 அங்குலம், வட்டமான முகம் கொண்டவர் என விவரிக்கப்படுகிறார்.

விசாரணை அதிகாரி PC Alex Qerreti கூறியதாவது:

“இந்த முக உருவப்படத்தில் உள்ள நபரை யாராவது அடையாளம் காண்கிறீர்கள் என்றால் தயவுசெய்து எங்களை தொடர்புகொள்ளுங்கள். மேலும், இந்த சம்பவத்தை யாராவது நேரில் பார்த்திருந்தால், அவர்களும் தகவல் வழங்க வேண்டும்.”

*தகவல் இருப்பின், 101 என்ற எண்ணிற்கு அழைத்து, குறிப்பு எண் 43250576338 குறிப்பிடவும்.*

23/12/2025

மில்ரன் கீன்ஸில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் ஒருவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்துல்லா யூசுப் (வயது 23), பிளெட்ச்லியில் உள்ள Galapagos Grove என்ற பகுதியில் வசித்து வருகிறார். கடந்த டிசம்பர் 16ஆம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.

அவர்மீது டிசம்பர் 22ஆம் தேதி கீழ்க்கண்ட பயங்கரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன:

தடைசெய்யப்பட்ட அமைப்பான இஸ்லாமிக் ஸ்டேட்டின் உறுப்பினர் என்பதற்கான ஒரு குற்றச்சாட்டு (Terrorism Act 2000 இன் பிரிவு 11ன் கீழ்).

- பயங்கரவாதச் செயல்களுக்கு பயன்படக்கூடிய தகவல்களைக் கொண்டிருப்பது தொடர்பான ஒரு குற்றச்சாட்டு (Terrorism Act 2000 இன் பிரிவு 58ன் கீழ்).

பயங்கரவாதத் தொடர்புடைய வெளியீடுகளை பரப்பியதாக நான்கு குற்றச்சாட்டுகள் (Terrorism Act 2006 இன் பிரிவு 2ன் கீழ்).

மத்திய கிழக்கு வம்சாவளியைக் கொண்ட யூசுப் தற்போது காவலில் வைத்து, இன்று டிசம்பர் 23, வெஸ்ட்மின்ஸ்டர் மகிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இந்த கைது மற்றும் குற்றச்சாட்டுகள், தெற்கு கிழக்கு பகுதி பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டன.

Photos from Milton Keynes Tamil News's post 23/12/2025

Want your school to be the top-listed School/college in Milton Keynes?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Milton Keynes
Milton Keynes

Opening Hours

9:45am - 12:30pm